Friday, November 21, 2008

இல்லாத நடிகையின் பொல்லாத நாய்.

அந்த நடிகை நாய் வாங்கிய செய்தி எப்படியோ நிறைய பேருக்கு தெரிந்து இருந்தது.

ஊரெல்லாம் இந்த நடிகை வாங்கிய அந்த நாய் இப்போது வளர்ந்து பெரிதாகி அதன் மதிப்பு கூடிவிட்டது பற்றியே பேச்சு.

ஒரு பிரபலமான நாய் வியாபாரி நடிகையின் நாய் விற்பனைக்கு வந்து இருக்குது அப்படின்னு அறிவித்தார், நாய் வியாபாரியின் மேல் உள்ள நம்பிக்கையை விட நடிகை வளர்த்த நாய் என்றவுடன் நல்ல விலைக்கு நாய் விற்கப்பட்டது.

நாய் வாங்கியவர் பணத்தை கொடுத்தார், நடிகை எப்படி இருக்காங்க அப்படின்னு விசாரித்தார் நாய் கூடிய விரைவில் டெலிவரி செய்யப்படும் என்பதை ஏற்று அதற்கான ரசீதை வாங்கிக்கொண்டு சென்றார்.

இதற்கிடையில் நடிகையின் நாயை வாங்கிய ரசீதை ஒரு பிரபல வங்கியிடம் நடிகையின் நாய் டாகுமென்ட் என்று சொல்லி வாங்கிய விலையை விட ஏழு மடங்கு அதிகம் விலைக்கு அடகு வைத்தார்.

பிரபல வங்கியிடம் நடிகையின் நாய் அடகு பத்திரம் உள்ளதை கேள்விப்பட்டு வெளிநாட்டு வங்கிகள் அதில் முதலீடு செயதது.

வங்கி செய்யும் முதலீட்டை பார்த்து அதுவும் நடிகையின் நாய் என்றவுடன் பொதுமக்களும் வங்கியின் மேல் உள்ள நம்பகத்தன்மையால் முதலீடு செய்தனர்.

அந்த நாய் அடகுப்பேப்பரின் மேல் காப்பீடு எடுத்து அதை 15 பேருக்கு 30 மடங்கு அதிக விலைக்கு விற்றனர்.இல்லாத அந்த நடிகையின் பெயரை சொல்லியே அந்த இல்லாத பொல்லாத நாயை பல கோணங்களில் வியாபாரம் செய்தனர்.

வங்கியிடம் நாயை அடகு வைத்தவர் பணமே கட்டவில்லை, வங்கி திவாலானது, பொதுமக்களும் திவால் ஆனார்கள்

ஏன் இப்படி ஆனது

தலைப்பை ஒருமுறை மீண்டும் படியுங்கள்.

பிகு: சத்யம் கம்யூட்டர்ஸ் செயத ஊழல் செய்தியை பார்த்தவுடன் மறுபதிவிடும் எண்ணம் தோண்றியது

பி:கு: ஒரு தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு முதலாளித்துவத்தை நம்பும் நான், முதலாளித்துவத்தில் உள்ள ஊழல்களை விமர்சனம் செய்ய ஒரு சிறு முயற்சி.

முதலாளித்துவம் வெளிப்படையாக செயல்பட்டிருந்தால்,சரியான வளர்ச்சி பாதையில் சென்றிருக்க கூடும். முதலாளித்துவம் சுய விமர்சனம் செய்து தன்னை தானே திருத்திக்கொண்டு பொதுமக்களுக்கு எப்போதும் போல் பலனளிக்கும் என நம்புவோம்.

49 comments:

Nilofer Anbarasu said...

செம்ம சூப்பர்.... இவ்வளவு அருமையான விஷயத்தை போய் மொக்கைன்னு Label போட்டு இருக்கீங்க.

நசரேயன் said...

உருப்படியான விஷயம் குடுகுடுபையார். உங்களை மாதிரி படிச்ச, என்ன மாதிரி மாடு மேய்க்கிறவன் எல்லாருக்கும் புரியும் படிய எழுதி இருகீங்க.

தொடர்ந்து இதை மாதிரி எழுதனுமுன்னு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

நந்து f/o நிலா said...

வாவ் பொளந்து கட்டீட்டீங்க...

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா
// செம்ம சூப்பர்.... இவ்வளவு அருமையான விஷயத்தை போய் மொக்கைன்னு Label போட்டு இருக்கீங்க.//

மொக்கையா சொல்ல நினைச்சேன், மத்தபடி எனக்கு பொருளாதார அறிவு கொஞ்சம் கூட இல்லைங்க

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நல்ல படைப்பு....

வருங்கால முதல்வர் நல்ல தலைப்பு...

அமுதா said...

நல்ல விளக்கம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

:)))

பழமைபேசி said...

அபாரம்...

சந்தனமுல்லை said...

செமையா இருக்கு!!
:-))

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்

//உருப்படியான விஷயம் குடுகுடுபையார். உங்களை மாதிரி படிச்ச, என்ன மாதிரி மாடு மேய்க்கிறவன் எல்லாருக்கும் புரியும் படிய எழுதி இருகீங்க.

தொடர்ந்து இதை மாதிரி எழுதனுமுன்னு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்//

இப்ப இதுவரைக்கும் நான் எழுதுனதெல்லாம், உங்களோட வஞ்சப்புகழ்ச்சி தாங்க முடியலப்பா?

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நந்து f/o நிலா

// வாவ் பொளந்து கட்டீட்டீங்க..//

கருத்துக்கு நன்றி, அடிக்கடி வாங்க

நசரேயன் said...

/*இப்ப இதுவரைக்கும் நான் எழுதுனதெல்லாம், உங்களோட வஞ்சப்புகழ்ச்சி தாங்க முடியலப்பா? */
இது உள்ளதை உள்ளபடி சொல்லும் உண்மை அணி :)

thamizhparavai said...

ண்ணா...பின்னிட்டீங்ண்ணா....

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்....

குடுகுடுப்பை said...

வாங்க சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)

//நல்ல படைப்பு....
நன்றி

வருங்கால முதல்வர் நல்ல தலைப்பு...//

எல்லாம் ஒரு யாவார உத்திதான்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி அமுதா

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி VIKNESHWARAN

குடுகுடுப்பை said...

வாங்க பழமைபேசி

அபாரம்...

/
அடுத்தது நீங்கதான் போடனும்
/

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனமுல்லை

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்ப்பறவை

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி T.V.Radhakrishnan

அது சரி said...

அந்த நடிகை குடுகுடுப்பையாரோட நெருங்கிய ஃபிரண்டாமே?? உண்மையா?

நசரேயன் said...

/*
அந்த நடிகை குடுகுடுப்பையாரோட நெருங்கிய ஃபிரண்டாமே?? உண்மையா?


*/
அந்த பிரபலமான நாய் வியாபாரி குடுகுப்பையாரோ என்ற அய்யம்?
உண்மை வரவில்லை என்றால் F.B.I விசாரணைக்கு அழைப்பு விடப்படும்

குடுகுடுப்பை said...

//அந்த நடிகை குடுகுடுப்பையாரோட நெருங்கிய ஃபிரண்டாமே?? உண்மையா?//

//அந்த பிரபலமான நாய் வியாபாரி குடுகுப்பையாரோ என்ற அய்யம்?
உண்மை வரவில்லை என்றால் F.B.I விசாரணைக்கு அழைப்பு விடப்படும்//

உட்கட்சி துரோகம். வருங்கால முதல்வர் மீது அவதூறு.

உண்மையா சொன்ன அந்த காப்பீட்ட வாங்கின 30 பேருல நான் ஒருத்தன்.

சின்னப் பையன் said...

சூப்பர்...

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
//அந்த நடிகை குடுகுடுப்பையாரோட நெருங்கிய ஃபிரண்டாமே?? உண்மையா?//

//அந்த பிரபலமான நாய் வியாபாரி குடுகுப்பையாரோ என்ற அய்யம்?
உண்மை வரவில்லை என்றால் F.B.I விசாரணைக்கு அழைப்பு விடப்படும்//

உட்கட்சி துரோகம். வருங்கால முதல்வர் மீது அவதூறு.

உண்மையா சொன்ன அந்த காப்பீட்ட வாங்கின 30 பேருல நான் ஒருத்தன்.

//

முப்பது கோடி காப்பீடு வித்துட்டு, ஒரே ஒரு காப்பீடு வாங்கி, அதனால நானும் ஒரு பாதிக்கப்பட்டவன் என்று சொல்பவர்களின் உண்மையான முகத்தை அறிந்து கொள்வீர்!

நண்பர் குடுகுடுப்பையார் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கவில்லை. மறுக்கவும் இயலாது.. அந்த நடிகைக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? நாய் வியாபாரி இவரது பினாமி என்பது உண்மை தானா? காப்பீட்டு நிறுவனத்துடன் தனக்கு தொடர்பு உண்டு என்பதை இவரே ஒத்துக் கொண்டுள்ளார்! தொடர்பு மட்டுமா இல்லை உரிமையே இவர் தானா?

உட்கட்சி துரோகமா? எது? பொது நலனுக்காக, மக்களுக்காக உரிமைக் குரல் கொடுக்க அதுசரி என்றும் தயங்கியவனில்லை. இதை சரித்திரம் சொல்லும்..

மக்களின் கேள்விக்கு நாய் பத்திர மோசடி செய்த குடுகுடுப்பையார் உண்மையை சொல்லியே ஆக வேண்டும்.. உண்மை வெளிவ‌ரும் வ‌ரையோ இல்லை அதுச‌ரி முத‌ல்வ‌ராக‌ முடிசூட்டும் வ‌ரையோ இந்த‌ உரிமைக்குர‌ல் ஓயாது, ஒழியாது!

அது சரி said...

நாய் பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பையார் தனது வருங்கால முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உள்ள கிடட்கையாக, போராட்ட குரலாக உள்ளது..

பதவியை தூக்கி எறிந்து தனக்கு பதவி வெறும் தோள் துண்டே என்று தான் அடிக்கடி சொல்லி வருவதை குடுகுடுப்பையார் நிரூபிப்பாரா இல்லை தனது பதவி வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துவாரா?

தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது...

நாய் பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பையார்....

ஒழிக ஒழிக.....

மக்களின் காவலன் அதுசரி...

வாழ்க வாழ்க...

கறைபடாத் தமிழன் அதுசரி...

வாழ்க வாழ்க...

கயல்விழி said...

ரிசெஷனை இப்படி எல்லாம் விளக்க முடியுமா? அருமையான பதிவு குடுகுடுப்பை :)

நாநா said...

சில நாட்களுக்கு முன்னாடி எனக்கு ஆங்கிலத்தில் ஒரு குரங்கு கதை வந்தது இதே போல. சரி என தமிழில் படுத்தி வைத்திருந்தேன். ஆனா நான் பதியறதுக்குள்ளே பல இடங்கள்ல அதே பதிவு வேற வேற ரூபமா வந்திருச்சு.

ஆனா இந்த நடிகை, நாய் மேட்டர் ஒரிஜினல். நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நாய் பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பையார், பசுத்தோல் போர்த்திய புலி என்ற
உண்மையை தோலுரித்து காட்ட அனைவரையும் தொடர் பதிவு க்கு அழைக்க வேண்டும்

துளசி கோபால் said...

எதுக்கு இந்த சூப்பர் பதிவைக் 'குரை'ச்சுச் சொல்லி இருக்கீங்க மொக்கைன்னு:-))))

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி

// ரிசெஷனை இப்படி எல்லாம் விளக்க முடியுமா? அருமையான பதிவு குடுகுடுப்பை :)//

துக்ளக் மகேஷ் அவரால் முடிந்த மட்டும் நன்றாக விளக்கியிருக்கிறார். அது சரி அவர்கள் தனியாக ஒரு பதிவாக தெளிவாக விளக்க இருக்கிறார். என்னுடைய பதிவு ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு இந்த சூழலை எளிதாக புரிந்து கொள்ள ஒரு ஆரம்ப முயற்சி.

அது சரி நமக்கு தெளிவாக விரைவில் விளக்குவார்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்

// எதுக்கு இந்த சூப்பர் பதிவைக் 'குரை'ச்சுச் சொல்லி இருக்கீங்க மொக்கைன்னு:-))))//

குரைத்தது தெரிகிறது, நான் இதை மொக்கை என்றுதான் நினைத்தேன்.

குடுகுடுப்பை said...

//அது சரி said...

நாய் பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பையார் தனது வருங்கால முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உள்ள கிடட்கையாக, போராட்ட குரலாக உள்ளது..

பதவியை தூக்கி எறிந்து தனக்கு பதவி வெறும் தோள் துண்டே என்று தான் அடிக்கடி சொல்லி வருவதை குடுகுடுப்பையார் நிரூபிப்பாரா இல்லை தனது பதவி வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துவாரா?

தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது...

நாய் பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பையார்....

ஒழிக ஒழிக.....

மக்களின் காவலன் அதுசரி...

வாழ்க வாழ்க...

கறைபடாத் தமிழன் அதுசரி...

வாழ்க வாழ்க...//

உங்களின் கோரிக்கையை ஏற்று நான் எனது ராஜினாமா கடிதத்தை கடவுளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

எனினும் இன்று முதல்
நான்
முன்னால் வருங்கால முதல்வர் குடுகுடுப்பை

வாழ்க அது சரி மற்றும் நசரேயன்

குடுகுடுப்பை said...

//நாநா said...

சில நாட்களுக்கு முன்னாடி எனக்கு ஆங்கிலத்தில் ஒரு குரங்கு கதை வந்தது இதே போல. சரி என தமிழில் படுத்தி வைத்திருந்தேன். ஆனா நான் பதியறதுக்குள்ளே பல இடங்கள்ல அதே பதிவு வேற வேற ரூபமா வந்திருச்சு.

ஆனா இந்த நடிகை, நாய் மேட்டர் ஒரிஜினல். நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்//

இது ஒரிஜினல் இல்லை நான் புரிந்துகொண்ட விசயத்தை இந்த தலைப்பில் கொண்டு வரும் முயற்சி.

குடுகுடுப்பை said...

//நாய் பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பையார், பசுத்தோல் போர்த்திய புலி என்ற
உண்மையை தோலுரித்து காட்ட அனைவரையும் தொடர் பதிவு க்கு அழைக்க வேண்டும்//

நசரேயன் நீங்கள் வருங்கால முதல்வராக வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.

பாத்துருவோம் அது சரியா நீங்களான்னு.

முன்னால் வருங்கால முதல்வர்.

நசரேயன் said...

/*//நாய் பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பையார், பசுத்தோல் போர்த்திய புலி என்ற
உண்மையை தோலுரித்து காட்ட அனைவரையும் தொடர் பதிவு க்கு அழைக்க வேண்டும்//

நசரேயன் நீங்கள் வருங்கால முதல்வராக வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.

பாத்துருவோம் அது சரியா நீங்களான்னு.

முன்னால் வருங்கால முதல்வர்.
*/
உங்களோட தியாகத்தை மதித்து உங்களுக்கு "தியாக செம்மல்" என்ற அடைமொழி யை தருகிறோம்

Madhu Ramanujam said...

ஆஹா!!

குடுகுடுப்பை said...

வாங்க Madhusudhanan Ramanujam
// ஆஹா!!//

அடிக்கடி வாங்க வாக்குறுது நெறய தரோம்.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி

// ரிசெஷனை இப்படி எல்லாம் விளக்க முடியுமா? அருமையான பதிவு குடுகுடுப்பை :)//

துக்ளக் மகேஷ் அவரால் முடிந்த மட்டும் நன்றாக விளக்கியிருக்கிறார். அது சரி அவர்கள் தனியாக ஒரு பதிவாக தெளிவாக விளக்க இருக்கிறார். என்னுடைய பதிவு ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு இந்த சூழலை எளிதாக புரிந்து கொள்ள ஒரு ஆரம்ப முயற்சி.

அது சரி நமக்கு தெளிவாக விரைவில் விளக்குவார்.
//

ஆஹா, மாப்பு வச்சிட்டீங்களே ஆப்பு!

நான் ஒரு பதிவு போடவான்னு மகேஷ் அண்ணன்ட்ட ச்ச்சும்மா, வெளாட்டுக்கு கேட்டேன்..

குடுகுடுப்பை said...

//அது சரி
ஆஹா, மாப்பு வச்சிட்டீங்களே ஆப்பு!

நான் ஒரு பதிவு போடவான்னு மகேஷ் அண்ணன்ட்ட ச்ச்சும்மா, வெளாட்டுக்கு கேட்டேன்..//

நீங்கள் சீக்கிரம் வருங்கால முதல்வராகி
இந்த தளத்தில் உங்கள் பதிவை அளித்தால் நல்லா இருக்கும். இல்லாட்டி முரண்தொடையில விளக்குங்க, நாங்க தெரிஞ்சுக்க ஆசைப்படுறோம்.

குடுகுடுப்பை said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நானும் மறு பின்னூட்டம் போடுவேன்

வில்லன் said...
This comment has been removed by the author.
வில்லன் said...

எனக்கு தெரிஞ்சி இது யாரோட குற்றமும் இல்லை. மக்களே மக்களுக்கு எதிரி. செம்மறியாட்டு கூட்டம் மாதிரி (பழமை பேசி விளக்கம் போடுவார் அடுத்த பதிவில) ஒரேபக்கம் கண்ணமூடிட்டு போறது. அப்புறம் ஏதாவது அயிடுன்னா கத்த வேண்டியது.

பல்லுள்ளவன் பக்கடா தின்கிறான் (நசரேயன் பழமொழி. மீண்டும் பழமை பேசி விளக்கம் போடுவார்). ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பார்.. என்ன நான் சொல்லுறது சரிதானா?

புதியவன் said...

நல்ல பதிவு
ஆனா, ஏன் லேபில்ல மொக்கைன்னு
போட்டிருக்கீங்க...?

தமிழ். சரவணன் said...

அருமையாண கட்டுரை

Vidhoosh said...

/////நசரேயன் said...

/*இப்ப இதுவரைக்கும் நான் எழுதுனதெல்லாம், உங்களோட வஞ்சப்புகழ்ச்சி தாங்க முடியலப்பா? */
இது உள்ளதை உள்ளபடி சொல்லும் உண்மை அணி :)
////

அதே அணியில் உள்ள ஒரு கடைநிலை அடிப்பொடி... :))

vasu balaji said...

நேத்து இடுகையில் கேட்ட பழமையின் புகைப்படம் இதில இருக்கே. அப்ப அண்ணாச்சி ஃபோட்டொ உங்க ஃபோட்டோ எப்ப வரும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))