Wednesday, March 2, 2011

திமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி! சிக்கலுக்குத் தீர்வு!!

கொமுக-7; 
விசி-10;
உஉக-3;
முலீ-3;
பாமக்-31;

முமுக-1; 


ஆக மொத்தம் 55... 


மீதி 179; 


179ல 125 போக உங்களுக்கு 54 இருக்கு... 


வேணுமானா, எடுத்துக்க... என்னது? இன்னும் கூட்டிக் கொடுக்கணுமா?


சரி அப்ப,  எண்பதாவே வாங்கிக்க... ஆனா சூரியன்ல, உதயசூரியன்ல நிக்கணும். அதுவும் நாங்க சொல்ற ஆட்களையெல்லாம் நிறுத்தணும். மகிழ்ச்சிதானே?


அஞ்சு பேரும் வாங்க... நீங்களும் வாங்கப்பா... எல்லாரும் கைகோர்த்து உயர்த்திப் பிடியுங்க....

நாட்டுக்கு வளம் சேர்ப்போம்!
உறவுக்கு வலுச் சேர்ப்போம்!!
வாழ்க தலைவர்!
வளர்க அன்னை!!


உபாயம்: கு.ஜ.மு.க தலைவர்

Tuesday, November 2, 2010

இஸ்ரேல் , பால்ஸ்தீன சண்டை ஓயுமா?

இன்றைக்கு உண்மைத்தமிழன் மற்றும் டோண்டுவின் பதிவைப் படித்தவுடன், இஸ்ரேல் பற்றி நான் சந்தித்த சிரியாவைச் சேர்ந்த அரபி ஒருவரின் கருத்தைப் பகிர்ந்திட வேண்டுமென்று தோன்றியது, சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் சிரியாவைச் சேர்ந்த அந்த நபரை சந்தித்தேன். இருபத்து ஐந்து வயதுக்குட்பட்ட இளைஞன், சீனாவில் கட்டடவியல் மேற்படிப்பிற்காக வந்திருந்தார், தன்னை இறையச்சம் உள்ளவன் என்று பலமுறை அவர் பேச்சிலும் தெரிவித்துக்கொண்டார்.

அவர் கூறியது இஸ்ரேல் என்ற ஒரு நாடு அங்கு இருக்கவே கூடாது, அது அவர்களுக்கு சொந்தமானதல்ல,அரபிகளுக்கு சொந்தமானது அவர்கள் கொல்லப்படும்/விரட்டப்படும் வரை அதன் மீதான போர் தொடரும். இப்படிப்பட்ட மனநிலையில் தான் அங்கிருக்கும் அரேபியர்கள் அனைவரும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இஸ்லாமிய வரலாறுகளில் யூதர்கள் அந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்ததும், அவர்கள் குரங்குகளாக மாற்றப்படுவார்கள் என்றெல்லாம் இணையத்தில் ஆங்காங்கே படித்திருக்கிறேன்.(குரான், ஹதீஸ் போன்ற ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை), இதன் மூலம் என் சிற்றறிவுக்கு புலப்படுவது யூதர்களும், அரேபியர்களும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கமுடியும்.

யூதர்களும் இரண்டாயிரம் ஆண்டுகளாக துரத்தப்பட்டு எப்படியோ, இஸ்ரேல் என்ற நாட்டை தங்களுக்காக உருவாக்கி இருக்கிறார்கள், இஸ்ரேலின் இருப்பை அரேபியர்களும் , பாலஸ்தீனத்தின் இருப்பை இஸ்ரேலும் அங்கீகரிக்காத வரை அங்கே போர் ஒயப்போவதில்லை, இஸ்ரேல் தனியாக அத்தனை எதிரிகளை தாக்குப்பிடிக்க முடியாது,அவர்கள் தங்களுடைய அறிவைப் பயன்படுத்தி அவைகளை தாக்குப்பிடிக்கும் நண்பர்களை உருவாக்கிக் கொண்டார்கள்,கிட்டத்தட்ட இதே நிலையில் இருக்கும் ஈழத்தமிழர்கள் நண்பர்கள் யாரையுமே உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் என் புரிதல்.

ஆபிரகாமிய மதங்களுக்கிடையேயான ஆதிக்கப்போட்டியாக இச்சண்டை வலுப்பெறலாம், எல்லாவற்றையும் அழித்துவிட்டும் போகலாம், இழப்பின் வலி தெரிந்தவர்கள் மூலமாக சமாதான நிலையையும் அடையலாம்.டாட்டா போன்ற அறிவு ஜீவிகளை உலகுகுக்கு தந்த பாரசீகத்திலிருந்து மாற்றங்கள் உருவாகும் என் மனதில் அடிக்கடி தோன்றும்.

ஒரு கல்லூரி விழாவில் முதல் பரிசு வாங்கிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

"ஓ மேற்காசியாவே
நீ மதங்களை தொற்றுவித்து
மனிதர்களை
மிருகங்களாக்கி விட்டாய்"

ஆனாலும் இயல்பில் கடவுளோ/மதமோ இல்லாமல் மனிதன் வாழப்போவதில்லை, சூபிஸம் போன்ற ஆன்மீக வழிமுறைகள் அரபு நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு மதத்தை அரசியலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் ஏற்பட்டு நிலைமை மாறினால்தான் உண்டு.

Monday, November 1, 2010

இரசித்தலால் இரசிப்பு!

கனிதர வரா
காய்கனியாக் கனிமையில்
கண்களால் கண்டு
கரிய காருண்ய
கனியாள் மண்டு
சிதையாச் சிற்பத்தின்
அங்கமது தங்கமெனச்
செதுக்கிய சிலையொன்று
தரணியின் எழிலென
கண்டவர் களிக்க
பொன்மானின் புள்ளிகளாய்
உளியின் நுட்பமதில்
வடித்துச் சிரிக்கும் சிற்பி!

அசல் இங்கே...

Thursday, September 23, 2010

கோழி

கொழுப்பேறிய
கோழியொன்றின்
கழுத்து தொடை
இடை இறக்கை இரைப்பை
நெஞ்சு தலை போன்று
பரிமாணம் பல கொண்டாலும்
சட்டியொன்றின் மீது
எண்ணெயிலோ
தண்ணீரிலோ
ஆவியிலோ
வெந்தும் தீய்ந்தும்
அடுப்பு வலயம்
தாண்டி
தட்டில் விழுந்தவுடம்
தீஞ்ச பாகம் உதிர்ந்தாலும்
கழுத்தின் வளைவுகள்
நிமிர்ந்திருந்தாலும்
கோழி...
குவாட்டரோடுதான்
உண்ணப்படுகின்றன..

Friday, March 19, 2010

பாசத் தலைவனுக்கு பிறந்தநாள்

இன்று பிறந்த நாள் காணும் 

தி.கு.ஜ.மு.கழகத் தலைவரும் 


எங்களின் அன்புக்குரிய 


அண்ணனுமாகிய குடுகுடுப்பை 


அவர்களை வாழ்த்த வயதில்லாததால் 


வணங்குகிறோம்.

இவண்
முகிலன், தலைவர், இலக்கிய அணி
நசரேயன், செயலாளர், கள்ளக் காதலர் அணி
வானம்பாடிகள், தலைவர், மாணவரணி
அதுசரி, தலைவர், சட்ட அணி
எம்.எம்.அப்துல்லா, தலைவர், குழந்தைகள் அணி
வில்லன், பொருளாளர்

இலக்கிய அணி சார்பில் பாசத்தலைவனுக்கு பிறந்த நாள் விழா எதிர் வரும் சனி மாலை நடைபெறும். இடமும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும். பொருளாளர் வில்லன் அவர்கள் விழாவுக்கு ஆகும் செலவுக்கு வசூலை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சட்ட அணித்தலைவர் உப்புக்கண்ட மாலைக்கு ஏற்பாடு செய்வார் என்று தெரிகிறது.

Friday, March 12, 2010

அமெரிக்கா: செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் பதிவர் சந்திப்புக்கான அழைப்பு


Florida மற்றும் Boston பதிவர் சந்திப்பு முடிச்ச கையோட, Washington D.C பதிவர் சந்திப்புக்கான ஆயத்த வேலைகள் மக்களே!


செந்தமிழ்க் காவலர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிறையப் பதிவர்கள் விழா அரங்கில் குழும இருக்கிறார்கள். எனவே வர வாய்ப்பு இருப்போர், அவசியம் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

=====================================



புறநானூற்றுக் கருத்தரங்கம்

செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா

தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு பிறபகல், கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்


1.30 - 2.00
அளவளாவுதல்
2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து


2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்

2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்
முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ

2.35-3.00
புறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம்
முனைவர் இர.பிரபாகரன்
3.00-3.25
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்
உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.

3.25-3.40
புறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார்
முனைவர் இ.மதியழகி

3.40-4.00
தேனீர் இடைவேளை

4.00-4.15
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
முனைவர் அரசு செல்லையா அவர்கள்

4.15-4.30

தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்
பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்

4.30-5.30
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)

கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்
பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்
இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்

5.30-5.35
நன்றி நவிலல்
திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்



அனைவரும் வருக!
ஆதரவு தருக!!

Monday, January 4, 2010

விருதுநகர் மாவட்டம் - பகுதி 4

போன பதிவுல அருப்புக்கோட்டையப் பத்தி எழுதறப்ப கொஞ்சம் மேட்டர விட்டுட்டேன். வேணுன்னே கொஞ்சத்தயும் தெரியாமக் கொஞ்சத்தயும்.


எதுக்குடா இவன் வேணுன்னே விட்டானு நெனக்கிரீகளா? பொறவு என்ன, அருப்போட்ட நாந்தவந்து பழகுன ஊரு. அதப் பத்தி நாம்பாட்டுக்கு பேசிட்டே போவேன். மத்த ஊரப்பத்தி இதே மாரி எழுதுரான்னு யாராவது சொல்லிப்புட்டா? சரக்குக்கு நான் எங்க போவேன்?


முக்கியமான இந்த விசயத்தப் பத்தி மட்டுஞ்சொல்லிக்கிறேன். அருப்போட்டயில மூணு பாச பேசுறவுக சமமான அளவுல இருக்காகளாம். தமிழு, கன்னடம் அப்புறம் தெலுங்கு. இது மாதிரி ஊரு தமிழ்நாட்டுல வேற எங்கயும் இல்லயாம். 


இப்போ அருப்போட்டையில இருந்து ஒம்போதாநம்பரு பஸ்ஸு பிடிச்சி விருதுநகருக்குப் போவோம். விருது நகருதான் விருதுநகரு மாவட்டத்துக்கு தல (அசித்து இல்ல) நகரமாம். எப்பிடி சொல்ரன்னு கேக்குறீகளா? கலெட்டராபீசு இங்கன தான இருக்கு. (அங்க இருக்குற கோட்டர்சுல ஒரு ஏழு வருசம் இருந்தம்ல) 


விருதுநகருக்கு பழய பேரு விருதுபட்டியாமா. நம்ம காமராசு நாடாருதே அத விருதுநகருன்னு மாத்தினாராம். தங்கமான ஆச்சியக்(ஆட்சி) குடுத்த மனுசருல்ல அவரு. அவரால விருதுநகருக்குப் பெரும. 


விருதுநகருக்கு இந்தப் பேரு எப்பிடி வந்திச்சின்னு எனக்குத் தெரியல. யாராவது தெரிஞ்சவிங்க சொல்லுங்க. பொறவு, விருதுநகருன்னாலே ஞாபகம் வர்றது யாவாரந்தேன். 


ரொம்ப காலமாவே விருதுநகரு யாவாரத்துக்கு பேமசு. இல்லைன்ன மருதகாசி 
“விருதுநகர் யாவாரிக்கு செல்லக்கண்ணு நீயும் வித்துப்போட்டு காச வாங்கு செல்லக்கண்ணு”ன்னு பாடியிருப்பாரா?


மொளகாவுல இருந்து எள்ளு வரைக்கும் இங்க விக்கிறாய்ங்க. விக்கிறதுன்னா சில்லற யாவாரமில்லப்பு. மண்டின்னு சொல்லுவாய்ங்கல்ல, மொத்த யாவாரம். ஆனா விருதுநகருல எதுவுமே வெளயறது இல்ல. வெளயற எடத்துல இருந்து இங்க வந்து வாங்குற எடத்துக்கு எக்ஸ்போர்ட்டு பண்ணுராய்ங்க. 


இங்க இருக்குற மண்டிகளுக்குப் போயி பாத்தீகன்னா, பாக்க சாதரணமா அழுக்கு பனியனும் வேட்டியும் கட்டிட்டு திண்ணைல உக்காந்து பெரிய பொத்தகத்துல கணக்கு எழுதிட்டு இருப்பாய்ங்க. அவிங்க வீட்டுக்குப் போய் பாத்தீங்கன்னா பென்ஸ்காரு நின்னுட்டு இருக்கும். அம்புட்டு சிம்பிளாயிருப்பாய்ங்க.


விருதுநகருல நாடார் ஆளுங்கதான் சாஸ்தி. அவிங்க விருதுநகர் ஊரு வளர்ச்சிக்கு செஞ்ச காரியங்களப் பத்திப் பேசாம விருதுநகரப் பத்தி எதாவது சொல்ல முடியுமா?


விருதுநகரு யாவார மய்யமானதுக்குக் காரணமே இவிங்க தான். யாவாரம் பண்றதுக்கு விருதுநகருக்கு வந்து அப்பிடியே குடும்பம் கொழந்த குட்டினு பெருக ஆரம்பிச்சாய்ங்க. அப்போ அங்க இருந்த ஒரு சில கோவிலுகள்ல் வழக்கம்போல இவிங்கள உள்ள விடல. அதுனால ஊர் கூடிப் பேசி முடிவு பண்ணி இவிங்களுக்குன்னே ஒரு மாரியம்மங்கோவிலு கட்டலாமுன்னு சமுதாயக்கூட்டம் போட்டு முடிவு பண்ணாய்ங்க. காசுக்கு என்ன பண்றது? ஒவ்வொருத்தரும் வீட்டுல சமைக்க அரிசி களையறதுக்கு முன்னால ஒரு கை அரிசி எடுத்து ஒரு கூடைல போட்டு வச்சிரணும். வாரக்கடைசில ஊர்ல் இருந்து ஆளுக வந்து அந்தக்கூட அரிசிய எல்லா வீட்டுல இருந்தும் வாங்கிட்டுப் போயி வித்துக் காசாக்கிக்குவாய்ங்க. அப்பிடி காசு சேத்து மாரியம்மங்கோவிலு ஒண்ணயும் கட்டிட்டாங்க.


யாவாரம் கொஞ்சங்கொஞ்சமா பெருசாயி வெளிமாநிலம் வெளிநாட்டுக்கெல்லாம் யாவாரஞ்செய்ய ஆரம்பிச்சாய்ங்க. இதுல இவுகளுக்கு தமிழ் தவிர வேற பாச தெரியாததால அடுத்தவுகள, குறிப்பா பிராமணவுகள நம்ப வேண்டியிருந்திச்சி. எதுக்குடா அடுத்த சனத்த நம்பனும், நம்ம பயலுவளயே படிக்க வெக்கலாமுன்னு பள்ளிக்கோடம் கட்டலாமுன்னு முடிவு பண்ணாக. காசு? மறுபடி பிடியரிசி தான். அப்பிடிக் கட்டின பள்ளிக்கோடந்தான் K.V.S ஹையர் செகண்டரி ஸ்கூல். அந்தப் பள்ளிக்கோடத்தோட லோகோ கூட பிடியரிசிதான்னா பாத்துக்குங்களேன்.


இந்த மாரியம்மங்கோவில் பங்குனித் திருவிழா ரொம்ப விசேசம். அந்த சமயத்துல காமராஜ் வித்யா சாலா பள்ளிக்கோட மைதானத்துல பொருக்காச்சி நடக்கும். சுத்துப்பத்து ஊர்ல இருந்தெல்லாம் வந்து பாத்துட்டுப்போவாய்ங்க. 


திருவிழால உச்சக்கட்டம் தீச்சட்டி எடுக்குறது. எல்லா சாதிக்காரவுகளும் இதுல கலந்துக்குவாயங்க. சட்டி எடுத்துட்டு ஊரெல்லாம், குறிப்பா கடைத்தெருவெல்லாம் சுத்தி கடைசியில கோவில்ல வந்து சட்டிய படச்சிட்டு தீ மிதிப்பாய்ங்க. 


இந்த திருவெளாவுக்கு ஒரு முக்கியமான பேக்கிரவுண்டு இருக்கு. நாடார் சமூகத்துக்காரவிங்களுக்கு இந்த பொண்ணு பாக்க வீட்டுக்கு வாரது, வந்து பச்சியும் சொச்சியும் மொக்கிட்டு வீட்டுக்குப் போய் கடுதாசி போடுதோம்னு சொல்லிட்டுப் போறதுல எல்லாம் நம்பிக்கை இல்ல. ஆடு மேச்சா மாரியும் இருக்கனும், அண்ணனுக்கு பொண்ணு பாத்தா மாரியும் இருக்கணுங்கிற மாதிரி, இந்தத் திருவெளாவுல, சட்டி எடுக்குற அன்னிக்கு ஒவ்வொரு கடைக்காரவுகளும் அவிங்க வீட்டு பொண்ணுகளுக்கு நல்லா அலங்காரம் பண்ணி, நகையெல்லாம் போட்டு, கடை வாசல்ல சேரப் போட்டு சட்டி பாக்குறா மாரி உக்காந்துக்குவாய்ங்க. கல்யாண வயசுல இருக்குற எளந்தாரிப் பசங்க சட்டி எடுத்துட்டுப் போறவுக பின்னாடி போற மாதிரி பொண்ணு பாத்துக்குவாய்ங்க. எதாவது பொண்ணு பிடிச்சிருந்தா, அப்பன் ஆத்தாக்கிட்ட அந்தக் கடைப் பேரச் சொல்லி அந்தப் பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிருவாய்ங்க. அவிங்களும் அந்தப் பொண்ணு குடும்பத்துக்கிட்டப் பேசி ஒத்து வந்துச்சின்னா கல்யாணம் பேசிருவாய்ங்க. பங்குனில திருவிழா நடந்துச்சின்னா வைகாசி ஆவணி மாசத்துல நெரய கல்யாணம் அமஞ்சிரும். 


என்னடா இவன் நாடாருகளப் பத்தி மட்டுமே பேசிட்டு இருக்கானே, வேற சமூகத்துக்காரவிங்களே இல்லியா இங்கன்னு நீங்க நெனக்கிரது கேக்குது. மத்த சமூகத்துக்காரவுங்களும் இருக்காய்ங்க. ஆனாலும் நாடார் தான் இங்க மெஜாரிட்டி. அருப்போட்டைல இருக்குற அதே தேவாங்கர் சமூகத்துக்காரவுங்க இங்கயும் கொஞ்சம் இருக்காங்க. யாரு மெஜாரிட்டியா இருக்காங்கங்கிறது அந்த ஊருல இருக்குற பள்ளிக்கோடங்களப் பாத்தாலே தெரிஞ்சிரும். 


இந்த ஊருல இந்தனப் பள்ளிக்கோடங்க இருக்கு



  1. K.C.S.Dhanuskodinadar Municipal middle school
  2. S. S. Subbiah Nadar Government Higher Secondary School
  3. R. C. Higher Secondary School: http://www.rchssvnr.edu/
  4. K. Kamaraj Vidhya Sala Middle School
  5. Kshatriya Vidhya Sala Higher Secondary School - Madurai Road
  6. Kshatriya Vidhya Sala Mat. Higher Secondary School - Soolakarai: http://www.kvsmat.in/
  7. P. S. Chidambara Nadar Senior English School: http://www.pscschool.com/
  8. Kshatriya Girls Hr Sec School
  9. H. P. S. M. Hr. Sec. School[vague] - இது முஸ்லிம் ஸ்கூல்
  10. Sri Sowdambigai higher Sec School - இது தேவாங்கர் சமூகத்தவர் ஸ்கூல்
இன்னும் கொஞ்சம் பள்ளிக்கோடங்க இருக்கு. முக்கியமானத மட்டுந்தான் எழுதியிருக்கேன். கத்தியச்சுத்திட்டு வந்திடாதீக.

காலேசுன்னுப் பாத்தீங்கன்னா, ரெண்டு ஆர்ட்ஸ் காலேசு, ஒரு இஞ்சினியரிங்க் காலேசு இருக்கு. மூணு காலேசுமே நாடார் சமூகத்துக்காரவுகதுதான். 
V.H.N.S.N. College - Virudhugar Hindu Nadar Senthikkumara Nadar College
VVV Collge - V.V.Vanniapperumal College For Women
வழக்கம் போல ஒரு காலேசு ஆம்பளப்புள்ளகளுக்கும், இன்னொரு காலேசு பொம்பளப் புள்ளகளுக்கும். ஆம்பளப்பசங்களுக்கு மட்டும்னு காலேசு நடத்துனா யூனிவர்சிட்டிக்கு தண்டம் குடுக்கணும். ஆனாலும் குடுத்துத்தான் நடத்திட்டிருந்தாய்ங்க. ஆனா போகப் போக ஆம்பளப் பசங்க ஆர்ட்ஸ் காலேசு படிக்க அதிகமா விருப்பப்படுரதில்லன்னு தெரிஞ்சிக்கிட்டு VHNSN காலேச கோ-எட் ஆக்கிட்டாய்ங்க. 
எஞ்சினியரிங்க் காலேசு - Kamaraj College of Engineering

விருதுநகர் மாவட்டத்துல இருக்குற எல்லா ஊர்களயும் போல விருதுநகரு ஊருக்கும் ரெண்டு பஸ் ஸ்டேண்டு. பழசு - புதுசு. புது பஸ் ஸ்டேண்ட்ல பஸ் எதுவும் நிக்காது. எல்லா பஸ்ஸும் பழைய பஸ் ஸ்டேண்டுக்குத்தான். நெரிசலா இருக்குன்னுதான் புதுசக் கட்டுனாய்ங்க. ஆனா பஸ்ஸ்டேண்ட் அங்க போயிட்டா யாவாரம் போயிருமுன்னு அதுக்குத் தட போட்டுட்டாய்ங்க. பல தடவ மாத்தி மாத்தி இப்ப எப்பிடி இருக்குன்னு தெரியல. 

விருதுநகருல பல முக்கியமான தொழிச்சாலையெல்லாம் இருக்கு. வி.வி.டி தேங்காயெண்ணை இந்த ஊருதான், ஜோதிகா ஊத்தி ஊத்திக் குடிக்கிற இதயம் நல்லெண்ணை இந்த ஊருதான். இது தவிர இன்னும் நெறைய இருக்கு.

அடுத்த ஊரப்பத்தி கொஞ்ச நாள் கழிச்சி வந்து சொல்றேன்.