Monday, December 28, 2009

விருதுநகர் மாவட்டம் - ஒரு அறிமுகம் - பகுதி 3

இந்த பதிவு எழுதும் வாய்ப்பை நானே குடுகுடுப்பையாரிடம் கேட்டு வாங்கினேன். நான் பிறந்து வளர்ந்த விருதுநகர் மாவட்டத்தைப் பற்றி எழுத அனுமதி கொடுத்த குடுகுடுப்பைக்கு என் நன்றிகள்.


இந்த மாவட்டத்தப் பத்தி நாநா எழுதின முதல் இரண்டு பதிவுகளை கீழே இருக்கும் தொடுப்புகளில் காணலாம்
பகுதி 1
பகுதி 2


மாவட்டத்தைப் பத்தி பொதுவான விசயங்களை அந்த இரண்டு பதிவுகளில் அலசிட்டதுனால மாவட்டத்தில் இருக்குற ஒவ்வொரு ஊரைப் பத்தியும் விளக்கமாப் பார்க்கலாம்.


முதல்ல அருப்புக்கோட்டை - அகர வரிசைல முதலா இருக்குறதாலயும் நான் வளர்ந்த ஊர்ங்கிறதுனாலயும்.


மதுரையிலிருந்து தூத்துக்குடி போற வழியில இருக்கு அருப்புக்கோட்டை. மதுரை பஸ்ஸ்டாண்ட்ல அருப்புக்கோட்டை பஸ் நிக்கிற இடத்துக்குப் போனீங்கன்னா “அருப்போட்டை அருப்போட்டை”ன்னு ஆள் சேக்கிறதக் கேக்கலாம். சரியா மதுரையில இருந்து 50 கி.மீ தூரத்துல இருக்கு.


பெயர்க்காரணம்: மதுரை மல்லின்னு எல்லாரும் பெருமையா சொல்லிக்கிற மல்லிகைப்பூ அருப்புக்கோட்டைய சுத்தி இருக்குற ஊர்கள்லதான் விளையுது.(ஆனா பேரு மட்டும் மதுரைக்கு). இப்பிடி சுத்தி மல்லிகைப்பூத் தோட்டங்கள் நிறைய இருக்குறதுனால, அரும்புக்கோட்டை அப்பிடின்னு இந்த ஊரைக் கூப்பிட்டிட்டு இருந்தாங்க. அது காலப்போக்குல மறுவி அருப்புக்கோட்டை ஆகிடுச்சி.


கிராமமோ சின்ன நகரமோ சமுதாய அடிப்படைல மக்களை பிரிச்சிப் பாக்க வேண்டியது தவிர்க்க முடியாமப் போயிடுது. அப்பிடி அருப்புக்கோட்டைல நான்கு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையா இருக்காங்க. முதலாவது கன்னடம் பேசும் தேவாங்கர் இனம். அடுத்தது நாடார். நெசவுத்தொழில் செய்யும் சாலியர் மற்றும் தெலுங்கு பேசும் நாயக்கர். இது தவிர இஸ்லாமியரும் ஒரு அளவுக்கு இருக்காங்க. இதுல ஒவ்வொரு சமுதாயமும் அவங்க அவங்க சாதி பேருல பள்ளிக்கூடம் வச்சிருக்காங்க. தேவாங்கரும் நாடாரும் கல்லூரியே வச்சிருக்காங்க. இதுல தேவாங்கர் மேனிலைப் பள்ளியும் எஸ்.பி.கே மேனிலைப் பள்ளியும் பிரபலமானவை.


குடிநீர்ப் பஞ்சம்: அருப்புக்கோட்டை பல விசயங்களுக்குப் பெயர் போனது. அதுல முக்கியமான ஒண்ணு - தண்ணீர்ப் பஞ்சம். கோடை காலம் வந்துடுச்சின்னா கடுமையானத் தண்ணிப்பஞ்சம் தலை விரிச்சி ஆடும். ஒரு காலத்துல அருப்புக்கோட்டை மாப்பிள்ளைக்கு வெளியூர்ல யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க - தன் பொண்ணு தண்ணிக்குடம் சுமந்து கஷ்டப்படக் கூடாதுன்னு. அப்புறம் ஆம்பிளைங்க சைக்கிள்ல தண்ணி கொண்டு வரத் தொடங்கினப்பறம் தான் இந்தக் கஷ்டம் (தண்ணிக் கஷ்டம் இல்ல) தீந்துச்சி. ஒரு காலத்துல விடியக்காலைல மூணு நாலு மணுக்கெல்லாம் எழுந்து சைக்கிள்ல குடத்தைக் கட்டிக்கிட்டு ஊருக்கு வெளிய இருக்கிற ரைஸ் மில்லுல போய் தண்ணி பிடிச்சிட்டு வந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருது..


தொழில்: அருப்புக்கோட்டை கரிசல் பூமி. அதுனால பருத்தி நிறைய விளைஞ்சிருந்திருக்கு (இன்னும் விளையுதான்னு தெரியாது). அதனால அருப்புக்கோட்டையச் சுத்தி நிறைய ஸ்பின்னிங் மில். ஜெயவிலாஸ் அதில கொஞ்சம் ஃபேமஸ். ராமலிங்கா மைதா ரவை ஆட்டா கூட இங்கதான் தயாராகுது. ஒரு காலத்துல கைத்தறி நெசவு இங்க கொஞ்சம் பாப்புலர். இப்போ அரசாங்க இலவச வேட்டி சேலைத்திட்டம்தான் இந்தக் கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி ஊத்துது.


கல்வி: அருப்புக்கோட்டை ஒரு தனி கல்வி மாவட்டம். கல்விக்கு அருப்புக்கோட்டையச் சேர்ந்த மக்கள் ரொம்பவே முக்கியத்துவம் குடுக்குறாங்க. அதனால பத்தாவது பன்னண்டாவது பொது தேர்தல்ல.. ச்சீ..தேர்வுல நல்ல மார்க் வாங்கறாங்க. இதிலயும் தேவாங்கர் ஸ்கூலுக்கும் எஸ்.பி.கே ஸ்கூலுக்கும் கடுமையான போட்டி இருக்கும். 


கல்வின்னு ஆரம்பிச்சப்பறம் இந்த ரெண்டு ஸ்கூல் பத்தி சொல்லாம விட்டா தப்பு. இந்த ரெண்டு ஸ்கூலும் எல்லா விசயத்துலயும் கடுமையா போட்டி போடுவாங்க. விளையாட்டுன்னு வந்துட்டா இவங்க ரெண்டு பேருக்கும் நடக்குற டிஸ்ட்ரிக்ட் லெவல் கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் மாதிரி இருக்கும். எஸ்.பி.கேல தான் பெரும்பாலும் நடக்கும். ஹாஸ்டல் பசங்களுக்கெல்லாம் லீவு குடுத்து பவுண்டரில உக்கார வச்சிருப்பாங்க. கைல கல்லோட காத்துட்டு இருப்பாங்க. ஃபோர் லைன்ல ஃபீல்டிங் பண்ற ப்ளேயருக்கு கல்லடிதான். எஸ்.பி.கே ஸ்கூல் அதுல கொஞ்சம் முரட்டுத்தனமாத்தான் நடந்துக்குவாங்க. ஒரு தடவை சாத்தூர் எட்வர்ட் ஸ்கூலோட ஃபுட்பால் டீமை கேட்டைப் பூட்டிட்டு உள்ள வச்சி மொத்தி அனுப்புனாங்க. (இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே நான் தேவாங்கர் ஸ்கூஸ் ஸ்டுடண்ட்டுனு).


அப்புறம் +2 படிக்கிற ஸ்டுடண்ட்ஸ்க்கு +1 லீவ்ல ட்யூசன் எடுக்குறது இங்க ரொம்ப ஃபேமஸ். வெளியூர்ல இருந்தெல்லாம் வந்து சொந்தக்காரவுங்க வீட்டுல தங்கி படிச்சிட்டு போவாங்க. (அப்பிடி ஒரு ட்யூசன்ல ரெத்தினசாமி சார் எடுத்த சைக்ளேட்ரான் பாடம் இன்னிக்கும் பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சிருக்கு).


அப்புறம் கம்ப்யூட்டர் செண்டர்கள். இங்க ஆப்டெக் எல்லாம் வரதுக்கு முன்னாடியே - அதாவது 90களோட ஆரம்பத்துலயே கம்ப்யூட்டர் செண்டர் வந்திடுச்சி. 90களோட மத்தியிலயெல்லாம் கிட்டத்தட்ட 15,20 கம்ப்யூட்டர் செண்டர் இருந்தது. 


இங்க ரெண்டு திருவிழா வருசா வருசம் ரொம்ப விமரிசையா நடக்கும்.


முதல்ல பங்குனிப் பொங்கல். இது நாடார் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில்ல நடக்கும். ஆனா விழாவில எல்லா சமுதாயத்துக்கரங்களும் கலந்துக்குவாங்க. இந்த பொங்கலை ஒட்டி 20 நாள் பொருட்காட்சி(கட்டணம் உண்டு) எஸ்.பி.கே பள்ளி மைதானத்துல நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி இருக்கும். ஒரு நாள் தீச்சட்டி எடுப்பாங்க. மாரியம்மன் கோவிலுக்கு முன்னால தீக்குழி இறங்குவாங்க. இந்த திருவிழாவுக்கு பின்னால ஒரு “முக்கியமான” விசயம் இருக்கு. ஆனா அந்த விசயத்த முதல்ல செஞ்சது விருதுநகர்க்காரவுங்க அப்பிடிங்கிறதால அதப் பத்தி டீட்டெயிலா விருதுநகர் பதிவுல பாப்போம்.


அடுத்தது ஆனித்திருவிழா. இது மூணு நாள் திருவிழா. இதுல அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவில் தேரோட்டம் நடக்கும். அதை ஒட்டி தேவாங்கர் பள்ளி மைதானத்துல சின்னதா பொருட்காட்சி(ஃப்ரீ) இருக்கும். இந்த சமயத்துல வெளியூர்ல இருந்து வந்த சொந்த பந்தத்த கூட்டிக்கிட்டு எதாவது டிஃபன் செஞ்சி எடுத்துக்கிட்டு தேவாங்கர் ஸ்கூல் மைதானத்துல போய் உக்காந்து சாப்டுட்டு தேர் பாத்துட்டு வருவாங்க. இதுல ஒரு குறிப்பிட்ட சமுதாயம்னு இல்லாம எல்லா சமுதாயத்துக்காரவுங்களும் கலந்துக்குவாங்க.


அருப்புக்கோட்டை முன்னால சாத்தூர் சட்ட மன்றத்துக்கு உட்பட்டு இருந்தது. மீசைக்காரர், அண்ணாச்சி அப்பிடின்னு செல்லமா அழைக்கப்படுற கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழக்கமா இந்தத் தொகுதில தான் நின்னு ஜெயிப்பார். ஒரே ஒருதடவ தோத்துப் போயிருக்கார். அதுக்கப்புறம் அவர் திமுகல ஐக்கியம் ஆயிட்டார். 


அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதின்னு முன்னாடி இருந்தத் தொகுதில - ஆமா எம்.ஜி.ஆர் நின்னு ஜெயிச்ச அதே தொகுதிதான் - அருப்புக்கோட்டை கிடையாது. ஆனா இப்போ தொகுதி சீரமைப்புக்கு அப்புறம், அருப்புக்கோட்டை தொகுதில அருப்புக்கோட்டை இருக்கு.


பாராளுமன்றம் பழைய சிவகாசி, இன்றைய விருதுநகர். வைகோ நின்னு பல தடவை தோத்திருக்கார். இதப் பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.


நான் அருப்புக்கோட்டைல இருந்த வரைக்கும் செகண்ட் ரிலீஸ்தான் வரும். இப்போ ரெண்டு மூணு டி.டி.எஸ் தியேட்டர்லாம் இருக்கு. அதுனால இப்ப படம் ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன்.


அருப்புக்கோட்டைக்கு இன்னொரு சிறப்பு அம்சம் இருக்கு. பாபர் மசூதிய இடிக்கிறதுக்கு முன்னாடியே மதக்கலவரம் நடந்த ஊர் இது. ஆனா அது ரெண்டு மதத்துக்கு நடுவுல இல்லாம ஒரு சாதிக்கும் இன்னொரு மதத்துக்கும் மட்டும் நடந்தது. அதன் காரணமா இன்னிக்கும் பா.ஜ.கவுல நாடார்கள் பொறுப்புல இருக்குறத இங்க பாக்கலாம்.


தொண்ணூறுகளின் இறுதில தென்மாவட்டங்கள்ல நடந்த சில சாதிக்கலவரங்களிலும் அருப்புக்கோட்டை தப்பலை. ஊருக்கு பஸ் இல்லாம தீவு மாதிரி கிட்டத்தட்ட 15 நாள் இருந்தது மறக்க முடியாது.


அருப்புக்கோட்டையப் பத்தி பேசுறதுனா பேசிட்டே போகலாம். ஆனாலும் மத்த ஊரப்பத்தியும் பேசணுமே. அதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

Thursday, December 3, 2009

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2

முதல் பாகம்

Bleachingpowder said... //இலவச மின்சாரத்தால் பயனடைவது பெரும்பாலும் பணக்கார விவசாயிகளே. வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க. மற்ற தொழில் எப்படியோ அதே போல் விவசாயமும் ஒரு தொழில் அவ்வளவு தான். விவசாயம் செய்யும் எவரும் எனக்கு தெரிந்து வருமான வரி கட்டி நான் பார்த்ததே இல்லை. அரசாங்கமும் அவர்களை கண்டுகிட்டது மாதிரி தெரியவில்லை. வெங்காயம் கிலோ அறுபது ருபாய்க்கு விற்கும் போது பல்ல இளிச்சிட்டு வியாபரம் பண்றவங்க, மழை காலங்களில் விலை குறைந்தால் அரசு மானியம் தரனும்னு குய்யோ முய்யோனு குதிப்பாங்க.//

உங்கள் கருத்துக்கும்,நேர்மையான விமர்சனத்திற்கும் நன்றி Bleachingpowder , அரசியல்வாதிகள் நிறைய இலவச திட்டங்களை ஓட்டுக்காக வழங்குகிறார்கள் ஒத்துக்கொள்கிறேன். உங்களின் விமர்சனம் நீங்கள் விவசாயமும் செய்தால் மாறுபடலாம்.
இலவச மின்சாரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. மற்ற தொழில்களுக்கு தரப்படும் முக்கியவத்துவத்துடன் ஒரு ஒப்பீடு அவ்வளவே.

//வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க.//

இலவச மின்சாரம் வோட்டுக்காக அறிவிக்கப்பட்ட திட்டமே, ஆனால் இலவச மின்சாரம் நிறைய எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது, ஏனென்றால் நேரடி பயனாளிகள் குறைவு. விவசாயக்கூலியும் எதிர்ப்பான், பம்பு செட் இல்லாத விவசாயியும் எதிர்ப்பான்,நகர மக்களும் எதிர்ப்பார்கள். வோட்டு பிச்சைக்கு போடப்படும் இலவசங்கள் நான் பட்டியலிட்டுதான் தெரியவேண்டிய அவசியம் இல்லை.இந்த இலவச மின்சாரம் கொடுக்காவிட்டால் மிச்சமாகும் பணத்தில் வேறு வீணாப்போன இலவச திட்டத்திற்கு செலவழிப்பார்கள்.

நிலமற்ற ஒரு விவசாய கூலி இலவச மின்சாரத்தை ஆவேசத்துடன் எதிர்ப்பார். அதற்கான காரணம் பணக்காரர்களுக்கு கொடுக்கும் பணத்தில் எனக்கு மாசம் 10 கிலோ அரிசி இலவசமாக அரசு கொடுக்கலாம் என காரணம் சொல்லுவார், இந்த பிச்சைகாரதனத்தை உருவாக்கியது நீங்கள் சொல்லும் அரசின் இலவச திட்டங்கள்.ஆனால் கிடைக்கும் இலவச மின்சாரத்தினால்,அந்த பணக்கார(?) முதலாளி விவசாயம் செய்யமுடிகிறது.அவனுக்கு வேலை கிடைக்கிறது அதே அரிசியை வாங்கி தன்மானத்துடன் சாப்பிடுகிறான். இதை அவன் உணருமளவுக்கு நாம் வளரவிடவில்லை.இதற்கு இன்னொரு காரணம் அந்த பணக்கார(?) முதலாளி விடும் வெட்டி பந்தா விவசாயக் கூலியை கடுப்பேற்றவும் கூடும்.:)

ஒரு மென்பொருள் நிபுணர் வேலை பார்க்கும் நிறுவணம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் இருக்கலாம். இல்லையென்றால் அரசு வரி விதிக்கும் பட்சத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் நோக்கி செல்லலாம் ஏன் என்றால் அங்கு வரி கிடையாது.வரி விதித்தால் குறைந்த காசுக்கு அந்த வேலை சைனாவுக்கோ அல்லது வியட்னாமுக்கோ சென்றுவிடும்.அவர் அங்கே சென்று வேலை பார்க்கலாம்.ஆனால் விவசாயத்தை சைனாவில் இந்திய விவசாயி செய்ய முடியாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் அரசு இழக்கும் வருவாயினால் உங்களை/என்னை போன்ற பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதனை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் பலனடைவதில் நானும் ஒருவன். இல்லையேல் இந்த வேலை ஒரு வியட்னாமியனுக்கு செல்லப்போகிறது.அப்புறம் நாம் பதிவெல்லாம் எழுத முடியாது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு துணிக்கு 15 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளிக்கிறது,ஏன் என்றால் அமெரிக்கா காரன் திருப்பூர் ஜட்டியை போட்டால்தான். திருப்பூரில துணி நறுக்கும் தொழிலாளி அவன் நறுக்கிய துண்டு துணியில் கோமணம் கட்டமுடியும், இல்லையென்றால் சைனாக்காரனுக்கோ,பாகிஸ்தான் காரனுக்கோ அந்த கோமண வாய்ப்பு கிடைக்கும். இதுவும் முதலாளிகளுக்கு உதவுவதே ஆனால் தொழிலாளிக்கு கோமணம் கிடைக்கிறது.

மேற்கண்ட இரண்டும் நீங்கள் சொன்ன தொழில்தான் இதற்கு அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?

மேலே கொடுக்கப்பவை இலவசமா? ஊக்கமா?
அப்போ இலவச மின்சாரம் இலவசமா? ஊக்கமா?

மேறகண்ட இரண்டிற்கு கொடுக்கபடும் ஊக்கத்தொகையை விட பல மடங்கு குறைவான செலவே இலவச மின்சாரத்திற்கு அரசு செலவிடும்.

பலனடைபவன் பணக்கார விவசாயி என்கிறீர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் பணக்கார விவசாயி என்றால் நம் பார்வையில் ஏதோ தவறு என்றே கருதுகிறேன்.எங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது, ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு செருப்பு போட்டு நடந்ததாக கூட ஞாபகம் இல்லை இவ்வள்வுக்கும் எங்கள் அப்பா ஆசிரியர் அப்போ மற்றவர்கள் நிலமை?.இந்தியாவில் பணக்கார விவசாயி வர்க்கம் மிகக்குறைவு. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவனே இல்லையெனில் நீங்கள் சொன்ன அதே கருத்தைதான் வரி மாறாமல் நானும் சொல்லியிருப்பேன்.

வருமான வரி கட்டும் அளவுக்கு எத்தனை விவாசாயி சம்பாதிக்கிறான்.? விவசாயி வீட்டில் ரசம் சாப்பிடுவான், விவசாயக் கூலி கஞ்சி சோறும் ஊறுகாயும் சாப்பிடுவான் அதுதான் வித்தியாசம்.விவசாயமும் செய்து கொண்டு மற்ற தொழில். (காண்டிராக்ட்/கடைகள்/இன்னபிறவும்) செய்பவன் வருமான வரி கட்டும் அளவுக்கு நிறைய சம்பாதிப்பான்.அவனை இனங்கான வேண்டியது அரசாரின் வேலை.

பணப்பயிர் செய்யும் விவசாயிகள் மிகசொற்பத்தில் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் காணுவது மிகவும் எளிது, அந்த விவசாயிகளை கண்டு வரி விதிக்க சொல்லுங்கள்.

இன்றைக்கு அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை இருக்கிறது ஏன்? உணவுபொருள் விலை கூடிவிடும் என்பதால்.ஏன் ஏற்றுமதி செய்தால் இடைத்தரகர்கள் அதிகம் சம்பாதித்தாலும் விவசாயிக்கும் பலன் கிடைக்குமே? ஆனால் இது உணவுப்பொரும் விலை ஏறக்கூடாது அதனால் அனுமதிக்க மாட்டோம்.

வெங்காயம் 60 ரூபாய் விற்றபோது வெங்காய ஏற்றுமதிக்கு தடை போட்டிருப்பார்கள், இல்லாவிடில் வெங்காயம் 300 ரூபாய்க்கு வித்திருக்கும், வாங்கும் நாம் குய்யோ முய்யோன்னு கத்திருப்போம்.

விவசாயி மட்டும் தான் அவன் தயாரிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாது. ஏனென்றால் அது உணவுப்பொருள்.விவசாயதிற்கு மானியம் இல்லாவிட்டால் அரிசி கிலோ 250 ரூபாய், பருப்பு கிலோ 1000 ரூபாய் இருக்கும் அப்போ நம்ம என்ன பண்ணுவோம்.

விவசாயத்திற்கு மேலை நாடுகள் கொடுக்கும் மானிய சதவீதம் பற்றி கூகில் செய்யுங்கள் ஏன் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.மானியம் கொடுக்காமல் இருந்தால் மேலை நாடுகள் மானியம் கொடுத்து உற்பத்தி செய்யும் அரிசியை இறக்குமதி செய்து நாம் சாப்பிட்டுவிட்டு பாரட்டுவோம். ஆனால் இந்திய விவாசாயிக்கு சாப்பிட எலி கூட இருக்காது ஏனென்றால் அதுவும் அவன் விளைவிக்கும் அரிசியை சாப்பிட்டே உயிர் வாழவேண்டும்.

இந்த ஏழை பணக்கார வர்க்க பிரச்சினை என்ன பின்விளைவுகள் ஏற்படுத்தும் என்பது இயற்கையின் நியதி.

இதை எல்லாம் வெளியில் இருந்து உணரமுடியாது. ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி வெங்காயம் வியாபாரம் செய்து வருமான வரி கட்டுங்கள்.மழை காலங்களில் வெங்காயம் வாங்க நாங்கள் வருகிறோம்.

இந்தியா 80% மேல் உள்ள விவசாயத்தை/விவசாயிகளை புறக்கணித்து முன்னேற முடியாது.அரசாங்கம் 10 சதவீத அறிவு ஜீவிகளுக்கு மட்டுமல்ல.

சத்யம் தியேட்டரில் 1000 ரூபாய்க்கு படம் பார்த்து விட்டு , பூக்காரியிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசும் மத்திய மேல தர மக்களுக்கு பூ விவசாயம் செய்பவனுக்கு வாசம் கூட மிஞ்சாது என்பது தெரிவதற்கான வாய்ப்பு இல்லை.

நான் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன்.மற்ற தொழிலுக்கு அரசு தரும் ஊக்கம் சரியெனும்போது விவசாயிக்கு அரசு தரும் ஊக்கம் எப்படி தவறாகும்.

சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் ஆதரிக்கிறேன், விவசாயிகளுக்கு 24 மணி நேர தடையற்ற மானிய மின்சாரத்தையும் ஆதரிக்கும் இரண்டிலும் பயன்பெறும் சுயநலவாதி நான் அதனால் இருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் கொடுத்தால் எல்லா விவசாயியும் பணம் கட்டுவான்.பணம் கட்ட வைக்கலாம்.அது இலவச மின்சாரத்தைவிட பெரிய ஊக்கம்.அவன் நிறைய சம்பாதிக்கும் போது வரியும் கட்ட வைக்கலாம்.

இது எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல தீர்வை அறிவு ஜீவிகள் /ஆட்சியாளர்கள் முன்வைக்கும் போது அதையும் ஏற்றுக்கொள்வோம்.

நாம் நாமாக இருப்பதை விட நமக்கு தெரியாத ஒருவனாக இருப்பது கடினமே என்பது புரிகிறது. அதனால் இனிமேல் எப்போதும் போல இங்கே வெறும் மொக்கையோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)

மொக்கைச்சாமி said...

இப்போல்லாம் பம்ப் செட் 5 hp'க்கு மேல இருந்தா இலவச மின்சாரம் கிடையாதுன்னு நினைக்கறேன். தெரிஞ்சவங்க சொல்லலாம்.
மேலும் விவசாயத்தை பண்ணி பார்த்தாதான் தெரியும் அதோட கஷ்டம். ஒரு தொழில் செஞ்சி அதுல நஷ்டம்ன்னா அதுக்கு நாம தான் கராணம். ஆனா விவசாயத்துல மட்டும் தான் நாம எல்லாத்தையும் கரெக்டா செய்ஞ்சாலும் மழை பெய்தோ பெய்யாமலோ நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கு. இப்போ இருக்குற தண்ணி கஷ்டத்துல வருஷத்துக்கு 2 போகம் செயஞ்சாலே பெருசு. முதல் போட்டு மூணு மாசம் செலவு செய்ஞ்சி மழை ஏமாத்தாம இருந்தா கடைசியில கொஞ்சம் லாபம் பார்க்கலாம். average'ஆ 5 போகம் பண்ணினா, 3 லாபம் 2 நஷ்டம் என்பது அனுபவ உண்மை. விவசாய பின்புலம் இல்லாத Direct deposit salary, white collar jobs ஆளுங்களுக்கு இது புரிவது கொஞ்ச கஷ்டம். ஜமீன்தார் மிராசுதார் இவங்க மொத்த விவசாயிகள்ள 10% கூட இருக்கமாட்டாங்க. இவங்களை மனசுல வெச்சி இலவச மின்சாரம் வேண்டுமான்னு வேணமான்னு decide பண்ணக்கூடாது.
இலவச மின்சாரத்துனால விவசாயிங்க லாபம் அடைந்திட மாட்டாங்க. ஆனா இலவச மின்சாரம் குடுக்கலைன்னா நஷ்டம் தவிர்க்கமுடியாதது. ஒரு போகதுக்கு 30k இன்வெஸ்ட் பண்ணின, 40k return கிடைக்கும். 10k பிராபிட். இதை வெச்சி புது செல் போனோ, பிரிட்ஜோ வாங்கமாட்டாங்க. அடுத்த விளைச்சலுக்கு முதலீடாத்தான் இதை போடுவாங்க.
கடந்த 20 வருஷத்துல எத்தனையோ விவசாயிங்க ஊரை விட்டு போய் டவுன்லையோ சிட்டிலையோ கிடைச்ச வேலையை பார்க்கறாங்களே ஏன்? விவசாயத்துல கட்டு கட்டா சம்பாதிச்சது போதாதுங்கற பேராசையா இல்ல விவசாயம் பண்ணினா இனிமே புள்ள குட்டிய காப்பாத்த முடியாதுங்கற உண்மையா? விவசாயிங்க தற்கொலைன்னு தானே செய்தி வருது, மாதச்சம்பளக்காரங்க தற்கொலைன்னு இதுவரைக்கும் செய்தி வந்ததில்லையே ஏன்? யோசிங்க...

Monday, November 30, 2009

அமெரிக்காவின் கோமணம் கிழிந்தது.

இல்லாத நடிகையின் பொல்லாத நாயை. வாங்கி அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் அதனை நம்பி முதலீடு செய்தவர்களின் கோமணம் கிழிந்தது தெரிந்ததே.இப்போது அந்த கிழிந்த கோமணத்தை எப்படி சரி செய்வது, இன்னும் கிழியாமல் உள்ள கோமணத்தை எப்படி பாதுகாப்பது போன்றவற்றிகு அமைக்கப்பட்ட சிறப்பு கோமணக் காப்பு கமிட்டி கூடி வாய்ப்புகளை ஆலோசனை செய்கிறது.

அமெரிக்க அதிகாரி,ஐரோப்பிய அதிகாரி, மற்றும் பலர்.

அ.அதிகாரி: இன்றைய நிலைமையில அமெரிக்காவின் கிழிந்த கோமணம் சரி செய்யப்பட்டால் தான் உலகப்பொருளாதாரம் சரி செய்ய முடியும். இது பற்றிய உங்களுடைய யோசனைகளை கூறவும்.

ஐ,அதிகாரி: 700B பெயில் அவுட் மூலியமா நாறிப்போன கோமணத்தையெல்லாம் வாங்கிர ஐடியா என்ன ஆச்சு.

அ.அதிகாரி: நாறிப்போன கோமணம்னு சொல்றது கொஞ்சம் விரசமா இருக்கு, டாக்ஸிக் அசெட்னு அழகா ஆங்கிலத்தில சொல்லலாம். அந்த பிளான் இப்போதைக்கு பலன் தராது. வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.

ஐ.அதிகாரி: டாலர் மதிப்பு கூடிடிச்சே அத வெச்சி இப்ப பெட்ரோல் விலை குறைச்சலா விக்கிறப்பவே வாங்கி டாக்ஸிக் அசெட்ட சுத்தப்படுத்தலேமே.

அ.அதிகாரி: சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்.

அ.அதிகாரி 2: முடியாது ஆலடர்னேட் பியூயலுக்கு சோளத்தை எடுத்துக்கிட்டா சாப்பாடு விலை கூடி போயிடும் ,அந்த பிளானும் வேணாம்.

அ.அதிகாரி : சரி பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம், அத மெயிண்டெய்ன் பண்ற மென்பொருள், கால் செண்டர் வேலைய இந்தியாவில சில கம்பெனிக்கு கொடுத்திட்டு காசு மிச்சம் பண்ணலாம்

அ.அதிகாரி 2: இல்ல டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம். அவுட்சோர்சிங்லாம் கட் பண்ணிரலாம்.

ஐ.அதிகாரி & அ.அதிகாரி: அப்படி பண்ணா அது கோமணத்தோட வெலய விட ஜாஸ்தியாகுமே என்ன பண்றது.

அ.அதிகாரி 2: ஆனா வேலைய உருவாக்கனுமே. என்ன பண்றது.? you know what ,i dont know

அ.அதிகாரி: அது மட்டும் இல்ல நூல ஏத்திட்டு போற கட்டை வண்டி கம்பெனியெல்லாம் கடைச்சாவி கழண்டு போச்சு,எங்களுக்கும் காசு கொடுங்கன்னு கேக்கிறாங்க. எனக்கென்னமோ இந்த முதலாளித்துவத்துல இதுக்கு விடை இருக்கிற மாதிரி தெரியல.

ஐ.அதிகாரி: பேசாம முதலாளித்துவம் இல்லாத மத்தவங்கெல்லாம் எப்படி கோமணம் கிழியாம பாதுகாக்கிறாங்கன்னு அவங்க ஐடியாவையும் கேப்போம்.

அ.அதிகாரி : நல்ல யோசனை, பேசமா டோண்டுவுக்கு இந்த வாரம் கேள்விய அனுப்பிச்சிரலாமா?

அ.அதிகாரி2 : வெண்டாம் அவருக்கு முதலாளித்துவத்தை தவிர வேற ஒண்ணும் தெரியாது.

அனைவரும் மாற்றுப்பொருளாதார நிபுணரை சந்திக்க அங்கே செல்கின்றனர்.

அ.அதிகாரி: நீங்க எப்படி கோமணம் கிழியாம பாத்துக்கறீங்க?

மா.நிபுணர்: இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Wednesday, November 25, 2009

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும். நான்கு நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்றும் சோழர்கள் காலத்தில் இருந்ததாக எங்கோ படித்திருக்கிறேன். இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.

இந்த நாட்டாமை பதவி குடும்பத்தில் மூத்த ஆண் வாரிசுகளுக்கு சென்றுவிடும். இவர்கள் கிராமத்தில் கோவில் திருவிழா வரி வசூலிப்பது, ஊர் ஏரி குளங்களை மராமத்து செய்வது,பொதுச்சொத்துகளை பாதுகாப்பது, மற்றும் ஊரில் எழும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போன்றவைகளை செய்யும் நிர்வாகிகள்.இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நாட்டாமை இருப்பார் இவரை நாட்டம்பலம் என்று அழைப்பார்கள்.நாட்டுக்குள் அடங்கிய இரண்டு ஊருக்குள் பிரச்சினை என்றால் தீர்வுக்கு அம்பலங்கள் சேர்ந்து தீர்வு காண முயல்வார்கள்.எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.

இந்த நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று தலைநகரம் அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும் உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு என நினைக்கிறேன். இதில் காசவளநாடு தலைநகரம்.காசவளநாட்டைச் சேர்ந்தவர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று நாடுகளிலும் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.(இப்போ ஆளுகையெல்லாம் கிடையாது)பொதுவாக திருமணங்கள் 90% அந்த நாட்டுக்குள்ளேயே முடிந்துவிடும், சில திருமணங்கள் நாடு தாண்டி நடக்கக்கூடும். இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..

இதிலும் இந்த வளநாட்டுக்காரர்கள் அறுத்துக்கட்ட மாட்டார்கள்.(கைம்பெண் மறுமணம்). மற்ற மூன்று நாடுகளில் கைம்பெண் மறுமணம் தொண்று தொட்டே உண்டு. ஒரு நாட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பழக்க வழக்கங்களை நக்கல் செய்வது கலையின் ஆரம்பம் இங்கே.

நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண.சில இளைஞிகள் விழலாம், தவறினால் இளைஞர்களுக்கு விழும்.பெரும்பாலும் இரண்டாவதே நடக்கும் ஏனென்றால் பெண்களுக்கு வரும் காவல் அப்படி இருக்கும்.மற்ற நேரங்களில் கோவிலில் சீட்டு விளையாட செல்லுவார்கள்.

மேலே சொன்ன அனைத்தும் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மைனாரிட்டி ஜாதியாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு அம்பலம் இருப்பார்,பெரும்பாலான கோவில்களில் அவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும், தேங்காய் மூடியும் வாழைப்பழமும்தான்.பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் இவர்கள் அந்த ஊரின் வந்தேரிகள்.).

ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அந்த கட்டமைப்பில் சட்டம் போட்டு ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன். சாதிசூழ் உலகு என்ற பெயரில் பதிவர் நடைவண்டியின் பதிவு தெளிவாக உள்ளது,எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அந்த பதிவில் உள்ளதில் பெரும்பாண்மை மறுக்கமுடியாது.

நடைவண்டியின் பார்வையில் தஞ்சை நாடு

தொடரும்.....

Monday, November 23, 2009

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

கொங்குப்பையன் : (மனசுக்குளே)என்னடா ஒரு காச்சப்பாடா இருக்.. பிஸினசும் சரியா போகல கோயமுத்தூரு போயி ஆர்டர் எடுத்துட்டு அப்படியே அந்த கம்பேனில வேல பாக்கிற அந்த வட இந்தியா காரிய மடக்க முடியாதுன்னு பார்ப்போம்.

அப்படியே உடுமலையில பஸ்ஸப்புடிச்சி கோயம்புத்தூர்ல அந்த அழகான புள்ளய மடிக்கிறதுக்கு அண்ணன் வந்து இறங்கி பாக்கிறார், ஆனா அங்க வேற ஒரு பொண்ணு இருக்கு.

கொங்குப்பையன்: ஏனுங் அம்மணி கம்பெனிக்கு புதுசாங்.. இப்பதானுங் ஒங்கள பாக்கிரனுங்..

நெல்லைப்பெண்: ஆமாவே நான் கோயம்புத்தூருக்கே புதுசு சார், நேத்தைக்கு என் பிரண்டு ஒருத்தி மூலமா சிபாரிசு பண்ணி இங்கே சேந்தேன்.

கொங்குப்பையன்:உங் பேரெண்ணங்.

நெல்லைப்பெண்: நீங்க என்ன சொல்லுதியன்னு சரியா வெளங்க மாட்டங்குதுவே.

கொங்குப்பையன்:அம்மினி அப்பா,அம்மா உங்களுக்கு வெச்ச பேரெண்ணங்..உங்கள் எப்படிங் ..கூப்பிட்டு போடரது..

நெல்லைப்பெண்: என் பேர கேக்குதியலா, எங்கய்யா வெச்ச பேரு லெட்சுமி, ஊருப்பக்கம் எல்லாரும் என்னிய வீரலெட்சுமின்னு சொல்வாக கூப்புடுதாங்க.

கொங்குப்பையன்: இருக்கட்டுங் நல்ல பேருங்.. அம்மினி இந்த ஆர்டரை எங்களுக்கு கொடுத்துப்போடுங்க , உங்களுக்காக ரெண்டு நாள்ல முடிச்சு கொடுத்துப்போடரனுங்க்...

நெல்லைப்பெண்: என்னமோ சொல்லுதிய நெல்லைக்காரிக்கு வாக்கு மாறுனா பிடிக்காது,அப்புரம் உங்களுக்கு ஆர்டர் கெடக்காது அத நல்லா தெரிஞ்சுகிடுங்க.

கொங்குப்பையன்: அது என்னமோ தெரியலங்.. உங்கள பாத்தோடனே மனசு பரி கொடுத்து போட்டனுங்..நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க அம்மினி உங்க பேரு மாதிரியே...சிறுவானி தண்ணி குடிச்சு போட்டு கொங்கு கார அம்மினிகளுக்கு குரல் நல்லா இருக்குமுன்னு சொல்லுவாங்... ஆனா அது நெசமில்லீங போலருக்குங்க .. தாமிரபரணி தண்ணி குடிச்ச உங்க குரலு குயிலு மாதிரி இருக்குங்... ஆள அப்படியே மயக்கி போடுதுங்.....

நெல்லைப்பெண்: நல்லாத்தேன் பேசுதீய, பாத்தவுடனே இப்படி சொல்லுதீய..உங்க பேரு என்னா?

கொங்குப்பையன்:துக்ளக்குங்..

நெல்லைப்பெண்: என்னா தூக்குலருக்கு சட்டிலருக்குன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேர ஒழுங்கா சொல்லுவே.

கொங்குப்பையன்: துக்ளக் மகேஷுங். துக்ளக் நம்ம கடைபேருங்..என்னங்க பேர சொன்னோன வெக்கப்பட்டு போறீங்..

நெல்லைப்பெண்: நல்ல பேராத்தேன் இருக்கு,பாக்கலாம் எனக்கு புடிக்குதான்னு.அப்புரம் எங்கய்யாவுக்கு வேற புடிக்கனும்.

கொங்குப்பையன் : (மனதினுள்)இரண்டு நாள் கழிச்சு ஆர்டரை முடிச்சு போட்டு கொடுத்துப்போட்டு தேத்திப்பாப்போம் இல்லாட்டி அல்வா கொடுத்துருவொம்.

காலையில ஆர்டர் முடிச்சு கொடுத்துட்டு,நாளைக்கு போயி நெல்லைப்பெண்ண் பாக்குற நெனப்புல வீட்டுக்கு போகிறார்

கொங்கு அம்மினி: வாங்க கால கழுவி போட்டு வாங்க இந்தாங்க தண்ணி.

கொங்குப்பையன் : என்ன சாப்பாடு அம்மினி.

கொங்கு அம்மினி: வழக்கமான சாப்பாடுதானுங்.., ஆனா பாருங்.. நீங்க ஏதோ கோயமுத்தூருக்கு.. ஒரு ஆர்டர் இன்னிக்கு காலைல கொடுத்துபோட்டிங்களாம், அங்கே இருக்கிர அம்மினி அதுக்காக இந்த அல்வாவ கொடுத்து போட்டிருங்காங்...கடைப்பசங்க கொண்டு வந்தாங்..நீங்க சாப்பிடுங்..

கொங்குப்பையன் : (மனதினுள்)ஆஹா நாம கடலை போட்ட வெசயம் கடைப்பசங்ககிட்ட சொல்லிப்போட்டாளோ..சே இருக்காது.. பாசமா அல்வா அனுப்பிச்சிருக்கா.. நாம வேற அல்வா கொடுக்கனும்னு நெனச்சோம் ஆனா அவ திருநெல்வேலி அல்வா கொடுத்து போட்டிருக்கா போல ,ஆமா திருநெல்வேலி அல்வா இளக்கமாத்தன இருக்கும் இது என்ன கல்லு மாதிரியாட்டம் இருக்கு..

கொங்கு அம்மினி: எனக்கு தெரியாதுங்..சும்மா சாப்பிடுங்க்.. நல்லா இருக்குதா..

கொங்குப்பையன் : ..........கடிக்க கொஞ்ச சிரமமா இருந்தாலும் நல்லாதான் அம்மினி இருக்கு..

கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..

கொங்குப்பையன் : பழமைபேசி அய்யா உங்க அனுபவத்தை வெச்சு அந்த ஓலைச்சுவடிய படிச்சு போட்டு ஒரு வைத்தியம் சொல்லுங்க, வாயைக்கட்டுனா பரவாஇல்லீங் ,இங்கன வேறய கட்டிப்புட்டாங்....

பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்...

Thursday, October 1, 2009

ஆதாம் ஏவாளுக்கு வயசு என்ன

WASHINGTON - The story of humankind is reaching back another million years with the discovery of “Ardi,” a hominid who lived 4.4 million years ago in what is now Ethiopia.

The 110-pound, 4-foot female roamed forests a million years before the famous Lucy, long studied as the earliest skeleton of a human ancestor.

This older skeleton reverses the common wisdom of human evolution, said anthropologist C. Owen Lovejoy of Kent State University.

Saturday, September 19, 2009

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் கைது எதிரொலி: ஒரு அண்டா பிரியாணி காலி

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டதின் விளைவாக, அவருக்கு அண்டாக் கணக்கில் பிரியாணி ஊட்டப்பட்டு வருவது தெரிந்ததே!

அதை முன்னிட்டு, வருங்கால முதல்வர்கள் ஒன்று கூடி, கு.ஜ.மு.க செயலாளர் கைதுக்கு சரியான பாடம் புகட்டுவது என்றும், வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சரியான தலைவலியைக் கொடுப்பது எனவும், வலையுலக மாவீரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் மாவீரன் அவர்கள் அனைவரும் அமைதி காத்து, எழுத்துப் பணிக்கு எந்தத் தொய்வும் ஏற்படா வண்ணம் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; ஆனால் மீண்டும் தர்மம் வென்றே தீரும்! கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் வாழ்க! வாழ்க!!

பிரபலங்கள்!


முன்னாள் நண்பர்கள்
இந்நாள் துருவங்கள்
வரும்நாள் பிரபலங்கள்!

”A celebrity is a person who works hard all his life to become well known, then wears dark glasses to avoid being recognized - Fred Allen

Monday, August 31, 2009

பதிவுலகில் மெளனப்புரட்சி!

வருங்கால முதல்வர் நாற்காலிக்கு யாரோ பேர் அடிபடுதாமே? அதான், நாமும் வந்து வருங்கால முதல்வர் நாற்காலியில உட்கார்ந்து பாக்குற நினைவு வந்துச்சு; வந்தேன். சரி, வந்ததும் வந்தோம், ஒரு தகவலைச் சொல்லிட்டுப் போலாமுன்னு.... இஃகிஃகி!

நாம கோயம்பத்தூர் CIT, Coimbatore Institute of Technologyலதான குப்பை கொட்டிட்டு இருந்தோம். அங்க பாருங்க, கைலாசு விடுதி, கைலாசு விடுதின்னு ஒன்னு இருக்கு. அங்கதான் புளிச்ச மோரை சக்கரை போட்டுக் குடிச்சுப்பிட்டு, அவுத்து விட்ட கழுதைகளாட்டம் மேலுக்கும் கீழுக்கும் திரிஞ்சுட்டு இருப்போம்.

திடீல்னு நெனைச்சா, லுங்கிய லேசா மேல எடுத்து தொங்கட்டானுட்டுக் கட்டிகிட்டு, பின்னாடி வழியா அப்பிடியே ரெயில் ரோட்டைத் தாண்டி, மணீசு தியேட்டர் முன்னாடி இருக்குற சிவசாமி அண்ணனோட பேக்கரிக்கு போவோம். போயி, அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு அலப்பறை செய்யுறது.

அப்புறம் North District Vs South Districtனு சண்டையப் போட வேண்டியது; அது ரொம்ப out of fashion ஆயிப் போச்சுன்னா, Kapil Vs Gawaskar, Kamal Vs Rajini, இப்படி எதனா ஒன்னை வெச்சிகிட்டு இரகளையப் பண்ண வேண்டியது.... காசு, கீசு எதுவுந்தராம எடத்தைக் காலி பண்ணிட்டு வர வேண்டியது.... இப்படி அப்பப்ப வெகு சகசமா நடக்கும்.

அப்ப அந்த சிவசாமி அண்ணங் கேக்குறது, டேய் நாசமாப் போன வாலுகளா, நீங்க எந்த குரூப்புடா? இப்பிடி, குரூஊப் குரூஊப்பா வந்து அழிச்சாட்டியம் பண்ணுறீங்களேடான்னு.

அந்த மாதிரி, இப்ப ஒரு குரூஊப்பு வந்து எறங்கி இருக்குது. வேற எங்க, நம்ம பதிவுலகத்துலதான்.... சும்மா, கவிதை என்ன? கட்டுரை என்ன?? வெச்சு, வெளுத்து வாங்கறாங்கப்பா... கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுல வெச்சி, ஒரு அம்மணியப் பாத்ததீமு அந்த நடிகர் சொன்னாராம், ‘hey, she looks very fresh man...'னு...

அய்ய... அது யாரு எதுக்குங்ற கர்மமெல்லாம் நமக்கெதுக்கு? நான் என்ன சொல்ல வந்தன்னா, இவுகளும் அந்த மாதர ஒரு புது பொலிவோட வந்திருக்காங்க... அவங்க ஆக்கங்களையும் சித்த போயிப் பாருங்க....
கூடவே அவங்க அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சொல்லிகிடுறேன்!

க.பாலாஜி
கதிர் - ஈரோடு
ஆரூரன் விசுவநாதன்
செல்வனூரான்
seemangani
தியாவின் பேனா பேசுகிறது...
sakthi
கபிலன்
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார்
ரிஷபன்
ரவிபிரகாஷ்

மேல சொன்னவங்க எல்லாருமே விற்பன்னர்களா இருக்காங்க... வலைச்சரத்துல எழுத வேண்டியது.... கொஞ்சம் தவறிப்போச்சு... இஃகிஃகி!!

Monday, July 13, 2009

மன நோயாளிகள் அதிகரித்து விட்டனரோ?


சென்னை மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை சிரமங்கள்/நல்லது அது பத்தி ரம்யாவின் பார்வை!!


அனைவருக்கும் வணக்கம்!!

சென்னை மத்திய தர வர்க்க பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள். இவர்களைப் பற்றி பிரபல வலைப்பதிவர் குடுகுடுப்பையார் மற்றும் வருங்கால முதல்வர் என்னை எழுத அழைத்திருக்கிறார்.

ஆழமா சிந்திக்க வேண்டிய தலைப்பு இல்லையா. அதனால் தான் எழுத கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்க நண்பா!!

குடுகுடுப்பையார் கேட்டிருக்கும் மத்தியதரப் பெண்கள் சந்திக்கும் பல நிதர்சனங்களைப் பார்க்கலாம் வாங்க!!

முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு முன்

மத்தியதர குடும்பத்தில் பிறந்த பெண் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. இந்தப் பிரிவில் பிறந்த பெண்களுக்கு எல்லாமே சவாலாகத்தான் இருக்கின்றது. பெண்கள் எது செய்தாலும் சவாலாகத்தான் நினைக்கிறார்கள். அது இல்லை என்று சொல்ல இயலாது. ஆனால் தலைப்புக்கு ஏற்றவாறு எழுதுகின்றேன்.

வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவிய பின் தனது வேலைகளையும் முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டால், சில சமயம் வீட்டிற்கு அன்றாட தேவைகளான பொருட்கள் தீர்ந்து விட்டன என்பதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும். சகோதர மற்றும் சகோதரிகள் தேவைகளை ஆர்பாட்டத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் கடந்து தலையை சிலுப்பிக் கொண்டு கிளம்பினால், அரசு பேருந்து வராது. மீறி சில நாட்கள் சென்ற உடனே பேருந்தில் ஏறும் பாக்கியம் கிடைக்கும் . ஏறிவிட்டாலும் நிம்மதியாகப் போக முடியுமா?? ["வேறு என்ன இடி, உரசல்கள் இதைத்தான் கூறுகின்றேன் :( "]. தினம் தினம் சந்திக்கும் அவமானங்கள்தான் எவ்வளவு?


எண்ணிலடங்கா வேதனைகளுடன் அலுவலகத்தில் நுழையும்போது நேரம் கடந்திருக்கும். அதற்கு யார் யாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டுமோ அனைவரிடமும் தங்கு தடையின்றி கிடைக்கும். அவற்றையும் சமாளிக்க வேண்டும். மனதில் எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அலுவலகத்திருக்கு தாமதமாக வராமல் இருக்க, ஆட்டோவில் வரலாம், பல நாட்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை, கையில் தாராளமாக பணம் இருந்தால் ஹோட்டல்லே இருந்து வரவழைத்துச் சாப்பிடலாம். கையிருப்பு குறைவதால் காலை உணவு கட். ஏன்னா சில சமயங்களில் சாப்பிட கூட நேரம் இருப்பதில்லை அதான் காரணமா? எப்போதும் முகத்தில் ஒரு சோகம். அவளின் வசீகரம் வறுமையால் களவாடப் பட்டு விடுகின்றதே. இதெல்லாம் வேறே எங்கே? இந்த மத்தியதர வர்க்க பெண்களிடம் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் எவ்வளவு பேர் கண்ணில் படுகிறார்கள். அதில் என்பத்தைந்து சதவிகிதம் பெண்கள் தேவைக்குத்தான் வேலைக்கு செல்கிறார்கள். தேவைகள் என்பது குடும்பத்தேவைகள்தான்.

பெண்கள் அவர்களின் தேவைக்கு வேலைக்கு செல்வதும் இருக்கின்றது. அவர்களைப் பற்றி இப்போது பேசவேண்டாமே.

மறுபடியும் நம் தலைப்புக்கே வந்துவிடுவோம். நல்ல ஆடைகள் அணிய முடியாது. மீறி உடுத்த ஆசைப் பட்டால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு இவளின் கஷ்டம் புரியாது. உழைப்பின் முழு வீச்சு என்னவென்று பார்த்தால் கடமை கடமை மட்டும்தான் காணப்படும். குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்ல தேவையே இல்லே. எல்லாருடைய கஷ்டத்திலும் பங்கெடுத்து தன்னோட தேவைகளை யோசிக்கும்போது அருகில் இருக்கும் உறவுகள் குறைவாகவே இருக்கும். காலமும் கடந்து போயிருக்கும். இவை எல்லாம் இல்லை என்று ஒருவரும் மறுக்க இயலாது. கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் உதாரணங்கள்தான் இத்தைகைய பெண்கள்.

முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு பின்

எப்படியோ சில குடும்பங்களில் முட்டி மோதி பெற்றோர்கள் திருமணத்தை முடித்து விடுவார்கள். கணவன் மட்டும் வேலைக்குப் போனால் அன்றாட தேவைகள் மட்டுமே கவனிக்க முடியும். எண்ணி சுட்ட பணியாரமாகத்தானே இந்த பெண்களின் வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பற்றாகுறை இருப்பதும் வழக்கம்தான். தேவையான தேவைகளும் அங்கே கட்டுப் படுத்தப்படும். குடும்பத் தரத்தை உயர்த்தலாம், அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்திக் கொள்ளலாம், அந்த வீட்டு குத்து விளக்கான மருமகளும் அத்தியாவசியத் தேவைகளை மனதிலே இருத்தி வேலை என்ற ஆயுதத்தை, கையிலே எடுத்தால்தான் அந்த வீடே வெளிச்சத்திற்கு வர சாத்தியமாகும். கணவரின் உடன் பிறப்புகளுக்கு, படிப்பில் உதவி மற்றும் திருமணத் தேவைகள், மாமனார் மற்றும் மாமியாரின் உடல் நலம் பேணுதல் இவைகள் அனைத்தும் கடமை என்ற கட்டுக்குள் வந்துவிடும். இதற்கிடையே தனது குழந்தைகளும் கவனிக்கப்பட வேண்டிய கட்டாயம் எதில் வரும் என்ற நினைப்பே வராத அளவிற்கு உழைப்பு அவர்களின் எண்ணங்களை விழுங்கிவிடும்.

ஒருவரின் வருமானத்தில் மேற்கூறிய எதுவுமே சாத்தியமாகாது. இப்படி ஆரம்பித்த பெண்களின் சேவைகள் தொடர்கின்றன. குடுபத்திற்காக பல தியாகங்கள், பிறகு குழந்தைகளுக்காக பல தியாகங்கள். அந்த பெண்ணின் தியாகத்திற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விடுகின்றது. திரும்பிப் பார்ப்பதற்குள் தனது வாரிசுகளின் திருமண வைபவம் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும். கஷ்டங்களுக்கு நடுவே திருமணம் செய்து நிமிர்ந்தால், திருமணத்தை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள். எல்லாம் முடிந்து அப்பாடா என்று அமர்ந்தால் அதீத உழைப்பின் காரணமாக நோய் என்ற அரக்கன் கணவனை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பிப்பான். அப்போதும் தனக்கென்று எதையும் யோசிக்காமல் மறு அவதாரம் எடுப்பாள் அந்த பெண் என்றால் அது மிகையாகாது. இப்படி வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாகிப் போன அந்த பெண் தனது முதுமைக் காலத்துக்கு சேர்த்து வைத்ததுதான் என்ன? இது பெரும் கேள்விக் குறியல்லவா? அவளின் மனதில் தியாகம் தியாகம் அது ஒன்றுதான் தாரக மந்திரமாக கொழுந்து விட்டு எரியும் அணையா விளக்காகாக எரிந்து கொண்டிருக்கும்.

இந்தப் போக்கு மாறவேண்டும். சிலரிடம் மாற்றங்கள் தெரிகிறது. ஆனால் அன்றாட தேவைகளின் தொல்லைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள், கொஞ்சம் வெளியே இருந்து பிரச்சனைகளை அணுக வேண்டும். அப்போதுதான் தேவைகள் என்ற நிலை மாறி அடிப்படை தேவைகள் எவை என்று உணர ஆரம்பிப்பாள். இந்த நிலை அந்த பெண்ணின் சராசரி பெண்ணின் மனநிலையில் இருந்து சற்று மாறுபட்டு யோசிக்கத் தோன்றும். இந்த மாற்றங்கள் பல வகையிலும் ஏற்றங்களை அடைய காரணமாகிறது.

உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இது போல் கஷ்டங்கள் தீர்வுள்ள கஷ்டங்கள்தான். அவர்களுக்கு பற்றாகுறை என்பது இருக்க நியாயம் இல்லை.

அதே போல் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருபவர்களுக்கும் பற்றாகுறை, தேவைகள் இதெல்லாம் எதுவும் வெகுவாக பாதிப்பது இல்லை. அன்றாடம் உழைத்து சாபிட்டாலே அவர்களுக்கு வாழ்க்கை நிறைவைத் தருகிறது.

இடையே அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் தவிப்பவர்கள் நமது தலைப்பில் அடங்கிய மத்தியதர பெண்கள்தான் தீர்வில்லா பல இன்னல்களை அடைகிறார்கள் என்று கூறுவதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.


மத்தியதர வர்க்க பெண்கள் வேலைக்கு செல்வதால் ஏற்படும் [எனக்கு தெரிந்த] நன்மைகள்


இதில் நல்லது என்று எடுத்துக் கொண்டால் சிலவற்றை மேற்கோள் காட்டலாம். வசதிகளைப் பெருக்கிக்கொள்ளலாம். நல்லது கெட்டது செய்யும்போது நிறைய யோசிக்க அவசியம் இல்லை. இருவரும் சேர்ந்தே செய்வதால் சிரமம் குறையும். குழந்தைகளை விரும்பிய பள்ளியில் சேர்க்க முடியும். இப்போ எல்லாம் குழந்தைகள் படிப்பே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. பல கஷ்டங்கள் இருந்தாலும் பலர் தனது குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்து விடுகின்றார்கள். இது மத்தியதர வர்க்க பெண்களின் வெற்றி என்று தான் கூறவேண்டும். இந்த வெற்றியின் பின்னணியில் பெண்களின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். பாங்காக குடும்பம் நடத்தி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, தானும் மகிழ்ந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்வித்து, தனது வாரிசுகளையும் வழிநடத்தி வெற்றி வாகை சூடிய பெண்கள் பலரை உதாரணமாகக் காட்டலாம்.

கூட்டுக் குடித்தனமாக இருந்தாலும் தனிக் குடித்தனமாக இருந்தாலும் கணவனைச் சார்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒன்று விடாமல் செய்து வருவதிலும் நமது மத்தியதரப் பெண்கள் கில்லாடிகள். சுமைகள் இருந்தாலும் அதை சுமையாகக் கருதுவது இல்லை. இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கின்றீர்கள், அதற்கு என் பதில் சாத்தியம்தான். இப்படித்தான் வாழ்க்கையை சமப்படுத்தி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இப்படி கூறி கொண்டே போனால் இன்னும் எவ்வளவோ?

நான் விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன்.

இத்துடன் படித்த அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த குடுகுடுப்பையாருக்கு நன்றிகள் பல.

டிஸ்கி: இதில் எழுதியவைகள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் புண் படுத்த அல்ல.

மறுபடியும் வாய்ப்பளித்த குடுகுடுப்பையாருக்கு என்நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





Tuesday, June 23, 2009

புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்


"ராஜாதிராஜ! ராஜமார்த்தாண்ட! ராஜ கம்பீர!" இந்த வார்த்தை தமிழகத்தில் பலருக்கும் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ கேட்கும் வசனம். ஆனால் புதுக்கோட்டைக்காரர்களுக்கு உணர்வோடு ஒன்றிய வார்த்தை இது. காரணம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின் கீழ் மகத்தான சாதனைகள் பல படைத்து வந்த தனி தேசம்.

பிரிட்டீஷ்சாரே ஆள முடியாத அளவிற்கு பவர்ஃபுல் தேசமாக இருந்ததா என்றால் அதற்கு விடை இல்லை என்பதே. புதுகையை ஆண்டு வந்த தொண்டைமான் மன்னர்கள் பிரிட்டீஷாரோடு நட்புறவில் இருந்ததால் பிரிட்டீஷ்சார் தங்கள் ஆளுகையின் கீழ் புதுகை சமஸ்தானத்தைக் கொண்டு வராது தனிநாடாகவே இயங்கவிட்டு இருந்தனர். தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.

இப்ப கொஞ்சம் ஆதிகாலத்துல இருந்து எங்க வரலாறைப் பார்ப்போம்.

வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை போகட்டும் என்றூ கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகாள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

பிராமிக் கல்வெட்டு

பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன.சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"
என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமனமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.
சங்ககாலம்

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குத் தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது.
பன்றிநாடானது கோனாடு, கானாடு ன இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தத். வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்று, தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் வழங்கியது. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு பறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூறில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள்.புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்றூ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதுக்கோட்டையில் ரோமாபுரி
திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு முத்து மணிவகைகள் பருத்தி பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,

மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை சென்னை புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
சங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர,சோழ,பாண்டியரைக் களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.

ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.

களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பெளத்தம்,சமணம்ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

முதல் பாண்டியப் பேரரசு
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி கலப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து பாண்டியன் கடுங்கோன் பாண்டி நாட்டைப் பகுதிகளைக் கைப்பற்றினான். பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடுங்கோன் கி.பி 590 முதல் 620 வரை ஆட்சி செய்தான். ஏறத்தாழ இதே காலத்தில் பல்லவ மன்னன் விஷ்னுசிம்மன்(கி.பி 575 - 600) தொண்டை மண்டலத்தில் களப்பிரரை வென்று அங்கு பல்லவர் ஆட்சியை ஏற்படுத்தினான்.புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின்ஆளுகைக்குட்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரனதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமார ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுனவர்மன்(862-880)வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் சோழர் மற்றும் பல்லவர் கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான்.

தொடர்ந்து பராந்தகவீரநாராயனனும்(கி.பி 880 - 900) மாரவர்மன் இராஜசிம்மனும்(கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் வீரபாண்டியன்(கி.பி 946 - 966) ஆவான், இவன் 2ஆம் ஆதித்ய சோழனால் முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.

பல்லவர்
தொண்டை மண்டலத்தில் கி.பி 575 வாக்கில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள் நடந்து கொண்டேயிருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டு முடிவில் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்திரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர் ஆட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர.

இதற்கு அப்புறம் துவங்கியது எங்க தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம். இப்ப டைப் அடிச்சு கை வலிக்குது. அதுனால அடுத்த பாகத்தில் தொடர்ந்து சந்திப்போம்
(தொடரும்)


Tuesday, June 16, 2009

ஈழம் :சில கேள்விகளும் பல பதில்களும்

ஈழம் :சில கேள்விகளும் பல பதில்களும் புல்லட் பாண்டி யாழ்ப்பாணம்.

இந்த பதிவில் யாழ்ப்பாண பதிவர் புல்லட் பாண்டி ஆக்கப்பூர்வமான கேள்விகள் எதிர்பார்க்கிறார்
முடிந்தால் எழுப்புங்கள்.

டிஸ்கி : பதிவு என்னுடையதல்ல, கருத்துக்களை அவரின் பதிவிற்கு சென்று வழங்கவும்.

Friday, June 12, 2009

வைகோவுக்கு வேண்டுகோள்

பொதுவாக நான் அரசியல் பதிவு எழுதுவதில்லை, இந்தப்பதிவு வைகோ என்ற நல்ல மனிதர் சமீபத்தில் அடிக்கும் கூத்துக்கள் தருவிக்கும் கோபத்தினால் எழுதுகிறேன்.

ஈழ்த்தமிழர் பிரச்சினையில் இன்றைய தேவை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் இல்லை என்ற ஆராய்ச்சியோ, வெடி வைத்து தகர்த்தது விடுதலைப்புலிகள் என்று என்று உரக்கப்பேசி முள் கம்பியின் பின்னால் இருக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தை தேடித்தருவதோ அல்ல.பிரபாகரன் பற்றியே பேச்சு இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு நினைப்பதை சரியாக நீங்கள் செயல் படுத்துகிறீர்கள்.

அந்த மக்களுக்கு இன்றைய தேவை உயிர், உணவு அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துதல், சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை காணுதலே தவிர வெற்றுக்கூச்சல் அல்ல. நீங்கள் இடும் கூச்சலினால் என்ன பயன் என்று இரவில் தூங்கும் முன் யோசித்துப்பாருங்கள்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்,நீங்கள் நேர்மையானவர்,ஈழத்தமிழர் பால் உங்கள் அக்கறை உண்மையானது என்ற நம்பிக்கை பெரும்பாலனவருக்கு இன்னும் உண்டு.உங்களால் முடிந்தால் அவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளை யார் காலில் விழுந்தாவது செய்யுங்கள்.

கிட்டதட்ட 2000 குழந்தைகள் போரில் அநாதையாகி உள்ளனர். அவர்களின் கல்விக்கு எதையாவது செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.இன்றைய உலகம் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடிதான் செல்கிறது, செல்லும். வலிமை இல்லாதவன் கத்தினால் அடிதான் விழும். நீங்கள் நெல்லையில் இடும் கூச்சலுக்கு முல்லையில் தமிழன் அடி வாங்கக்கூடாது.

தமிழினம் வலிமையாக கூச்சலற்ற விவேகம் , வீரம்,நட்பு தேவை அதற்கான வழியைப்பாருங்கள் இல்லாவிட்டால் கலிங்கப்பட்டி சென்று வாலிபால் விளையாடுங்கள்.

உங்களுடைய மதிமுகவின் முதல் குடவாசல் கூட்டத்திற்கு சிறுவனாக இருந்தபோது செங்கல் லாரி ஏறி வந்து பார்த்தவன் என்ற உரிமையில் குடுகுடுப்பை.

Friday, May 22, 2009

பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.

பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.

இந்த தேர்தல் முடிவு காட்டும் செய்தி காங்கிரஸ் கட்சி வடக்கில் மாநிலக் கட்சிகளிடம் இழந்த செல்வாக்கினை ராகுல் காந்தியின் கவர்ச்சியால் மீண்டும்
பெறத்தொடங்கியுள்ளது. காங்கிரஸின் இந்த வளர்ச்சி கண்டிப்பாக தொடரும், காங்கிரஸின் இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய தோல்வி அடையப்போவது முலாயம்சிங், லல்லு , கம்யூனிஸ்ட்கள்,சரத்பவார் மற்றும் மாயாவதியின் கட்சி.

தனிப்பட்ட முறையில் மாயாவதி தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் ஒழியவேண்டும் என நினைப்பவன் நான். அதன் ஓட்டுக்கள் காங்கிரஸிகும், பாரதீய ஜனதாவிற்கும் சென்றடைய வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி ஏன் தோற்கிறது? முதற்காரணம் கிராமப்பகுதிகளில் உள்ள காங்கிரஸின் செல்வாக்கை ராமர் கோவில் கட்டுகிறேன் என்று சொல்லி ஓட்டாக ஒரு நாளும் மாற்ற முடியாது.

இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் வாரிசு மன்னரையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.நேரு குடும்பம் இல்லாமல் இருந்தால் காங்கிரஸ் காணாமல் போயிருக்கும் என்பதும் உண்மை.வாஜ்பாயிக்கு இருந்த செல்வாக்கை வைத்து பாஜக கட்சி வளர்த்திருக்கலாம், ஆனால் பாஜகவின் தலைவராக ஒரு வாரிசு வாஜ்பாய் இருந்திருக்கவேண்டும்.

அத்வானியை ஓரளவிற்கு மக்களுக்கு தெரியும், ராஜ்நாத்சிங்கை யாருக்கு தெரியும், அவர் தனியாக நின்றால் 500 ஓட்டு கூட வாங்கமாட்டார்.மன்மோகனும் வாங்கமாட்டார், ஆனால் அவருக்கு நிர்வாகத்திறமை இருக்கிறது.ராஜ்நாத்துக்கு ?

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுகிறோம் என்ற வெற்றுக்கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக முன்னேற்ற அரசியலில் அது ஈடுபடவேண்டும்.என்னதான் சொன்னாலும் பாஜக இந்துக்களின் கட்சி என்ற முத்திரை போகப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலையில் பெரும்பாண்மை இந்துக்களுக்கான கட்சியாகவும் இல்லை என்பதும் உண்மைதானே. எத்தனை தலித்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்? காரணம் அது உயர்சாதியத்தை விட்டு வெளியில் வரவேண்டும்.

இந்துக்களின் காவலன் என்று சொல்ல நினைத்தால், முதலில் அக்கட்சி செய்யவேண்டியது, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருவது.வழிபாட்டு உரிமையை மறுக்கும் உயர்சாதி இந்துக்களிடம் எடுத்துச்சொல்லி புரியவைப்பது பாஜக மற்றும் அது சார்ந்த இந்து இயக்கங்களின் கடமை.இதனை தமிழகத்தில் கடவுள் மறுப்பு இயக்கங்கள், திருமாவளவன் போன்றவர்கள் கருவறை நுழைவு போராட்டங்கள் நடத்தியபோது நாத்திகனுக்கு என்ன கவலை என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம். இப்போது அந்தக்கடமை ஆத்திகர்களும் இந்து மத இயக்கங்களுக்கும் உண்டு.

மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக முன்னேற்றத்தை கொண்டு வர முனைவது, மாயாவதியை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்து அவரை தலைவராக்கலாம்.

இது பெரியார் செய்த வேலை, ஆமாம் இதைத்தான் பாரதீய ஜனதா செய்யவேண்டும். அவர் ஏற்படுத்திய கலகம் விழிப்புணர்வை கொடுத்தது.
பாஜக இது போன்ற சமூகத்தொண்டுகளில் ஈடுபட்டு இந்துக்களுக்குள் இருக்கும் சாதி வெறுப்பு உணர்வை களைந்து அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வாழ்வுரிமையை பெற்றுந்தந்தால் அதுதான் அக்கட்சியின் வெற்றி.இதனை விடுத்து மத அரசியல் செய்தால் அக்கட்டி அழிவுப்பாதைக்கே செல்லும்.மத அரசியலில் செல்லும் அனைத்து நாடுகளும் அழிவுப்பாதைக்கே செல்லும்.

இன்னும் இருபது வருடங்களுக்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது, மேலே சொன்னமாதிரி சமூகப்பணிகளின் அக்கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டால், ராகுல் காந்தி நேருவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆட்சி மாற்றம் நடக்கவேண்டும்.(கோமாளி மூன்றாவது அணியால் அது நடந்தால் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.) இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

எனக்கு அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக கிடையாது,பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை கூறவும். குறிப்பாக பாஜக , காங்கிரஸ் ஆதரவாளர்கள்.

Sunday, May 17, 2009

தி.மு.க , அ.தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள்.

தி.மு.க , அ.தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள்.

முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை மீண்டெழ முயற்சிக்கிறது, தி.மு.கவும் அ.தி.மு.கவும், பீனிக்ஸ் பறவை தனியாக எழுந்து வர உதவ முன் வரவேண்டும். இரண்டு கட்சிகளும் நடுநிலையுடன் இருந்து பீனிக்ஸ் பறவையின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

Wednesday, April 8, 2009

ஈழம் - ஒரு வேண்டுகோள்.

ஈழச்சகோதரி தூயா வலை உலகத்தமிழர்களுக்கு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வர தமிழ்ப்பதிவர்களை ஒரு பதிவு எழுத சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-----------------------------
உலக சமுதாயமே இலங்கையில் நடக்கும் தமிழினப் இனப்படுகொலைகளுக்கு சாட்சிகள் தேவை,அதனால் இலங்கை அரசிடம் கெஞ்சிக்கூத்தாடி வெளிநாட்டு ஊடகங்களை போர் நடக்கும் இடத்திற்கு அனுமதிக்க செய்யுங்கள்.நீங்கள் போரை நிறுத்தி எஞ்சியிருக்கும் மக்களை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இழந்து விட்டதால், இனப்படுகொலையை உலக ஊடகம் காட்சிப்படுத்தினால் பின்னோரு நாளில் நீங்கள் மியூசியத்தில் வைத்து இப்படியெல்லாம் ஒரு இனம் கொலை செய்யப்பட்டது என்று காட்ட வசதியாக இருக்கும்.

---------------------------------
ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

அங்கே நடக்கும் அனைத்தையும் புலம் பெயர் தமிழர்களாக இருப்பினும் ஓரளவிற்கு நீங்கள் அறிவீர்கள்,நாங்கள் தெரிந்து கொள்வது ஊடகங்கள் மூலமே. உங்கள் கருத்துக்களை தமிழ்ப்பதிவுகளாக எழுதுவதினால் அது அனைவரையும் அடையப்போவதில்லை. ஆங்கிலத்தில் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் , இந்தி தெரிந்தால் இந்தியில் பதிவெழுதுங்கள்.மேலே நான் என் ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். அது 200 பேருக்கு மேல் சென்றடையப்போவதில்லை.

சரியான அனுகுமுறையை கையாண்டு அப்பாவிகளின் உயிர்களை காத்திடுங்கள்.

தொடர்புடைய முந்தைய பதிவு

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம். ~ வருங்கால முதல்வர்

Wednesday, April 1, 2009

வேட்பாளர்கள் தேவை.- அவசரம்.

இந்திய ஜனநாயகத்தின் தூண்களே, நான் ஆரம்பித்திருக்கும் புதுக்கட்சியான குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகத்திற்கு 40 தொகுதியில் நிறுத்துமளவிற்கு என்னுடைய குடும்பத்தில் ஆட்கள் இல்லாத காரணத்தினால், வெளியாட்களையும் வேட்பாளர்களாக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் என் கட்சி தள்ளப்பட்டுள்ளது. என் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் இல்லாத காரணத்தினால் 40 தொகுதிகளில் என் கட்சி சார்பாக நீங்களே வேட்புமனுக்களை தாக்கல் செய்து கட்சியை வளப்படுத்த வேண்டுகிறேன்.

இதற்காக கட்சிக்கு நீங்கள் காசோலையெல்லாம் அனுப்பவேண்டாம்.ஆனால் சுயேச்சை சின்னமாக உடுக்கையை தேர்ந்தெடுக்கும்படி ஜனநாயகத்தின் முதல் தூண்களை கேட்டுக்கொள்கிறேன்.விரைவில் ஆட்சியை பிடிப்போம். கட்சி வளரும்.நம்பிக்கையை தொலைத்துவிடாதீர்கள்.

இப்படிக்கு எங்கேயும் ஓட்டுப்போட வக்கில்லாத

குடுகுடுப்பை.

தலைவர்

குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.

Monday, March 9, 2009

தருமபுரி @ தகடூர்

முதலில் நண்பர் குடுகுடுப்பையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவரை நீண்ட நாட்களுக்கு காக்க வைத்துவிட்டேன். அவ்வளவாய் நேரம் இல்லாததே காரணம். இங்கு எல்லோரும் மிக சிறபபாக தங்கள் ஊர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். என்னால் அந்த அளவு சிறப்பாக எழுத முடியாது. முடிந்த வரையில் எழுதி இருக்கிறேன். தயவு செய்து படிக்கவும்.. இல்லைனா அழுதுடுவேன்.. என்னையும் மதித்து எழுத சொன்னதுக்கு நன்றி தோழரே.

தர்மபுரி @ தகடூர்
1965ஆம் ஆண்டு (02.10.1965) தனி மாவட்டமாக பிரிக்கும் வரை சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தனி மாவட்டமாக பிரித்தவுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. பின்பு 2004ல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளை பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களையும் கர்நாடகாவின் எல்லையையும் எல்லையாய் கொண்டு அமைதிருக்கிறது எங்கள் தர்மபுரி.

இப்போது தர்மபுரி மாவட்டம் என்பது ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி , மொரப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. சுமார் 4500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் இருக்கிறது.

எங்கள் தர்மபுரியை பற்றி சில விவரங்கள்
வருவாய் வட்டங்கள்
1.தர்மபுரி 2.அரூர்

தாலுகா ( வட்டாட்சிகள் )
1. தர்மபுரி 2. அரூர் 3. பென்னாகரம் 4.பாப்பிரெட்டிபட்டி 5. பாலக்கோடு

மிகவும் வெப்பமான பகுதி. கோடையில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குளிர்காலங்களில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும்.மாவட்டம் முழுவதுமே பரவலான கனிம வளமிக்க பகுதிகள் இருக்கின்றன. எங்கள் ஊருக்கு அருகில் மாலிப்டினம் பெருமளவில் கிடைக்கின்றன. பரவலாக கருங்கல் குவாரிகளும் உண்டு,
[அதியமான் கோட்டம் கோவ]
  • எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு. அந்த அளவுக்கு அந்த மண்ணுக்கு பெருமை மிகு வரலாறுகள் உண்டு. பேரே சொல்லும் மண்ணின் மகிமையை. தர்ம புரி. மன்னராட்சிகள் நடந்த காலத்தில் தர்மபுரிக்கு தகடூர் என்று பெயர். கடைசி ஏழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி அஞ்சாமல் ஆண்ட பூமி எங்கள் பூமி. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் அதியமான் கோட்டை என்றே அழைக்கப் படுகிறது. அதியனின் வீரத்திற்கு ஏராளமன வரலாறுகள் உண்டு. ஆனால் அவரை அனைவரும் அறிவது ஒரு முக்கியமான செயலுக்காக. அது, மிக அபூர்வமாக காய்க்கும் ஒருவகை காட்டு நெல்லிக்கனியை உண்டால் மரணம் கிடையாதாம். அந்தக் கனி அதியனுக்கு கிடைத்ததும் தான் உண்ணாமல் ஒளவை பாட்டிக்கு தந்து அவர் மரணம் அடையாமல் தமிழில் மேலும் பல செய்யுள்கள் படைத்து தமிழை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அந்தக் கனியை அவருக்கு அளித்துவிட்டார்.
  • மாம்பழம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலம். ஆனால் சேலத்திற்கும் மாம்பழத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம், சேலத்துக்காரர்களும் அதை சாப்பிடுவார்கள். அவ்வளவுதான். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தான் பாழ்மபழம் பெருமளவில் விளையும் பூமி. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்ததால் மாம்பழமும் சேலத்துக்கு சொந்தமாகி விட்டது. இப்போதும் கிருஷ்ணகிரி - தர்மபுரி நெடுஞ்சாலையில் ஏராளமான மாம்பழக் கூழ்(pulp) தொலிற்சாலைகள் இருக்கின்றன.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த திரு,ராஜாஜி அவர்கள் பிறந்தது ஓசூருக்கு அருகில் இருக்கும் தொரப் பள்ளி கிராமத்தில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டம். அவர் சேலம் மாநகராட்சி சேர்மனாக இருந்ததால் பலரும் அவரை சேலத்துக்காரர் என்றே நினைக்கிறார்கள்.

[விடுதலைப் போராட்ட வீரர் திரு. சுப்ரமனியம் அவர்கள் திரு உருவ சிலை]
[திரு. சுப்ரமணியம் சிவா அவர்களின் மணிமண்டப நுழைவாயில்]
  • இந்திய சுந்தந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திரு. சுப்ரமனியம் சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுப் பயணம் செய்த போது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தன் இன்னுயிரை விட்டார் (1921). அங்கே அவருக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

[பரிசல் சவாரி]
[ரம்மியமான பரிசல் பயணம்]
[ஐந்தருவி]
  • எல்லோருக்கும் தெரிந்த மிக முக்கியமான இடம் ஒகேனக்கல் முக்கியமான சுற்றுலாத் தலம். இதுவும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியே. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி தான் ஒகேனக்கல். பெரிய நீர்வீழ்ச்சிகள் ( ஐந்தருவிகள்) , தொங்குபாலம் , பரிசல் பயணம் மற்றும் ஆயில் மசாஜ் இங்கு சிறப்பம்சங்கள். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தொடர்ந்து பேருந்து வசதிகள் இருக்கு.
  • அரூர் அருகில் தீர்த்தமலை என்னும் புன்னியஸ்தலமும் அமைந்துள்ளது. சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தான் எங்கள் பகுதி மக்களுக்கு திருப்பதி. சிறுவயதில் அடிக்கடி சென்றிருக்கிறேன். புளிசாதம் கட்டிக் கொண்டு தான் போவோம். உடைத்த தேங்காயை கடித்துக் கொண்டு புளிசோறு சாப்பிடும் சுகமே தனிதான். குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. ஆண்டுதோறும் நடைபெரும் தீர்த்தமலை தேர் திருவிழா மிக பிரபலமானது. அங்கே சில நம்பிக்கைகள் உண்டு. அந்த மலையை புகைப் படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள். அது நிஜமல்ல. இன்னும் கூட அந்த தீர்த்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்விபட்டேன். தீர்த்தம் வரும் துவாரத்தை அவ்வப்போது குரங்குகள் கைவைத்து அடைத்துக் கொள்ளும். அப்படி செய்தால் பெரிய பாவம் செய்தவர்களோ அல்லது மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்ணோ அந்த கூட்டத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாம். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் குற்றம் செய்பவர்களுக்கு தெய்வ குற்றம் பற்றிய பயம் ஏற்படுத்தத்தான். அந்த குரங்குகள் அடிக்கடி தண்ணீரை அடுத்துக் கொள்ளும். சோழ மற்றும் விஜயநகர அரசர்களின் ஆதரவால் கட்டப் பட்டது. அரூரில் இருந்து 5 கிமீ தொலைவில் சேலம் சாலையில் விஜயநகரம் என்ற சிறிய ஊர் கூட இருக்கிறது.
  • எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)
  • எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். :)
படங்கள் : இணையத்திலிருந்து எடுத்தது. எடுத்தவர்களுக்கே சொந்தம். அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாக கருதினால் உரியவர்கள் தெரியபடுத்தவும். நீக்கிவிடுகிறோம்.

அன்புடன்
சஞ்சய்காந்தி
http://sanjaigandhi.blogspot.com ( ஹிஹி.. ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்.. )

Thursday, February 5, 2009

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இலங்கையில் தற்போது நடைபெறும் போரை, உலக நாடுகள் ,இலங்கை மற்றும் விடுதலைப்புலிகள் நிறுத்துவார்களா என்று தெரியவில்லை, தற்போது நடைபெறும் சண்டை எங்களைப்போன்ற இந்தியத்தமிழர்களின் தூக்கத்தை கெடுக்கிறது,இதயம் வலிக்கிறது, இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்யமுடியும் என்று தோன்றவில்லை.

2.5 லட்சம் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்குமே உள்ளது, ஆனால் சொந்த மக்களை கொள்ளும் இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த போரை நிறுத்த அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் அறிவுப்பூர்வமாக பிரச்சினையை எடுத்துச்செல்லவேண்டும்.நட்புறவை உருவாக்கிகொள்ளவேண்டும்.உலகெங்கிலும் துரத்தப்பட்ட யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு அமைத்துக்கொண்டது அவர்களது அறிவினாலும் வல்லரசுகளின் நட்பினாலும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நடக்கும் போரினால் மொத்தத்தில் அங்கே அழிக்கப்படுவது தமிழினம். கிட்டத்தட்ட 25% சதவீதம் இருந்த தமிழர்கள் இப்போது குறைந்து 15% சதவீதம் ஆகிவிட்டனர்.நான் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும் மிகவும் அவசியமானதென்றே கருதுகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

தமிழர் பிரச்சினை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. நடக்கும் இன அழிப்பை தடுக்கத்தான் நம்மால் முடியவில்லை,ஆனால் இனத்தையாவது பெருக்குங்கள்.அவர்களை நல்ல கல்வி கொடுத்து அறிவு சார் சமூகமாக வளருங்கள்.உலகம் ஒருநாள் நல்ல தீர்வு தரும் என நம்புவோம்.

Monday, February 2, 2009

இது லண்டன் மாநகர தண்டோரா!

வணக்கம்!
வணக்கம்!! வணக்கம்!!!

இதன்மூலம் த்மிழ்ப் பதிவுலகத்தில் உள்ள யாவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், லண்டன் மாநகரத்தில் இருந்து கொண்டு, விலை போகும், விலை போகாத பதிவுகள்; கல்லா கட்டும், கட்டாத கடைகள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல், எல்லோரையும் சரி சமமாகப் பாவித்து, சிரத்தையாகவும், காலாய்த்தலாகவும், எள்ளலாகவும் பின்னூட்டங்களை வாரி வழங்கி மகத்தான சேவை செய்து வந்தார் வலைஞர் கபீஷ் அவர்கள்.

அவர் ஆடிக்கு ஒரு பதிவும், அமாவாசைக்கு ஒரு பதிவும் பதிந்து வந்த காரணத்தினாலோ, அல்லது பின்னூட்ட சுதியில் சுணக்கம் ஏற்பட்ட காரணத்தினாலோ என்னவோ, வலையுலக விரோதிகள் அவ்ரது வலையகத்தை ஆட்டயப் போட்டு விட்டார்கள். ஆகவே, வேறொரு வலையகம் அமைத்துக் கொண்டு வரும் வரையிலும் உங்களையெல்லாம் வெகு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கிறார்! அறிவிக்கிறார்!! அறிவிக்கிறார்!!!

Wednesday, January 28, 2009

தஞ்சை மாவட்டம் : தஞ்சை நகரம் அதன் சுற்றுப்புறமும்.

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சை மாவட்ட மக்கள் மொக்கை அறிமுகத்தில் தொட்டும் தொடாமல் இந்நகர் பற்றி பார்த்தோம். நகரில் உள்ள சுற்றுலா,வரலாற்றுத்தலங்கள் பற்றி பல பதிவுகள்,விக்கியில் சொல்லப்பட்டிருந்தாலும் நானும் அதை தொட்டுச்செல்கிறேன்.கடந்த சில வாரங்களாக pbs.org மூலம் இந்தியாவைப்பற்றி ஒரு தொடர் சென்றுகொண்டிருக்கிறது, அத்தொடரில் தஞ்சாவூர்,ராஜராஜசோழன் அதிக நேரம் இடம் பெற்ற போது என் பதிவிலும் கொஞ்சமாவது இடம் பெற வேண்டுமே.

பிற்கால சோழர்களின் தலைநகரான தஞ்சையின் அடையாளம் பெரிய கோவில்தான்.பெரிய கோவில் பற்றிய பதிவு ஒன்று இங்கே.
http://enthamizh.blogspot.com/2008/12/blog-post_30.html
பெரிய கோவிலின் கோபுரச்சுவரில் உச்சிவரை ஏறலாம், இரண்டு சுவர் நடுவில் பாதை,இரண்டு சுவரிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும், இந்த பகுதி பொதுமக்கள் பார்வைக்கு அல்ல. NSS ல் இருந்ததால் அறுபது அடி உயரம் வரை ஒருநாள் கோவில் நிர்வாகத்தினர் அழைத்து சென்றனர்.இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. கோவிலில் முக்கியமான விசயம் கோவிலின் அனைத்து சுவரிலும் உள்ள கல்வெட்டுகள்தான்.கோவில் கட்டிய சோழன் சிலையாக வெயிலில் நிற்கிறார் இப்போது, அதில் உள்ள அரசியல் அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.ராஜராஜன் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது, ஆனால் சோழன் சிலையை எடுத்து வெளியில் வைத்துவிட்டு சென்ற இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு விழாவுக்கு பிரபலங்கள் யாரும் செல்வதில்லை இதில் ஆரிய திராவிட வேறுபாடெல்லாம் இல்லை.

பெரிய கோவில் பக்கத்தில் சிவகங்கை பூங்கா சோழர்காலத்தில் அந்தப்புரம் போல,குந்தவை குளித்த குளம் இன்னமும் கூட இருக்கிறது, இப்போது நகர மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா.யூனிபாமுடன் பள்ளி மாணவ மாணவர்களை ஜோடியாகவும்,என்னைப்போன்றவர்களை தனியாகவும் காணலாம்.ஒரு காலத்தில் நிறைய மான் இங்கு இருந்தது.இப்போது சில மான்கள் இருக்கலாம்.பூங்கா அருகே சிலர் வீணை செய்வதை பார்த்திருக்கிறேன் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.தஞ்சாவூர் ஓவியங்கள்,தட்டு,பொம்மையெல்லாம் எங்கே செய்கிறார்கள்?

மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகள் பாதுகப்பாகமாகவும் உள்ளது இவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்கள்.சரபோஜி மன்னர் காலத்து அரண்மனை மாட்டுக்கொட்டகையில் ஒரு பள்ளிக்கூடமும் அதன் குதிரை லாயத்தில் இன்னொரு பள்ளிக்கூடமும் இப்போது இருக்கிறது.

நகரம் இப்போது விரிந்து வெளியே சென்றுவிட்டாலும், மன்னர் கால நகரத்தின் அடையாளம் இன்னும் உயிரோடு உள்ளது. நான்கு நேரான வீதிகள் தெற்கு வீதி,வடக்கு வீதி, மேல வீதி, கீழராஜ வீதி அதனை சுற்றி நாலு அலங்கம் திசைகளின் பெயரில்.இந்த வீதிகளுக்கு இடைப்படது தான் பழைய நகரம், அதற்குள் இருக்கும் வீடுகளுக்கு வழி தஞ்சை நகரின் புகழ்பெற்ற சந்துகள் அதன் அருகில் ஓடும் சாக்கடை,சந்துகளின் பெயர்கள் இன்னமும் மராட்டிய பெயர்களை கொண்டே இருக்கும்.. இப்போதைய தஞ்சாவூர் ஊரின் எல்லைகளில் இருக்கும் கீழ,மேல வஸ்தாது சாவடிகளை தாண்டிவிட்டது.

மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் இங்கு உள்ளது,தமிழுக்கென தனிப்பல்கலைக்கழகம் உள்ளது, எத்தனை கல்லூரி வந்தாலும் சரபோஜி மன்னர் கல்லூரியும், குந்தவை மகளிர் கல்லூரியும் தான் சிறப்பு. இவை கல்வியில் சிறப்போ இல்லையோ வீரம் ,காதலில் சிறப்பானவை.

மற்றபடி பெரும்பான்மை விவசாயம் மட்டுமே தொழில் ஆகையால் இந்நகரம் மிக அமைதியாகவே காணப்படும்.மருத்துவக்கல்லூரி இருந்த காரணத்தினால் இன்றைய வரைக்கும் மருத்துவ தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வீதிக்கு 10 டாக்டர்கள் இருப்பார்கள். பாலிகிளினிக்குகள்,மீனா சோனா என்று மருந்துக்கடைகள் நல்ல வளம் கொழிக்கும் தொழில்.திருச்சியை விட மருத்துவ வசதி அதிகம் உள்ள இடம்.

மற்றபடி எந்தவித தொழிலும் இல்லாமல் அருகில் உள்ள திருச்சி போன்று இந்நகரம் பெரிய அளவில் முன்னேற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு கலாச்சார நகரமாக இதனை உயர்த்தலாம்.அதன் மூலம் சுற்றுலா வருமானம் கிடைக்க வழி செய்யலாம்.அதன் முக்கியத்தேவை நகரை சுற்றி உள்ள நவக்கிரக கோவில்களுக்கு சரியான சாலைகள், தங்கும் விடுதிகள் அமைத்தல், சரியான முறையில் விளம்பரம் தேவை.பக்தி உள்ளவர்களுக்கு புனிதஸ்தலம் மற்றவர்களுக்கு சுற்றுலாஸ்தலம்.நெற்பயிர், மானாவாரிப்பயிரான உளுந்து எள் சார்ந்த தொழில்கள் ஏதேனும் தொடங்கினால் இங்கிருக்கும் விவசாயிகள் பலனடைவார்கள்.

நகரத்தில் ஓடும் கல்லனைக்கால்வாய் இல்லாமல் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடையே ஓடும் ஐந்து ஆறுகளும் நீர் உள்ளபோது அழகு, ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு.கர்நாடக மழையில் விளைந்த 60 நாள் நெற்பயிரின் பசுமையை கொசுக்கடியையும் தாண்டி ரசிக்கமுடியும். அறுவடை நேரத்தில் வெள்ளம் வந்தால் ரசித்த அந்த பசுமை வெள்ள நிவாரணம் வாங்கத்தான் உதவும்.வெள்ள நிவாரணம் ஓட்டு வாங்க உதவும்.

தஞ்சை அருகில் உள்ள வல்லம் கடலை ஆலைகளுக்கு புகழ்பெற்ற ஊர், இப்போது சில கல்விச்சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊராக உள்ளது,அதுவும் பெண்கள் கல்லூரி இப்போது கடலை வருவல் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமிடம்.

திருவையாறு கர்நாடக இசைக்கு புகழ் பெற்ற இடம்.காவிரி ஆறு ஓடுமிடம்.அதோடு அசோகா என்ற இனிப்பிற்கும், இசை விழா அனுபவம்,கோவில்கள் பற்றிய இணைப்புகள் இங்கே

http://jeyamohan.in/?p=1229
http://jeyamohan.in/?p=369
http://www.shivatemples.com/nofct/nct51.html

ஒரத்தநாடு பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி, இந்த ஊரின் பழைய பெயர் முத்தம்மாள் சத்திரம், சத்திரத்துக்கு நடந்து போய் கத்தரிக்காய் வித்த பாட்டிகள் எல்லாம் முத்தம்மாளிடம் சென்று விட்ட காரணத்தினால் பெரும்பாலோனோர் சத்திரம் என்று அழைப்பதில்லை.
இதுவும் நேராக சாலைகள் உள்ள ஒரு சிறு நகரம். இந்த ஊரில் ஒரு உயரின கால்நடைப்பண்ணை உள்ளது,இதன் கிளையான ஈச்சங்கோட்டையில் கலப்பின மாடுகளின் விந்து உற்பத்தி செய்கிறார்கள், இதுவே பொதுவாக அனைத்து தமிழக கால்நடை மருத்துவமனைகளிலும் செயற்கை கருவூட்டலுக்கு பயன்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கலப்பின மாடுகளுக்கு அப்பா வீடு இது.

வடுவூரில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது, அது பறவைகள் சரணாலயமும் கூட.இதுவும் விவசாயம் மட்டுமே சார்ந்த நிலம்.சில விளையாட்டு வீரர்களை இந்த ஊர் தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது.

http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://en.wikipedia.org/wiki/Tanjore
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=37

ஒரு வேண்டுகோள்:

கும்பகோணம், மன்னார்குடி,நாகப்பட்டிணம் திருவாரூர் பகுதியை சேர்ந்த பதிவர்கள் அந்த ஊர்களின் சிறப்புகளை எழுத அழைக்கிறேன்.
kudukuduppai@gmail.com

Friday, January 16, 2009

கொங்கு நாடு - 3

அன்பு அண்ணன் முனைவர் நா.கணேசன் அவிங்க அறியக் கொடுத்த மடல் இது. அண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதிலும், சுவையான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

பழமைபேசியின் பதிவு பார்த்தேன்: (பின்னூட்டு: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்), நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது. அன்னம் அனம் என்று குறுகிற்று, ஆனால் பொருள் வேறுபாடில்லை.

கொங்கில், ஒற்றை விட்டும் பெயர்கள் குறுகும். அண்ணன் அணன் என்றாகும். ஐயணன், ரங்கணன், ராமணன், மயிலணன், குயிலணன், வேலணன், தொட்டணன், பெரியணன், ... இது கர்நாடகத்திலும் உள்ள மரபுதான்.

இருக்கு வேதம் எழுதா மறையாகவே 2000 வருஷம் இருந்தது. முதலில் எழுதிய கன்னடியர் சாயணன் ('sAyaNa), அவரது தந்தை, முப்பாட்டன் பெயர் மாயணன் (=கண்ணன்). சாயணன் நாகப் பள்ளியில் சாய்ந்திருப்பவன்), அவரும் அவரது சோதரர் மாதவ வித்தியாரண்யரும் கம்பண உடையார் போன்றவர்களைக் கொண்டு ஸ்தாபித்தது விஜயநகர சாம்ராஜ்ஜியம் - மாயணர் வழிவந்த சாயணர்-மாதவர் இல்லையாயின் இந்து சமயம் தென்னாட்டில் இல்லாதொழிந்து சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.)

கோவைகிழார் சி. எம். ராமச்சந்திரஞ்செட்டியார் அவர்களின் "எங்கள் நாட்டுப்புறம்" அவசியம் மணி படிக்கணும். பேரூர் ஆதீனத்தில் விற்பாங்க. ஒரு 10 படி வாங்கி ஆர்வம் இருக்கிறவர்களுக்குக் கொடுங்க. சிஎம்ஆர், இந்த புத்தகம் உருவானது, நூல் கேட்டோர் பற்றி எல்லாம் பின்னர் பழமை பேசலாம்.

வண்டி ஓட்டப்பந்தயம் சிந்து நாகரிகத்திலும் இருந்திருக்கிறது. Daimadabad bronze ரேக்ளா ரேஸ் தான். படம் கொடுத்துப் பதிவு போடணும். ஆக்களுக்கும், எருமைகளுக்கும் கலையியலில் உள்ள வேறுபாடுகளை எழுதியுள்ளேன்:

http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html

http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html


நம்ம ஊரு ரேக்ளா ரேசு பற்றி:
கொங்கு மண்டலத்தின் நெஞ்சை நிமிர்த்தும் 'ரேக்ளா'

உடுமலை வட்டாரத்தில் "ரேக் ளா' பந்தயங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது.தங்கத்தை அள்ளிக் கொடுக்கும் இப்பந்தயத்தில் பங்கேற்க, 300க்கும் மேற்பட்ட வில் வண்டி, மாடுகளுடன் விவசாயிகள் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.


கொங்கு மண்டலத்திற்கே உரித்தான இந்த ரேக்ளா பந்தயத்தில், மாடுகள் தேர்வு முதல் பந்தய வெற்றி வரை சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன.வேகமாக ஓடுவதில் காங்கயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல் லை. தற்போது காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே. இந்த இன காளைகள் உள்ளன. காங்கயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்தில் "லம்பாடி' இன காளைகளும் களத்தில் இறக்கப்படுகின்றன. ஆனால், காங்கயம் காளைகளுக்கு இணையாக இவை பரிசு பெறுவதில்லை.


பசுமை புரட்சி காரணமாக, தற் போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில் கால் நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற் கொள்வதை விவசாயிகள் மறந்து விட்டனர்.தற்போது பசு, எருமை இனங் கள் மட்டுமே பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. உழவுக்கும் இனப் பெருக்கத்திற்கும் மட்டுமே காளைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதையும், உழவுக்கு இயந்திரம், இனப் பெருக்கத்திற்கு "உறை விந்து' என அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது.

இதனால் காளை இனங்கள் கொஞ் சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இந்நிலையில் ரேக்ளா பந்தயத்தால், மீண்டும் காங் கயம் இன காளைகளுக்கு தனி மரியாதை கிடைத்து வருகிறது.இதிலும் நெட்டை, குட்டை என இரு வகைகள் உள்ளன. ரேக்ளாவிற்கு நெட்டை காளைகளே பயன்படுகின்றன. வறண்ட, மானாவரி நிலங்களில் வளரும் இந்த காளைகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும்.

பந்தயத்திற்கு தேவையான காங்கயம் காளைகளை கண்டுபிடிப்பதே தனி கலை. இதற்காக சித்திரையில் கண்ணபுரம் மாட்டுதாவணிக்கும், ஆனியில் ஒட்டன் சத்திரம் அத்திக் கொம்பை சந்தைக்கும், ஆடியில் பழனி, தொப்பம்பட்டி, கோபி, அந்தியூர் சந்தைகளுக்கும் வர்த்தகர்கள் செல்கின்றனர்.ரேக்ளாவிற்கு தேர்வு செய்யப் படும் ஜோடி காளைகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.தங்கள் காளைகள் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைக்கும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக் காடு, கம்பரசல்லா, சித்தூர் பகுதிகளிலிருந்தும், உடுமலை, வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை, தாராபுரம், அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், காங்கயம், ஒட்டன்சத் திரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்கின்றன. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப் படுகின்றன.பொழுதுபோக்கு அம்சமாகவும், விவசாயிகளின் கவுரவத்தைக் காட்டவும் நடத்தப்படும் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாயும் காளைகளைக் காண மக்கள் கூட் டமும் அலை மோதும். ரேக்ளா பந்தயம் தென் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.

விளையாட்டில் பயன்படுத் தப் படும் கடிகாரத்தின் உதவியுடன், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் மாடுகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது. உடுமலை அருகே பள்ளபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில், டிஜிட்டல் முறையில் துல்லியமாக நேரம் கணக்கீடு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது. காளை வயதை காட்டும் பல்: இரண்டு ஆண்டுகள் ஆன காளைகள் 200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்ளும். 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன காளைகளுக்கு ஆறு பல் முதல் எட்டு பல் வரை இருக்கும். இந்த காளைகள் 300 மீட்டர் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது 200 மீட்டரை 14 நொடியில் கடந்தும், 300 மீட்டர் தூரத்தை 25 நொடியில் கடந்தும் காளைகள் சாதனை புரிந்துள்ளன.காளைகளை பருத்திக் கொட்டை, பேரீச் சம்பழம், முட்டை, தேங்காய், பச்சரிசி, பால் ஆகியவை கொடுத்து வளர்க்கின்றனர். பந்தயத்திற்கு முன்தினம் இரவு தீவனம் கொடுக்காமல், ஊட்டச் சத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது.

வில் வண்டி உருவாகும் விதம்: ரேக்ளாவிற்கு வில் வண்டி பயன் படுத்தப்படுகிறது. இந்த வண்டிகளைத் தயாரிக்க ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. கரங்களுக்கு உயர்தர "பேரிங்' பயன்படுத்தப்படுகிறது.

வண்டி ஓட்டுகையில் சொகுசாக இருக்க, "கட் ஸ்பிரிங்'கை பயன்படுத்தும் வண்டிகள் உள்ளன. ரேக்ளாவிற்கு பயன்படும் வண்டிகள், உடுமலை அருகே ஜல்லிபட்டி, தாராபுரம் போன்ற இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

Tuesday, January 13, 2009

தூத்துக்குடி அறிமுகம் பாகம் 1

ஒரு சின்ன வெளம்பரம் தூத்துக்குடி பத்தி.

செக்கிழுத்த செம்மல், கட்டபொம்மன் & பாரதியார் பிறந்த பூமி.

பெரிய துறைமுகம் இங்க உள்ளது. தமிழ்நாட்டிலேயே 2வது பெரிய துறைமுகம். இந்தியாவிலேயே 5வது பெரிய துறைமுகம்.

இந்தியாவிலேயே பெரிய அனல் மின் நிலையம் இங்கதான் உள்ளது.

இந்தியாவிலேயே பெரிய ஸ்டேர்லைட் தாமிர தொழிற்சாலை இங்குள்ளது.

ஒரு முக்கியமான தொழிற்சாலை கூடம்.

விமான நிலையம் இருக்கு. அது ஏதோ வெள்ளக்காரன் காலத்துல கட்டினதாம். அத புதுப்பிச்சு இப்ப ஆரம்பிச்சுட்டாங்க. அந்த காலத்து ஓடுதளம் என்கிறதாலே ரொம்ப பெரிய விமானம் எல்லாம் இறங்க முடியாது. குட்டி விமானம் வந்து போறது. இப்ப தினமும் ஒரு ட்ரிப் வரதா கேள்வி.

தென் நாட்டின் கேம்பிரிட்ஜ், ஆதித்தனார் காலேஜ் (ஏன்னா அது நான் படிச்ச காலேஜ்). இந்த மாவட்டம் திருச்செந்தூர் இருக்கு.

முக்கியமான ஊர் பழையகாயல் (அதாங்க என்னோட ஊரு) இந்த மாவட்டத்துல தான் இருக்கு. வெங்கடேச பண்ணையார் (என்கொனடேர்ல போட்டு தள்ளிட்டாங்க) ஊரு கூட.

உடன்குடி கருப்பட்டி தூத்துக்குடி உப்பு உலக புகழ் பெற்றது.

தூத்துக்குடி பனிமய மாத கோவில், புளியம்பட்டி அந்தோனியார் கோயில் உவரி மாத கோயில், குலசேகரன்பட்டினம் ( தசராவுக்கு பேர்போன ஊரு) கோயில் ரொம்ப புகழ் பெற்றது.


மேலும் அதி விரைவில்.
பதிவு என் பெயரில் வந்தாலும், இதற்க்கு சொந்தகாரர் வில்லன்