Wednesday, April 8, 2009

ஈழம் - ஒரு வேண்டுகோள்.

ஈழச்சகோதரி தூயா வலை உலகத்தமிழர்களுக்கு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வர தமிழ்ப்பதிவர்களை ஒரு பதிவு எழுத சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-----------------------------
உலக சமுதாயமே இலங்கையில் நடக்கும் தமிழினப் இனப்படுகொலைகளுக்கு சாட்சிகள் தேவை,அதனால் இலங்கை அரசிடம் கெஞ்சிக்கூத்தாடி வெளிநாட்டு ஊடகங்களை போர் நடக்கும் இடத்திற்கு அனுமதிக்க செய்யுங்கள்.நீங்கள் போரை நிறுத்தி எஞ்சியிருக்கும் மக்களை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இழந்து விட்டதால், இனப்படுகொலையை உலக ஊடகம் காட்சிப்படுத்தினால் பின்னோரு நாளில் நீங்கள் மியூசியத்தில் வைத்து இப்படியெல்லாம் ஒரு இனம் கொலை செய்யப்பட்டது என்று காட்ட வசதியாக இருக்கும்.

---------------------------------
ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

அங்கே நடக்கும் அனைத்தையும் புலம் பெயர் தமிழர்களாக இருப்பினும் ஓரளவிற்கு நீங்கள் அறிவீர்கள்,நாங்கள் தெரிந்து கொள்வது ஊடகங்கள் மூலமே. உங்கள் கருத்துக்களை தமிழ்ப்பதிவுகளாக எழுதுவதினால் அது அனைவரையும் அடையப்போவதில்லை. ஆங்கிலத்தில் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் , இந்தி தெரிந்தால் இந்தியில் பதிவெழுதுங்கள்.மேலே நான் என் ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். அது 200 பேருக்கு மேல் சென்றடையப்போவதில்லை.

சரியான அனுகுமுறையை கையாண்டு அப்பாவிகளின் உயிர்களை காத்திடுங்கள்.

தொடர்புடைய முந்தைய பதிவு

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம். ~ வருங்கால முதல்வர்

Wednesday, April 1, 2009

வேட்பாளர்கள் தேவை.- அவசரம்.

இந்திய ஜனநாயகத்தின் தூண்களே, நான் ஆரம்பித்திருக்கும் புதுக்கட்சியான குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகத்திற்கு 40 தொகுதியில் நிறுத்துமளவிற்கு என்னுடைய குடும்பத்தில் ஆட்கள் இல்லாத காரணத்தினால், வெளியாட்களையும் வேட்பாளர்களாக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் என் கட்சி தள்ளப்பட்டுள்ளது. என் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் இல்லாத காரணத்தினால் 40 தொகுதிகளில் என் கட்சி சார்பாக நீங்களே வேட்புமனுக்களை தாக்கல் செய்து கட்சியை வளப்படுத்த வேண்டுகிறேன்.

இதற்காக கட்சிக்கு நீங்கள் காசோலையெல்லாம் அனுப்பவேண்டாம்.ஆனால் சுயேச்சை சின்னமாக உடுக்கையை தேர்ந்தெடுக்கும்படி ஜனநாயகத்தின் முதல் தூண்களை கேட்டுக்கொள்கிறேன்.விரைவில் ஆட்சியை பிடிப்போம். கட்சி வளரும்.நம்பிக்கையை தொலைத்துவிடாதீர்கள்.

இப்படிக்கு எங்கேயும் ஓட்டுப்போட வக்கில்லாத

குடுகுடுப்பை.

தலைவர்

குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.