Friday, May 22, 2009

பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.

பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.

இந்த தேர்தல் முடிவு காட்டும் செய்தி காங்கிரஸ் கட்சி வடக்கில் மாநிலக் கட்சிகளிடம் இழந்த செல்வாக்கினை ராகுல் காந்தியின் கவர்ச்சியால் மீண்டும்
பெறத்தொடங்கியுள்ளது. காங்கிரஸின் இந்த வளர்ச்சி கண்டிப்பாக தொடரும், காங்கிரஸின் இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய தோல்வி அடையப்போவது முலாயம்சிங், லல்லு , கம்யூனிஸ்ட்கள்,சரத்பவார் மற்றும் மாயாவதியின் கட்சி.

தனிப்பட்ட முறையில் மாயாவதி தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் ஒழியவேண்டும் என நினைப்பவன் நான். அதன் ஓட்டுக்கள் காங்கிரஸிகும், பாரதீய ஜனதாவிற்கும் சென்றடைய வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி ஏன் தோற்கிறது? முதற்காரணம் கிராமப்பகுதிகளில் உள்ள காங்கிரஸின் செல்வாக்கை ராமர் கோவில் கட்டுகிறேன் என்று சொல்லி ஓட்டாக ஒரு நாளும் மாற்ற முடியாது.

இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் வாரிசு மன்னரையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.நேரு குடும்பம் இல்லாமல் இருந்தால் காங்கிரஸ் காணாமல் போயிருக்கும் என்பதும் உண்மை.வாஜ்பாயிக்கு இருந்த செல்வாக்கை வைத்து பாஜக கட்சி வளர்த்திருக்கலாம், ஆனால் பாஜகவின் தலைவராக ஒரு வாரிசு வாஜ்பாய் இருந்திருக்கவேண்டும்.

அத்வானியை ஓரளவிற்கு மக்களுக்கு தெரியும், ராஜ்நாத்சிங்கை யாருக்கு தெரியும், அவர் தனியாக நின்றால் 500 ஓட்டு கூட வாங்கமாட்டார்.மன்மோகனும் வாங்கமாட்டார், ஆனால் அவருக்கு நிர்வாகத்திறமை இருக்கிறது.ராஜ்நாத்துக்கு ?

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுகிறோம் என்ற வெற்றுக்கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக முன்னேற்ற அரசியலில் அது ஈடுபடவேண்டும்.என்னதான் சொன்னாலும் பாஜக இந்துக்களின் கட்சி என்ற முத்திரை போகப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலையில் பெரும்பாண்மை இந்துக்களுக்கான கட்சியாகவும் இல்லை என்பதும் உண்மைதானே. எத்தனை தலித்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்? காரணம் அது உயர்சாதியத்தை விட்டு வெளியில் வரவேண்டும்.

இந்துக்களின் காவலன் என்று சொல்ல நினைத்தால், முதலில் அக்கட்சி செய்யவேண்டியது, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருவது.வழிபாட்டு உரிமையை மறுக்கும் உயர்சாதி இந்துக்களிடம் எடுத்துச்சொல்லி புரியவைப்பது பாஜக மற்றும் அது சார்ந்த இந்து இயக்கங்களின் கடமை.இதனை தமிழகத்தில் கடவுள் மறுப்பு இயக்கங்கள், திருமாவளவன் போன்றவர்கள் கருவறை நுழைவு போராட்டங்கள் நடத்தியபோது நாத்திகனுக்கு என்ன கவலை என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம். இப்போது அந்தக்கடமை ஆத்திகர்களும் இந்து மத இயக்கங்களுக்கும் உண்டு.

மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக முன்னேற்றத்தை கொண்டு வர முனைவது, மாயாவதியை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்து அவரை தலைவராக்கலாம்.

இது பெரியார் செய்த வேலை, ஆமாம் இதைத்தான் பாரதீய ஜனதா செய்யவேண்டும். அவர் ஏற்படுத்திய கலகம் விழிப்புணர்வை கொடுத்தது.
பாஜக இது போன்ற சமூகத்தொண்டுகளில் ஈடுபட்டு இந்துக்களுக்குள் இருக்கும் சாதி வெறுப்பு உணர்வை களைந்து அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வாழ்வுரிமையை பெற்றுந்தந்தால் அதுதான் அக்கட்சியின் வெற்றி.இதனை விடுத்து மத அரசியல் செய்தால் அக்கட்டி அழிவுப்பாதைக்கே செல்லும்.மத அரசியலில் செல்லும் அனைத்து நாடுகளும் அழிவுப்பாதைக்கே செல்லும்.

இன்னும் இருபது வருடங்களுக்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது, மேலே சொன்னமாதிரி சமூகப்பணிகளின் அக்கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டால், ராகுல் காந்தி நேருவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆட்சி மாற்றம் நடக்கவேண்டும்.(கோமாளி மூன்றாவது அணியால் அது நடந்தால் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.) இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

எனக்கு அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக கிடையாது,பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை கூறவும். குறிப்பாக பாஜக , காங்கிரஸ் ஆதரவாளர்கள்.

Sunday, May 17, 2009

தி.மு.க , அ.தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள்.

தி.மு.க , அ.தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள்.

முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை மீண்டெழ முயற்சிக்கிறது, தி.மு.கவும் அ.தி.மு.கவும், பீனிக்ஸ் பறவை தனியாக எழுந்து வர உதவ முன் வரவேண்டும். இரண்டு கட்சிகளும் நடுநிலையுடன் இருந்து பீனிக்ஸ் பறவையின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.