Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, November 25, 2009

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும். நான்கு நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்றும் சோழர்கள் காலத்தில் இருந்ததாக எங்கோ படித்திருக்கிறேன். இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.

இந்த நாட்டாமை பதவி குடும்பத்தில் மூத்த ஆண் வாரிசுகளுக்கு சென்றுவிடும். இவர்கள் கிராமத்தில் கோவில் திருவிழா வரி வசூலிப்பது, ஊர் ஏரி குளங்களை மராமத்து செய்வது,பொதுச்சொத்துகளை பாதுகாப்பது, மற்றும் ஊரில் எழும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போன்றவைகளை செய்யும் நிர்வாகிகள்.இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நாட்டாமை இருப்பார் இவரை நாட்டம்பலம் என்று அழைப்பார்கள்.நாட்டுக்குள் அடங்கிய இரண்டு ஊருக்குள் பிரச்சினை என்றால் தீர்வுக்கு அம்பலங்கள் சேர்ந்து தீர்வு காண முயல்வார்கள்.எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.

இந்த நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று தலைநகரம் அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும் உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு என நினைக்கிறேன். இதில் காசவளநாடு தலைநகரம்.காசவளநாட்டைச் சேர்ந்தவர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று நாடுகளிலும் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.(இப்போ ஆளுகையெல்லாம் கிடையாது)பொதுவாக திருமணங்கள் 90% அந்த நாட்டுக்குள்ளேயே முடிந்துவிடும், சில திருமணங்கள் நாடு தாண்டி நடக்கக்கூடும். இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..

இதிலும் இந்த வளநாட்டுக்காரர்கள் அறுத்துக்கட்ட மாட்டார்கள்.(கைம்பெண் மறுமணம்). மற்ற மூன்று நாடுகளில் கைம்பெண் மறுமணம் தொண்று தொட்டே உண்டு. ஒரு நாட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பழக்க வழக்கங்களை நக்கல் செய்வது கலையின் ஆரம்பம் இங்கே.

நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண.சில இளைஞிகள் விழலாம், தவறினால் இளைஞர்களுக்கு விழும்.பெரும்பாலும் இரண்டாவதே நடக்கும் ஏனென்றால் பெண்களுக்கு வரும் காவல் அப்படி இருக்கும்.மற்ற நேரங்களில் கோவிலில் சீட்டு விளையாட செல்லுவார்கள்.

மேலே சொன்ன அனைத்தும் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மைனாரிட்டி ஜாதியாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு அம்பலம் இருப்பார்,பெரும்பாலான கோவில்களில் அவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும், தேங்காய் மூடியும் வாழைப்பழமும்தான்.பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் இவர்கள் அந்த ஊரின் வந்தேரிகள்.).

ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அந்த கட்டமைப்பில் சட்டம் போட்டு ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன். சாதிசூழ் உலகு என்ற பெயரில் பதிவர் நடைவண்டியின் பதிவு தெளிவாக உள்ளது,எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அந்த பதிவில் உள்ளதில் பெரும்பாண்மை மறுக்கமுடியாது.

நடைவண்டியின் பார்வையில் தஞ்சை நாடு

தொடரும்.....

Monday, August 31, 2009

பதிவுலகில் மெளனப்புரட்சி!

வருங்கால முதல்வர் நாற்காலிக்கு யாரோ பேர் அடிபடுதாமே? அதான், நாமும் வந்து வருங்கால முதல்வர் நாற்காலியில உட்கார்ந்து பாக்குற நினைவு வந்துச்சு; வந்தேன். சரி, வந்ததும் வந்தோம், ஒரு தகவலைச் சொல்லிட்டுப் போலாமுன்னு.... இஃகிஃகி!

நாம கோயம்பத்தூர் CIT, Coimbatore Institute of Technologyலதான குப்பை கொட்டிட்டு இருந்தோம். அங்க பாருங்க, கைலாசு விடுதி, கைலாசு விடுதின்னு ஒன்னு இருக்கு. அங்கதான் புளிச்ச மோரை சக்கரை போட்டுக் குடிச்சுப்பிட்டு, அவுத்து விட்ட கழுதைகளாட்டம் மேலுக்கும் கீழுக்கும் திரிஞ்சுட்டு இருப்போம்.

திடீல்னு நெனைச்சா, லுங்கிய லேசா மேல எடுத்து தொங்கட்டானுட்டுக் கட்டிகிட்டு, பின்னாடி வழியா அப்பிடியே ரெயில் ரோட்டைத் தாண்டி, மணீசு தியேட்டர் முன்னாடி இருக்குற சிவசாமி அண்ணனோட பேக்கரிக்கு போவோம். போயி, அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு அலப்பறை செய்யுறது.

அப்புறம் North District Vs South Districtனு சண்டையப் போட வேண்டியது; அது ரொம்ப out of fashion ஆயிப் போச்சுன்னா, Kapil Vs Gawaskar, Kamal Vs Rajini, இப்படி எதனா ஒன்னை வெச்சிகிட்டு இரகளையப் பண்ண வேண்டியது.... காசு, கீசு எதுவுந்தராம எடத்தைக் காலி பண்ணிட்டு வர வேண்டியது.... இப்படி அப்பப்ப வெகு சகசமா நடக்கும்.

அப்ப அந்த சிவசாமி அண்ணங் கேக்குறது, டேய் நாசமாப் போன வாலுகளா, நீங்க எந்த குரூப்புடா? இப்பிடி, குரூஊப் குரூஊப்பா வந்து அழிச்சாட்டியம் பண்ணுறீங்களேடான்னு.

அந்த மாதிரி, இப்ப ஒரு குரூஊப்பு வந்து எறங்கி இருக்குது. வேற எங்க, நம்ம பதிவுலகத்துலதான்.... சும்மா, கவிதை என்ன? கட்டுரை என்ன?? வெச்சு, வெளுத்து வாங்கறாங்கப்பா... கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுல வெச்சி, ஒரு அம்மணியப் பாத்ததீமு அந்த நடிகர் சொன்னாராம், ‘hey, she looks very fresh man...'னு...

அய்ய... அது யாரு எதுக்குங்ற கர்மமெல்லாம் நமக்கெதுக்கு? நான் என்ன சொல்ல வந்தன்னா, இவுகளும் அந்த மாதர ஒரு புது பொலிவோட வந்திருக்காங்க... அவங்க ஆக்கங்களையும் சித்த போயிப் பாருங்க....
கூடவே அவங்க அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சொல்லிகிடுறேன்!

க.பாலாஜி
கதிர் - ஈரோடு
ஆரூரன் விசுவநாதன்
செல்வனூரான்
seemangani
தியாவின் பேனா பேசுகிறது...
sakthi
கபிலன்
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார்
ரிஷபன்
ரவிபிரகாஷ்

மேல சொன்னவங்க எல்லாருமே விற்பன்னர்களா இருக்காங்க... வலைச்சரத்துல எழுத வேண்டியது.... கொஞ்சம் தவறிப்போச்சு... இஃகிஃகி!!

Wednesday, January 28, 2009

தஞ்சை மாவட்டம் : தஞ்சை நகரம் அதன் சுற்றுப்புறமும்.

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சை மாவட்ட மக்கள் மொக்கை அறிமுகத்தில் தொட்டும் தொடாமல் இந்நகர் பற்றி பார்த்தோம். நகரில் உள்ள சுற்றுலா,வரலாற்றுத்தலங்கள் பற்றி பல பதிவுகள்,விக்கியில் சொல்லப்பட்டிருந்தாலும் நானும் அதை தொட்டுச்செல்கிறேன்.கடந்த சில வாரங்களாக pbs.org மூலம் இந்தியாவைப்பற்றி ஒரு தொடர் சென்றுகொண்டிருக்கிறது, அத்தொடரில் தஞ்சாவூர்,ராஜராஜசோழன் அதிக நேரம் இடம் பெற்ற போது என் பதிவிலும் கொஞ்சமாவது இடம் பெற வேண்டுமே.

பிற்கால சோழர்களின் தலைநகரான தஞ்சையின் அடையாளம் பெரிய கோவில்தான்.பெரிய கோவில் பற்றிய பதிவு ஒன்று இங்கே.
http://enthamizh.blogspot.com/2008/12/blog-post_30.html
பெரிய கோவிலின் கோபுரச்சுவரில் உச்சிவரை ஏறலாம், இரண்டு சுவர் நடுவில் பாதை,இரண்டு சுவரிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும், இந்த பகுதி பொதுமக்கள் பார்வைக்கு அல்ல. NSS ல் இருந்ததால் அறுபது அடி உயரம் வரை ஒருநாள் கோவில் நிர்வாகத்தினர் அழைத்து சென்றனர்.இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. கோவிலில் முக்கியமான விசயம் கோவிலின் அனைத்து சுவரிலும் உள்ள கல்வெட்டுகள்தான்.கோவில் கட்டிய சோழன் சிலையாக வெயிலில் நிற்கிறார் இப்போது, அதில் உள்ள அரசியல் அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.ராஜராஜன் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது, ஆனால் சோழன் சிலையை எடுத்து வெளியில் வைத்துவிட்டு சென்ற இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு விழாவுக்கு பிரபலங்கள் யாரும் செல்வதில்லை இதில் ஆரிய திராவிட வேறுபாடெல்லாம் இல்லை.

பெரிய கோவில் பக்கத்தில் சிவகங்கை பூங்கா சோழர்காலத்தில் அந்தப்புரம் போல,குந்தவை குளித்த குளம் இன்னமும் கூட இருக்கிறது, இப்போது நகர மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா.யூனிபாமுடன் பள்ளி மாணவ மாணவர்களை ஜோடியாகவும்,என்னைப்போன்றவர்களை தனியாகவும் காணலாம்.ஒரு காலத்தில் நிறைய மான் இங்கு இருந்தது.இப்போது சில மான்கள் இருக்கலாம்.பூங்கா அருகே சிலர் வீணை செய்வதை பார்த்திருக்கிறேன் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.தஞ்சாவூர் ஓவியங்கள்,தட்டு,பொம்மையெல்லாம் எங்கே செய்கிறார்கள்?

மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகள் பாதுகப்பாகமாகவும் உள்ளது இவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்கள்.சரபோஜி மன்னர் காலத்து அரண்மனை மாட்டுக்கொட்டகையில் ஒரு பள்ளிக்கூடமும் அதன் குதிரை லாயத்தில் இன்னொரு பள்ளிக்கூடமும் இப்போது இருக்கிறது.

நகரம் இப்போது விரிந்து வெளியே சென்றுவிட்டாலும், மன்னர் கால நகரத்தின் அடையாளம் இன்னும் உயிரோடு உள்ளது. நான்கு நேரான வீதிகள் தெற்கு வீதி,வடக்கு வீதி, மேல வீதி, கீழராஜ வீதி அதனை சுற்றி நாலு அலங்கம் திசைகளின் பெயரில்.இந்த வீதிகளுக்கு இடைப்படது தான் பழைய நகரம், அதற்குள் இருக்கும் வீடுகளுக்கு வழி தஞ்சை நகரின் புகழ்பெற்ற சந்துகள் அதன் அருகில் ஓடும் சாக்கடை,சந்துகளின் பெயர்கள் இன்னமும் மராட்டிய பெயர்களை கொண்டே இருக்கும்.. இப்போதைய தஞ்சாவூர் ஊரின் எல்லைகளில் இருக்கும் கீழ,மேல வஸ்தாது சாவடிகளை தாண்டிவிட்டது.

மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் இங்கு உள்ளது,தமிழுக்கென தனிப்பல்கலைக்கழகம் உள்ளது, எத்தனை கல்லூரி வந்தாலும் சரபோஜி மன்னர் கல்லூரியும், குந்தவை மகளிர் கல்லூரியும் தான் சிறப்பு. இவை கல்வியில் சிறப்போ இல்லையோ வீரம் ,காதலில் சிறப்பானவை.

மற்றபடி பெரும்பான்மை விவசாயம் மட்டுமே தொழில் ஆகையால் இந்நகரம் மிக அமைதியாகவே காணப்படும்.மருத்துவக்கல்லூரி இருந்த காரணத்தினால் இன்றைய வரைக்கும் மருத்துவ தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வீதிக்கு 10 டாக்டர்கள் இருப்பார்கள். பாலிகிளினிக்குகள்,மீனா சோனா என்று மருந்துக்கடைகள் நல்ல வளம் கொழிக்கும் தொழில்.திருச்சியை விட மருத்துவ வசதி அதிகம் உள்ள இடம்.

மற்றபடி எந்தவித தொழிலும் இல்லாமல் அருகில் உள்ள திருச்சி போன்று இந்நகரம் பெரிய அளவில் முன்னேற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு கலாச்சார நகரமாக இதனை உயர்த்தலாம்.அதன் மூலம் சுற்றுலா வருமானம் கிடைக்க வழி செய்யலாம்.அதன் முக்கியத்தேவை நகரை சுற்றி உள்ள நவக்கிரக கோவில்களுக்கு சரியான சாலைகள், தங்கும் விடுதிகள் அமைத்தல், சரியான முறையில் விளம்பரம் தேவை.பக்தி உள்ளவர்களுக்கு புனிதஸ்தலம் மற்றவர்களுக்கு சுற்றுலாஸ்தலம்.நெற்பயிர், மானாவாரிப்பயிரான உளுந்து எள் சார்ந்த தொழில்கள் ஏதேனும் தொடங்கினால் இங்கிருக்கும் விவசாயிகள் பலனடைவார்கள்.

நகரத்தில் ஓடும் கல்லனைக்கால்வாய் இல்லாமல் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடையே ஓடும் ஐந்து ஆறுகளும் நீர் உள்ளபோது அழகு, ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு.கர்நாடக மழையில் விளைந்த 60 நாள் நெற்பயிரின் பசுமையை கொசுக்கடியையும் தாண்டி ரசிக்கமுடியும். அறுவடை நேரத்தில் வெள்ளம் வந்தால் ரசித்த அந்த பசுமை வெள்ள நிவாரணம் வாங்கத்தான் உதவும்.வெள்ள நிவாரணம் ஓட்டு வாங்க உதவும்.

தஞ்சை அருகில் உள்ள வல்லம் கடலை ஆலைகளுக்கு புகழ்பெற்ற ஊர், இப்போது சில கல்விச்சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊராக உள்ளது,அதுவும் பெண்கள் கல்லூரி இப்போது கடலை வருவல் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமிடம்.

திருவையாறு கர்நாடக இசைக்கு புகழ் பெற்ற இடம்.காவிரி ஆறு ஓடுமிடம்.அதோடு அசோகா என்ற இனிப்பிற்கும், இசை விழா அனுபவம்,கோவில்கள் பற்றிய இணைப்புகள் இங்கே

http://jeyamohan.in/?p=1229
http://jeyamohan.in/?p=369
http://www.shivatemples.com/nofct/nct51.html

ஒரத்தநாடு பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி, இந்த ஊரின் பழைய பெயர் முத்தம்மாள் சத்திரம், சத்திரத்துக்கு நடந்து போய் கத்தரிக்காய் வித்த பாட்டிகள் எல்லாம் முத்தம்மாளிடம் சென்று விட்ட காரணத்தினால் பெரும்பாலோனோர் சத்திரம் என்று அழைப்பதில்லை.
இதுவும் நேராக சாலைகள் உள்ள ஒரு சிறு நகரம். இந்த ஊரில் ஒரு உயரின கால்நடைப்பண்ணை உள்ளது,இதன் கிளையான ஈச்சங்கோட்டையில் கலப்பின மாடுகளின் விந்து உற்பத்தி செய்கிறார்கள், இதுவே பொதுவாக அனைத்து தமிழக கால்நடை மருத்துவமனைகளிலும் செயற்கை கருவூட்டலுக்கு பயன்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கலப்பின மாடுகளுக்கு அப்பா வீடு இது.

வடுவூரில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது, அது பறவைகள் சரணாலயமும் கூட.இதுவும் விவசாயம் மட்டுமே சார்ந்த நிலம்.சில விளையாட்டு வீரர்களை இந்த ஊர் தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது.

http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://en.wikipedia.org/wiki/Tanjore
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=37

ஒரு வேண்டுகோள்:

கும்பகோணம், மன்னார்குடி,நாகப்பட்டிணம் திருவாரூர் பகுதியை சேர்ந்த பதிவர்கள் அந்த ஊர்களின் சிறப்புகளை எழுத அழைக்கிறேன்.
kudukuduppai@gmail.com

Monday, December 29, 2008

பதிவுத் திருடர்களுடன் வருங்கால முதல்வர்

வருங்கால முதல்வர் : அரச கவி வாழ்கையிலே இன்னைக்கு தான் உருப்படியான காரியம் பண்ணி இருக்கியரு, நோகாம நொங்கு திங்கவங்களை பாத்து பேச ஏற்ப்பாடு எப்படி பண்ணுனீங்க

அரச கவி : அவிங்க வழியிலே போய் அவங்களை பிடிச்சேன், இதெல்லாம் உங்களுக்கு புரியாது, அதனாலே வந்த வேலையை பார்ப்போம் .

வ.மு : அறிவுத்தனமா கேள்வி கேட்டா "உனக்கு புரியாதுன்னு" அறிவு பூர்வமா பதில், இருக்கட்டும்..இருக்கட்டும்

அரச கவி : நிலா நிலா ஓடிவா..நிலா நிலா ஓடிவா

வ.மு: யோவ் என்ன பள்ளி ௬டத்து புள்ளைக பாட்டு திடிர்ன்னு எடுத்து வுடுரீரு, நான் கேட்கவே இல்லையே

அரச கவி : ஸு .. ஸு, இது இவங்களோட ரகசிய பாசை, இவங்க அப்படிதான் பேசிக்குவாங்க

வ.மு : ஆமா இது ஒரு பெரிய ராணுவ அமைப்பு, ரகசிய பாசை, தோசை ன்னு

(பதிவு திருடர்கள் வருகிறார்கள்)

அரச கவி : வணக்கம் ஆஇ, உச,முதல்வர் ஐயா இது இவங்க எம்ப்லோயீ நம்பர், இவங்க சொந்த பேரு என்னனு எனக்கும் தெரியாது.

வ.மு : ஒ. இவங்க சோலியே இதுதானா?, வணக்கம் ஆஇ, உச சமிப காலமா நிறையா பதிவுகளை, சினிமாவிலே கதையை திருற மாதிரி திருடி உங்க இணைய தளத்துல போடுறீங்க, இப்படி நோகாம நொங்கு திங்கனும்ன்னு யோசனை எப்படி வந்ததது

ஆஇ : இதுல யோசிக்க என்ன இருக்கு, கோவில் மாடு வயல் வெளியிலே மேயுற மாதிரி பதிவுகள்ல்ல மேய்வோம், நல்லா இருக்க பதிவை காப்பி பண்ணுவோம், திருட மாட்டோம்

அரச கவி : மாடு நல்ல தீனி கிடைக்க இடத்துல மேயற மாதிரி நல்ல சரக்கு இருக்க இடத்திலே மேயுவீங்க

உச : சரியா சொன்னீங்க அரச கவி , உங்களுக்கு அறிவோ அறிவு

வ.மு : ஹும். பாராட்டு எல்லாம் அப்புறம், நீங்க செய்றது தப்புன்னு தோணலையா? எடுக்கிறதுக்கு முன்னாடி கேட்கணும்ன்னு தெரியாதா, திறந்த வீட்டுல எதோ நுழைந்த மாதிரி வந்தா எப்படி?

உச : ஐயா நீங்க ரெம்ப கேள்வி கேட்குறீங்க, எங்களுக்கு பதில் சொல்லி பழக்கம் இல்லை.

வ.மு : இதுக்காவது பதில் சொல்லுங்க என் நமிதாவை திருடினது யாரு... என் நமிதாவை திருடினது யாரு

அரச கவி : என்னது உங்க நமிதாவா? சொல்லவே இல்லை,அதாவது திருடி தான் பழக்கம், பதில் சொல்லி பழக்கம் இல்லைன்னு சொல்லுறாங்க

உச : அவங்க நமிதாவை பத்தி எழுதின பதிவை பத்தி சொல்லுறாங்க, ஐயா பல கம்பனிகள் இதே தொழில் செய்யுறாங்க, நீங்க கேக்கிறது தமிழ் நாட்டுல முருகன்னு ஒருத்தரை தெரியும், அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்கிற மாதிரி இருக்கு

அரச கவி : இந்த பதிவை எழுதினவனை விட ரெம்ப அறிவாளிகள் நீங்க.

உச : கதையை திருடி படமா எடுத்தா வழக்கு போடலாம், பதிவை திருடி போட்டா வழக்கு போட முடியாதே

வ.மு : நம்ம கட்சி கொள்கையிலே இதையும் சேர்த்து கொள்வோம், வருங்கால முதல்வர், முதல்வர் ஆனால் உங்களுக்கு கையிலே காப்பு கொடுப்போம்

உச : தங்கமா கொடுங்க, அடகு வச்சி இன்னும் ரெண்டு கம்ப்யூட்டர் வாங்கணும், வேலைக்கும் ஆள் எடுக்க வசதியா இருக்கும்.

அரச கவி :கட்டடம் கட்ட ஆள் எடுக்கிற மாதிரி சொல்லுற, மண்டைய கசக்கி பிழிஞ்சி நாங்க பதிவு எழுதுறோம், நீங்க லாவகமா நவட்டிட்டு போய், என்னவோ நீங்களே எழுதின மாதிரி போடுறது நல்லா இல்லை

ஆஇ : அருமை..அருமை

வ.மு : என்ன அரச கவி பேசியே மனசை மாத்தீட்டீங்க போல

ஆஇ : ஐயா நான் புதுசா ஒரு பதிவு கிடைச்சு இருக்கு அதை பத்தி சொல்லுறேன்,உச நம்ம தணிக்கை குழுவுக்கு இந்த பதிவை அனுப்பி வை, அவங்க சரி பார்த்த உடனே காப்பி பண்ணலாம், மன்னிக்கணும் இது எமெர்ஜென்சி பதிவு, அதனாலே இதுக்கு நாங்க உடனே பதில் சொல்லணும், ஹும், நீங்க என்ன சொன்னீங்க.

வ.மு: அரச கவி இவங்க அடங்க மாட்டங்க போல தெரியுதே .

அரச கவி: ஐயா இது நம்ம இடி விழுந்த இருளாண்டி யோட "பதிவு திருடர்களுடன் வருங்கால முதல்வர்"

வ.மு : அவன் பதிவு எழுதி முடிக்கும் முன்னாடியே திருடிட்டாங்க,படம் வெளியிலே வரும் முன்னாடி இணைய தளத்துல முழு படமும் வலம் வருகிற மாதிரி இருக்கு

அரச கவி: வகை வஞ்சனை இல்லாம திருடுறாங்க, இவங்களையெல்லாம் பார்த்தா நம்ம பதிவு எழுத முடியாது, அதனாலே நாம் இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போவோம் .

வ.மு : இந்த மாதிரி அட்டு பதிவுகளை ௬ட விடுறது இல்லை, இங்க வந்ததே தப்பு .

ஆஇ : ஆமா உண்மைதான் என்ன ரகசியம் தெரிஞ்ச நீங்க, எங்களுக்கு ரெண்டு பதிவு காப்பி அடிக்க துப்பு கொடுக்கணும்.

வ.மு : கொடுக்கலைன்னா ?

உச : நாங்க கொடுப்போம்

அரச கவி: என்னது?

ஆஇ : அங்கே பாருங்க

வ.மு : நாங்க அங்க பார்க்கிறது இருக்கட்டும், நீ இங்கே பார்

உச :சாட், பூட், திரி..சாட், பூட், திரி....சாட், பூட், திரி..சாட், பூட், திரி..

(அனைவரும் இந்த பதிவை படிச்சு புட்டு ஓடுற மாதிரி ஓடி விடுகிறார்கள்)

அரச கவி: தப்பிச்சு ஓடுறதுக்கு பயன்படுத்திற ரகசிய பாசை, எப்படி முதல்வர் இப்படி?

வ.மு : புதுசா பதிவு வந்திருக்குன்னு கடை பக்கம் எட்டி பார்க்க வந்தவங்களை பார்த்து இப்படி பயந்து ஓடுறாங்க

அரச கவி: இதுக்கு முடிவு சொல்ல முடியாது, வழக்கம் போல இருக்கிறதை நாம சுட்டுட்டு போவோம்

Tuesday, December 23, 2008

வணக்கமுங்க

இங்க கூட வேலை செய்யறவங்க நீங்க எந்த ஊர்ல இருந்து வந்தீங்கன்னு கேட்டா

பக்கத்துல தான் போர்ட் வொர்த், அப்படின்னு தான் சொல்லுவேன்.

கேட்டவன் டேய் உன்னை பார்த்தா கொஞ்சம் கருப்பனாட்டமும் தெரியற, கொஞ்சம் கீழ் நாட்டு சாயலும் (மெக்ஸ்சிகான்) தெரியுது
நீ எந்த நாட்டுல இருந்து வந்தைனு தாண்ட கேட்டேன்..
நமக்கு இந்தியா தான் சொந்த ஊரு,

இந்தியாவுல எங்க?
தெனிந்தியா, தமிழ்நாடு மாநிலம். சென்னை இல்லேன்னா மெட்ராஸ் கேள்வி பட்டு இருக்கீங்களா.. அங்க இருந்து தான் வரேன்

இப்போ கூட அங்க தீவிரவாதிங்க எதோ சாப்பட்டு கடையில தின்ன சோத்துக்கு காசு கேட்டதுக்கு சுட்டு புட்டானுகளே அந்த ஊரா?
ஆமாம், அந்த ஊருக்கு கொஞ்சம் பக்கம் தான் எங்க ஊரும்

அப்படின்னு கொஞ்சம் கதைய கட்டிட்டு விட்டா சாமின்னு எடத்த காலி பண்ணிட்டு வந்துடுவேன்..

இங்க எல்லாம் நம்ம ஆளுங்க இருக்கிறதால உண்மைய சொல்றேன்..

நமக்கு கோயமுத்தூரு பக்கமுங்க,
அங்க பக்கத்துல இருக்கிற ஈரோடு, அதுக்கு பக்கத்துல இருக்கிற கோபி, அதாங்க காசில்லாத சினிமாகாரங்க, கிராமத்து படம் புடிக்க வர்ற ஊருங்க நம்முளுது.
இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டா அதுக்கு பக்கத்துல இருக்கிற சொந்த ஊரு பேர சொல்லிடுவேன், அந்த ஊரை ரொம்ப பேருக்கு தெரியதுங்கரதால இதோட நிறுத்திக்கிறேன்.


நம்ம ஊரு கொஞ்சம் முன்னேறிய ஊருங்க..
இந்த குளோபல் வார்மிங், க்லீமிங் அப்படின்னு சொல்றத நாங்க முன்னமே தெரிஞ்சதால எங்க ஊருக்கு பஸ் எல்லாம் வேணாம், நீங்க ரொம்ப பிரியப்பட்டா காலைல பால் பீச்சரப்போ ஒன்னு, பொழுது சாஞ்சு சாணி அள்ளுனதுக்கு அப்புறம் ஒண்ணுனு வந்தா போதும்னு சொல்லிபுட்டோம்

இங்க இருந்து எப்படி நீ வருங்கால முதல்வர் ஆகா முடியும்னு கேக்கறவங்களுக்கு

முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊரு முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊருல இன்னும் திருட்டு கல்லு இறக்கிறாங்க முடியாதுன்னு நெனச்சுருந்தா டாஸ்மார்க் கடையில காச கொடுத்துட்டு ஊட்டுல சம்சாரங்கைல அடி வாங்கிட்டு தான் இருக்க முடியும் என்ன சொல்றீங்க .

முதல்வர் ஆகறதுன்னு அடுத்த பதிவுல சொல்ல்றேனுங்க.

தப்பா எதுனா சொல்லிருந்த மன்னிசுகிடுங்க, இப்போதைக்கு நான் உத்தரவு வாங்கிக்கிறேன் சாமி.

[எப்படியோ ஒரு மொக்க பதிவ போட்டு நானும் என்னோட கணக்க தொடங்கிட்டேன்]

Monday, December 22, 2008

விருது நகர் மாவட்டம் 02

இதுவும் மாவட்டம் பற்றிய பொத்தாம் பொதுவான பதிப்பு தான்.

விருது நகர் மாவட்டம் மொத்த பரப்பளவு 4243 சதுர கிமீ

மக்கள் தொகை மொத்தம் 17,51,548 (2001 கணக்கெடுப்பு படி)
படித்தவர்கள் 65% - 11,52,516

முக்கிய தொழில்கள்

தீப்பெட்டி தொழில் - சிவகாசி, சாத்தூர், விருதுநகர்

வெடி தொழில் மற்றும் அச்சகங்கள் - சிவகாசி

பருத்தி ஆலைகள் - ராசபாளயம்

மெட்ராஸ் சிமெண்ட்ஸ் - துலுக்கபட்டி

தமிழ்நாடு சிமெண்ட்ஸ்/ ஆஸ்பெஸ்டாஸ் - ஆலங்குளம்

டிவிஎஸ் நட்ஸ் அண்ட் போல்ட்ஸ் - ஆவியூர்

ஏற்றுமதி - ஏலக்காய், பட்டாசு, மிள்காய், எண்ணெய், தீப்பெட்டி


பக்தி ஸ்தலங்கள்

வில்லி புத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் சீனிவாசப் பெருமாள் கோவில்

இருங்கன் குடி மாரியம்மன் கோவில்

திருச்சுழி பூமிநாதர் கோவில்

விருது நகர் மாரியம்மன் கோவில்

இனி ஒவ்வொரு ஊரா அலசலாம்னு இருக்கேன். அதுல பங்குனி பொங்கல் பத்தி பட்டய கெளப்புவோம்ல.

மீசைக்காரரு, அவரு மூஞ்சில ஆசிட் அடிச்சவரு பத்தி எல்லாம் எழுதினா மண் மணம் போயி அரசியல் ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு. அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு இருக்கேன்.

Friday, December 5, 2008

நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 1

பொறுப்பு அறிவித்தல் :ஒரு முன்னுரையாக நினைத்து கொண்டு,கொஞ்சம் சுய விளம்பரம் அதிகம் இருந்தாலும் பொறுத்து கொண்டு உங்களுடைய மேலான கருத்துகளை பின்னூடத்திலே தெரிவிக்கவும்

நெல்லை மாவட்ட மக்களை பத்தி எழுதனுமுன்னு வருங்கால முதல்வர் ஒரு கோரிக்கை வச்சாரு, முதல்வர் சொன்னதை மறுக்க முடியலையே தவிர என்ன எழுதன்னு தெரியலை.

அருவாள் தயாரிப்புக்கு திருப்பாச்சி சொந்தமானாலும், அதை எப்படி பயன் படுத்துறதுன்னு திருநெல்வேலி மக்களுக்கு தான் நல்லா தெரியுன்னு சொல்லுவாங்க(?), ஒரு பொருளை எப்படி பயன்படுத்தன்னுமுன்னு ரெம்ப நல்லா தெரியும், அதனாலே என்னவோ தென் இந்தியாவிலே அதிக கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரமாக நெல்லை திகழ்கிறது(தகவல் தப்பா இருந்தா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்).


மங்களூர் கணேஷ் பீடி, சொக்கலால் பீடி சேட்டு இன்னைக்கு பணத்தை எண்ண முடியாம கட்டிலுக்கு அடியிலே வச்சி படுத்து தூங்குவதுக்கு எங்க மாவட்ட தாய்குலங்கள் தான் காரணம், இங்க உள்ள பிரசித்தி பெற்ற தொழில்களில் ஒன்று பீடி சுத்துவது, தாய் குலங்கள் மட்டுமல்ல, சில வீடுகளில் தந்தை குலங்களும் பீடி சுத்துவாங்க, எனக்கே பீடி இலையை எப்படி வெட்டுவது, சுத்துவது எல்லாம் தெரியும், இவ்வளவும் சொன்ன நான் அதை குடிக்கவும் தெரியுமுன்னு சொல்லிகிறேன், அன்புமணி ஐயா பார்க்க மாட்டாரு என்கிற தைரியத்திலே சொல்லிபுட்டேன், சீக்கிரமா நம்ம புதுகை.அப்துல்லா அண்ணன் மாதிரி விட்டுடனும்.


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு அடுத்தபடியா சங்கம் வைத்து சாதி வளர்க்கிற மாவட்டம், தெருவுக்கு குறஞ்சது நாலு சாதி சங்கம்மாவது இருக்கும் அவ்வளவு பெரிய ஆளுங்க நாங்க,உண்மையை சொல்லி புட்டேன்ன்னு ஊரு நாட்டாமைகள் எல்லாம் அருவாளை தூக்கி போட்டு கிட்டு வரவேண்டாம் என வருங்கால முதல்வர் சொல்லுறாரு.


பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கிறார்கள், தஞ்சை மாதிரி எங்க ஊரு எல்லாம் நெற்களஞ்சியம் இல்லை,அதற்க்காக நெல் விளையாமலும் இல்லை.குடும்பமாக விவசாயம் செய்யும் பங்காளிகள் பிரச்சனைன்னு வந்தா ஒரு பிடி மண்ணை ௬ட யாருக்கும் விட்டு தரமாட்டாங்க, அவ்வளவு பாசக்காரங்க, தாமிர பரணி நதி ஓடுதுன்னு சின்ன வயசுலே இருந்து படிச்சு இருக்கேன், அதிலே தண்ணி வந்தா அதையே அதிசயமா எல்லாரும் போய் பார்ப்பாங்க.

அல்வாக்கு பேரு போனது நெல்லை,கடை பேரு தான் இருட்டு கடை, அந்த கடைக்கு எப்போதுமே இருட்டே கிடையாது.திரைப் படங்களிலே அல்வாவிற்கு பல அர்த்தங்கள் சொல்லி ரெம்ப பிரபல படித்தினது சத்தியராஜ்(பதிவர் கிடையாது)

மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு, அந்த மலைகளின் நடுவே ஏழைகளின் கொடைக்கானல்(?) ஆகிய குற்றாலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம், நிறைய திரைப் படப் பாடல்கள் தென்காசி சாரல் பத்தி வந்து இருக்கு, ஒரு கொசுறு தகவல் எங்க ஊரு குற்றாலத்திற்கு 25 கிலே மீட்டர் தொலைவில் உள்ளது.


மக்களின் வாழ்க்கை முறை, வணிகம், தொழில்,கல்வி ௬டங்கள்,பல்கலை கழகங்கள் எல்லாம் அடுத்த பாகத்திலே பார்க்கலாம்

Wednesday, December 3, 2008

தஞ்சை மாவட்ட மக்கள் நகைச்சுவையான அறிமுகம் - உணவு- பாகம் 3

பாகம் 1
பாகம் 2
சமூக சீர்திருத்ததில் தஞ்சையின் பங்குக்கு முன்னால், இன்னும் உணவு, வாழ்க்கை முறை, கல்வி, தமிழ் அறிஞர்கள் பற்றி எழுதுகிறேன்.பதிவு ஒரு சீரான நேர்கோட்டில் செல்லாமல் மாறி மாறி செல்கிறது மன்னிக்கவும்.ஒருங்கினைந்த தஞ்சைப்பகுதியின் வரலாறு நான் எழுத நினைக்கவில்லை அதற்கான அறிவும் இல்லை,இவர்களின் பொதுவான பழக்க வழக்கங்களை நகைச்சுவையாக அனுகுவதே என் நோக்கமே.

மீன் உணவு ஒரு பிரதான உணவு, கடலோர தஞ்சையினர் பெரும்பாலும் கடல் மீன்களை விரும்பி சாப்பிடுவர்.குறிப்பாக நாகைக்கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் கோலா மீன் அநேகரின் விருப்ப மீனாக இருக்கும்.இதன் தலையை உண்ண மாட்டார்கள், சில வீடுகளில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள் ஏதோ விஷம் உள்ளது சாப்பிடும் கோழி கூட இறந்துவிடும் என்று, எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை.இந்த கோலா மீன் தமிழகத்தின் வேறு பகுதிகளில் உண்டா எனத்தெரியவில்லை.

இந்த மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தும் நாகை மீனவர்கள், இயற்கை மற்றும் இலங்கையின் சீற்றங்களைத் தாண்டிதான் உயிர் வாழ வேண்டிய கட்டாயம்.இவர்கள் வாழ்வில் ஒருநாள் ஒளி பிறக்கும் என நம்புவோம்.

தஞ்சை நகர்ப்பகுதி ஒட்டியுள்ளவர்கள ஆத்து மீன்,மற்றும் ஏரி மீன் விரும்பிகள் குறிப்பாக விரா மீன்,சேற்று நாத்தம் அடித்தாலும் ஏரிக்கெழுத்தி,ஆறா,குறவை போன்ற மீன்களும் விருப்பமான மீன் உணவு.வளர்ப்பு கெண்டை மீன்கள் மலிவான ஒரு மாற்று மீன். இவர்கள் பெரும்பாலும் கடல் மீன் உண்ணமாட்டார்கள், குறிப்பாக அண்ணன் ஜோசப் பால்ராஜ் கல்லணை மீன் சாப்பிடுவார் ஏன் கருவக்காய் கூட சாப்பிடுவார்,ஆனால் கடல் மீன் உண்ணமாட்டார்(உண்மையா?).கோலா மீன் தஞ்சையை அடையும்போது கோழா மீனாகிவிடும்....இரண்டு வகை மீனையும் வகை தொகை தெரியாமல் சாப்பிடும் என்னைப்போன்ற ஏகாம்பரமும் உண்டு.

பின்னூட்டத்தில் நண்பர்கள் சொன்னது போல் கும்பகோணம் டிகிரி காப்பியின் சுவையே அலாதிதான், தஞ்சையில் நான் படிக்கும் போது வெங்கடா லாட்ஜ்ல் ஒரு காப்பி குடித்துவிட்டு, அதே கடையில் உடனடியாக குடிக்க வெட்கப்பட்டு பக்கத்தில் உள்ள காபி பேலஸில் அடுத்த காப்பி குடிப்பதற்கு அதன் சுவையே காரணம். ரயிலில் வரும்போது கும்பகோணம் அருகில் உள்ள ஊரில்(பேரளம்) ஒரு வடை விற்பார்கள் அருமை.

திருநெல்வேலி அல்வா அளவு புகழ் பெறாவிட்டாலும், திருவையாறு அசோகாவின் சுவை தனித்துவம் வாய்ந்தது, தஞ்சைக்கு வெளியில் இந்த இனிப்பு வகை வேறு எங்கும் உள்ளதா என தெரியவில்லை,இதன் முக்கியமான மூலப்பொருள் பச்சைப்பயறு அது மட்டும் தெரியும் பின்னூட்டம் மூலம் ஒருவெளை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.


அசோகா செய்ய

சுட்டிக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

மிகப்பெரிய ஊண் உண்ணியான எனக்கு தஞ்சையின் தனித்துவமான சைவ சாப்பாடு பற்றிய அறிவு எதுவும் இல்லாததால் பின்னூட்டத்தில் வரும் தகவல்கள் வெட்டி ஒட்டப்படும்.நாகை,திருவாரூர்,கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை சிறப்பு உணவு இருக்கலாம் தெரியவில்லை.

காஞ்சி,சின்னாளப்பட்டு மாதிரி இங்கேயும் திருபுவணம் பட்டு சேலைத்தறிகள்,கும்பகோணம் பகுதியில் உண்டு,அதற்கு மேல் எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. பின்னூட்டத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.விவசாயம்,சீவல் தாண்டிய தொழிலாகையால் இதனை செய்பவர்கள் சவுராஷிட்டிரா இனத்தை சார்ந்தவர்களே பெரும்பாண்மையினர்.

தொழில் வளர்ச்சி குறைவான பகுதி ஆதாலால், ஒருமுறை மயிலை எம்.பியான மணிசங்கர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தபோது, எப்படி மணல் அடிச்சு ஒட்டகத்த கொண்டு வந்து விடப்போறாரன்னு சொன்ன கும்பகோணம் குசும்பர்களும் உண்டு...

தொடரும்...

Wednesday, November 12, 2008

2030 தில் காவிரி பிரச்சனை

கர்நாடக முதல்வர் : வணக்கம் ..வணக்கம் அண்ணாச்சி, உன்கேளை பாத்ததிலே எனக்கு ரெம்ப சந்தோசம்

தமிழக நீர்ப்பாசன அமைச்சர் : பத்திங்களா. இவரு குசும்பை, தமிழ்ல பேசுனா நாம ஏதும் கேள்வி கேட்க மாட்டமுன்னு

தமிழக முதல்வர் : இரும், எல்லாம் நான் பார்த்து கொள்கிறான்.(க.முதல்வரை பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு) ஐயா தமிழகத்திலே விவசாயம் வரலாறு ஆகி 10 வருஷம் ஆச்சு, மறுபடியும் தமிழ் நாட்டுல விவசாயம் பண்ண முயற்சி எடுக்கிறோம்.

க.முதல்வர் : (கையை தட்டி கொண்டு) அருமை..அருமை, அப்ப நிறைய வரலாற்று ஆராச்சியாளர்கள் உருவாகிட்டாங்கனு சொல்லுங்க

நீ.அமைச்சர் : ஐயா நீங்க எங்களை புகழுறீங்களா? நக்கல் பண்ணுரீங்கலானு தெரியலையே?

த.முதல்வர் : முதல்வர் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்?

க.முதல்வர் : ஐயா காவிரி எங்களுக்கே சொந்தம்,அங்கேயிருந்து ஒரு சொட்டு தண்ணி ௬ட கிடைக்காது யாருக்கும், எதோ பிரதம மந்திரி சொன்னாருன்னு வந்தேன் அவ்வளவு தான்.

நீ.அமைச்சர் : ஐயா ஒரு தாய் வயத்து புள்ளை யில் ஒரு புள்ள பசியிலே செத்து மடியுறதுதான் தர்மமா?

(க.முதல்வர் விசில் அடித்து கொண்டு, கை தட்டுகிறார்)

நீ.அமைச்சர் : பாத்திங்களா, நான் போட்ட போடு எப்படி வேலை செய்யுது

க.முதல்வர் : நீங்க, நல்லா வசனம் பேசுறீங்க, தமிழ் சினிமாவிலே நல்ல எதிர் காலம் இருக்கு, கை தட்டு விசில் எல்லாம் அதுக்கு தான்

நீ.அமைச்சர் :அட பாவி,நான் வயது எரிச்சலில் பேசிகிட்டு இருக்கேன், நீ வகை தெரியாம பேசுற

க.முதல்வர் : இன்னைக்கு என்ன பேசனுமுன்னு நான் எல்லாம் நேத்தே அனைத்து கட்சி ௬ட்டத்துல முடிவு பண்ணியாச்சு, நீங்க அனைத்து கட்சி ௬ட்டம்னுனா எல்லோரும் தெறிச்சு ஓடி போறீங்க.

நீ.அமைச்சர் : இவருக்கு நாக்குல சனி நின்னு தலைய விரிச்சு ஆடுது முதல்வரே

த.முதல்வர் : நீங்க ஒரு மக்கள் தலைவர் மாதிரி பேசாம, வாட்லாறு நாகராஜ் புள்ள மாதிரி பேசுறீங்க, எல்லா மாநிலத்திலேயும் மக்கள் தான் இருக்காங்க,நதி,காற்று,வானம், பூமி இதெல்லாம் சொந்தம் கொண்டாட ௬டாது. ஐயா நாங்க உங்க உரிமையை பறிக்க வரலை,உங்க உரிமையிலே எங்களுக்கு வேண்டிய பங்கை கேட்கிறோம்

(உடனே கர்நாடக நீர் பாசன அமைச்சர், கை தட்டி,விசில் அடி, சட்ட பையிலே வச்ச பேப்பர் எல்லாம் அள்ளி வீசி எறியுராறு)

நீ.அமைச்சர் : ஒரு முடிவோட தான் இருக்காங்க போல தெரியுது, என்ன மாதிரி குத்தாட்டம் போடுறான் பாருங்க, நீங்க சூப்பர் ஸ்டார் ஆகிடுவீங்கனு சொல்லுவான் போல

கர்நாடக நீர் பாசன அமைச்சர் : இந்த வசனத்தை எந்த படத்திலே வேணுமுனாலும் வைக்கல்லாம்

த.முதல்வர் : ஐயா நாம எல்லாரும் இந்தியாவுக்கு கிழே தானே இருக்கிறோம், பகுந்து கொடுத்து நாம எல்லாரும் நல்ல வாழனுமுனு நான் நினைக்கிறேன் .

க.முதல்வர் : நான் கர்நாடகத்திற்கு கிழே வரேன், நீங்க இந்தியாவுக்கு கிழே வந்தால் நான் என்ன செய்ய முடியும்?

நீ.அமைச்சர் : அடி.. உன் மூஞ்சுல என் வலக்கைய வைக்க (அப்படி சொல்லிட்டு க.முதல்வர் சட்டைய பிடிச்சு விட்டார்)

த.முதல்வர் : அமைச்சர் அவரு சட்டைய பிடிக்காதேய்.. சட்டைய பிடிக்காதேய்..

நீ.அமைச்சர் : மன்னிச்சுருங்க, ஆத்திரத்தை அடக்க முடியலை

த.முதல்வர் : அமைச்சரே, நான் சொன்ன அர்த்தம் வேற, அவரு சட்டையை பிடிச்சா, செவுட்டுல அடிக்கமுடியாது

நீ.அமைச்சர் : ஒ.. அப்படி வாறியளா, இப்ப பாருங்க

(பாளர்..பாளர்.. ன்னு க.முதல்வருக்கு அடி, த.முதல்வர் கை சும்மா இருக்குன்னு கர்நாடக நீர் பாசன அமைச்சரை ஒரு வாங்கு வாங்கிட்டாரு)

க.முதல்வர் : அண்ணா என்னை விட்டுடுங்க, நாமே எல்லாம் ஒரு தாய் புள்ளை, நான் உங்க தம்பி

நீ.அமைச்சர் : இவ்வளவு நேரமா நாங்க இதை தானே சொன்னோம், வாயை கொடுத்து உடம்பை புண்ணாகிட்டீங்களே

த.முதல்வர் : மயிலே மயிலே இறகு போடுன்னு கேட்டாச்சு, அம்மா தாயே ன்னு கேட்டாச்சு, எதுக்கும் வசத்துக்கு வராத உனக்கு
நீ.அமைச்சர் : இந்தா பத்திரம், தமிழகத்துக்கு பாதி அளவு தண்ணீர் திறந்து விடுவேன்னு எழுதி இருக்கு, கை எழுத்து போடு

த.முதல்வர் : கை எழுத்து போடலை, உன் குடலை உருவிடுவேன் ( மறைத்து வச்சு இருந்த திருப்பாச்சி அருவாளை எடுத்து காட்டுறாரு). எவனாவது தடுக்க வந்தால், உங்களுக்கும் இதேதான்

க.முதல்வர் : கை எழுத்து போட்டு விடுறேன் அண்ணா, கொடுங்க ( பத்திரத்தில் கை எழுது போட்டு, அதை த.முதல்வரிடம் கொடுக்கிறார்)

த.முதல்வர் : வெளியே போய், பிரச்சனையை பேசி தீத்திடோம்னு பேட்டி கொடுக்கணும், ஓடிப்போ ..

க.முதல்வர் : (சட்டை, வேஷ்டி எல்லாம் சட்ட சபையிலே சண்டை போட்ட மாதிரி கிழிச்சு போட்டுட்டு) என்னை என்ன கேணயன்னு நினைச்சீங்களா?இங்க நடந்த எல்லாத்தையும் திரட்டு தனமா வீடியோ எடுத்தாச்சு, அது லைவ் ஓடிகிட்டு இருக்கு, உங்களுக்கு சங்கு தான்
(பின்னாடி நின்னு கிட்டு இருந்த க.தலைமை செயலர் கை கட்டி, விசில் அடித்து)

க.தலைமை செயலர் : இது தான் நெத்தி அடி ..

த.முதல்வர் : அரச கவி, உன் விக்கை எடுத்து போட்டு மேக் அப் கலைச்சு போடு ( இருவரும் தங்களது மேக் அப் யை கலைத்து போடு கிறார்கள்)

க.முதல்வர் : யார் நீங்க, எப்படி இங்க வந்தீங்க..(த.முதல்வர் வேடத்தில் இருந்த வருங்கால முதல்வர்)

வருங்கால முதல்வர் : நான் வருங்கால முதல்வர், இது எங்க அரச கவி

அரச கவி : ஐயா, எவ்வளவோ யோசிக்கோம், இதையும் யோசிக்க மாட்டோமா? கிராபிக்ஸ் ல நாங்க அடிச்சதை எல்லாம் நீங்க அடிச்சதா மாத்தி லைவ் ஓடிகிட்டு இருக்கு, வெளியே போனால் உனக்கு தான் சங்கு

(ஊஊஊஉ..ஊஊஊஊஉ)

க.முதல்வர் : நல்ல திட்டம் போட்டு என்னை எமாத்திடீன்களே.

அரச கவி : இந்த மாதிரி இத்துப்போன திட்டம் எல்லாம் போடுறதுக்குனே, ஒரு இடி விழுந்த இருளாண்டி இருக்கான், அவன் தான் இதுக்கு கதை,திரை கதை,வசனம் எழுதினது

(மறு நாள், 356 வது பிரிவை பயன் படுத்தி க.சட்டசபை கலைக்க பட்டது, காவிரியிலே தண்ணி திறந்து விடப்பட்டது, தமிழகம் எங்கும் முதல்வர் வாழ்க ..காவிரி கண்ட நாயகன் வாழ்க என வாழ்த்து கோஷங்கள்)

Wednesday, November 5, 2008

2030 தில் மின் வெட்டு

மின்துறை அமைச்சர் : முதல்வரே.. என்ன அறையிலே ஒரே கும் இருட்டு

முதல்வர் :ஹும்.. தமிழகத்தின் மின் வெட்டு தலைமை செயலகத்தையும் தாக்கி விட்டது, ஆமா நான் உம்மை அழைத்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது, இது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்?

மின்துறை அமைச்சர் : இந்த சூழ்நிலைக்கு நம்ம கவிஞ்சரிடம் எதாவது கவிதை எழுத முடியுமா என்று விவாதித்து கொண்டிருந்தேன்

முதல்வர்: கதை,கவிதை, கட்டுரை என்ற பெயரில் கும்மி அடிப்பதை நீர் இன்னும் நிறுத்த வில்லையா?

மின்துறை அமைச்சர் : என்ன முதல்வரே இப்படி சொல்லுறீங்க, எழுத்தை வச்சு தானே நீங்கள் இன்று முதல்வராகவும், நான் மின் துறை அமைச்சர் ஆகவும் இருக்கிறோம்

முதல்வர்: நான் எதிர் காட்சிகளுக்கு எப்படி பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கிறேன், நீர் என்ன வென்றல் கதை, கட்டுரை என்று காமெடி அடித்துக்கொண்டு இருக்கீர்

மின்துறை அமைச்சர் : மன்னிக்கவும் முதல்வரே, நீங்க வழக்கம் போல மொக்கை போட ௬ப்பிடுரீங்கலோனு நினைச்சேன்.நீங்கள் தான் புள்ளி விவரம் வைத்து அறிக்கைகளை விட்டு சமாளிக்கிறீர்களே.

முதல்வர்: அதனாலே தான் நமக்கு தொல்லை நமக்கு, இப்போதெல்லாம் பத்திரிக்கை சந்திப்புக்கு அழைப்பு விட்டால் யாரும் வருவதில்லை, எப்படியும் நீங்கள் கொடுக்கும் தகவல் எங்களிடம் இருக்கு,நீங்களும் ஒன்னும் புதிதாக சொல்லுவதில்லை , அதை நாங்களே போட்டு கொள்கிறோம் என்று சொல்லி விடுகிறார்கள்.

மின்துறை அமைச்சர்: நாம் சிக்கனம் என்று தானே சொன்னோம், இது கஞ்சத்தனமா அல்லவா இருக்கிறது

முதல்வர்: அதுமட்டுமில்லை நம் புள்ளி விவர அறிக்கைகளை, இது புள்ளி விவரமா? புள்ளி ராஜாவா ? இதுக்கு எய்ட்ஸ் வருமான்னு மொக்கை பதிவுகள் நிறைய வருகிறது

மின்துறை அமைச்சர் : அணுசக்தி ஒப்பந்தத்தின் மேல பழி போட முடியாதா?

முதல்வர் : அது ஒரு அண்ட புளுகு ஒப்பந்தம், யுரேனியம் தாரேன் ன்னு சொல்லி யூரியா ௬ட வரலை

அரசவை கவி : முதல்வரே மின்சாரம் தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு இருக்கிறது, நமக்குத்தான் அதை முறையாக பயன்படுத்த முடியவில்லை.

மின்துறை அமைச்சர்: கட்டையில போற கவி, உன் கற்பனைக்கு வேற இடம் இன்னிக்கு கெடைக்கலையா?

முதல்வர் : இரும் அமைச்சரே, அரச கவி சொல்வதை பார்த்தல், நாம் பேசியதை ஒட்டு கேட்டுள்ளார் என தெரிகிறது, இருந்தாலும் அவரின் கருத்தையும் கேட்போம்

அரச கவி : முதல்வர் ஐயா தமிழகத்திற்கு தேவையானது 1000000 மெகா வாட் மின்சாரம் தான், ஆனா நாம இப்ப செலவழிகிறது 1200000

விவசாய செலவு - 10000

தொழிற்சாலை செலவு - 200000

வீடுகளுக்கு செலவு - 300000

மின் திருட்டு செலவு மிச்ச எல்லா மின்சாரமும் போகுது

மின்துறை அமைச்சர் : யோவ், நீரே திருட்டு தனமா இங்க வந்து திருட்டு மின்சாரம், திருவோட்டு மின்சாரமுன்னு கதை விடுறீர்

முதல்வர் : மின் வெட்டு மன்னிக்கணும் மின்துறை அமைச்சர், உம் வாய் வேட்டை நிறுத்தும், அரச கவி ௬றியது முற்றிலும் உண்மை, நாம் நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கிறது, அதை திருட்டு தனமாக எடுப்பவர்களே மின் தடைக்கு காரணம்

அரச கவி : அதற்கான ஆதாரங்களை இதோ பாருங்கள்

மின்துறை அமைச்சர் : ஆதாரமா, இந்த கும் இருட்டிலே உம் குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது

அரச கவி : அமைச்சரே நீர் அடங்கும் எல்லாம் முதல்வர் பார்த்து கொள்வார் முதல்வர் : இனிமேல் பார்க்க என்ன இருக்கு எல்லாம் தெள்ள தெளிவாக தெரியுது, இனிமேல் அரசகவி தான் மின்துறை அமைச்சர்,இப்போதே உம்மை அமைச்சர் பதவியில் இருந்து எடுத்து விடுகிறேன் .

அரச கவி : அதற்கான கோப்பு இதோ, இதில் உங்கள் கையொப்பம் இடுங்கள்

(கையொப்பம் இட்டவுடன் ..)

மின் துறை அமைச்சர் : அப்ப என் கதி இனிமேல்!!!

முதல்வர் : நீர் மறுபடியும் மொக்கை பதிவு எழுத போகலாம், வாரும் அரச கவி நாம் மின் வேட்டை பற்றி ஆலோசனை செய்வோம்.

அரச கவி : அவர் மட்டுமா, நீருமல்லவா உம் பழைய தொழிலாகிய மாடு மேய்க்கவோ இல்லை மொக்கை பதிவு எழுதவோ போகலாம்

முதல்வர் : என்ன விளையாட்டு இது அரச கவி ?

அரச கவி : இதுவே நிஜம், நீர் கை எழுத்து இட்ட கோப்பு, எனக்கு முதல்வர் பதவி தருவதாகவும், நீர் அரசியலை வெட்டு விலகவும் எழுதிய பதிவு பத்திரம்

முதல்வர் : அமைச்சரே பார்த்தீரா, இருவரையும் இந்த நய வஞ்சக கவி ஏமாற்றி விட்டார்

மின்துறை அமைச்சர்: ஹா..ஹா..ஹா..இந்த ஆப்பு உமக்குத்தான், எனக்கு இல்லை.இதற்க்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதியதே நான்தானே

(மின்சாரமும் வருகிறது)