Monday, November 24, 2008

2030 தில் வருங்கால முதல்வரின் வேட்ப்பாளர் தேர்வு

வ.முதல்வர் :(அறைக்குள் வந்தவுடன், ஆச்சரியமாக) அரச கவி என்ன இவ்வளவு ௬ட்டம், என்னைய பாக்க இம்ம்புட்டு ஆர்வம்மா!!! புல்லரிக்குதுப்பா !!


அரச கவி : ஐயா,குமரியிலே கள்ளு கடையிலே ஆரமிச்ச நம்ம கட்சி, உள்ளூர் டாஸ்மாக் ஆக மாறி,வெளிநாட்டு சரக்கு மாதிரி வளர்ந்து அரபிய குதிரை யாட்டம் நிக்குது


வ.முதல்வர் : நேத்து அடிச்ச கொள்ளு சரக்கு இன்னும் இறங்கலையா?


அரச கவி : நம்ம கட்சியோட வளர்ச்சி அகில உலகத்தையே குடுமியை பிடிச்சு ஒரு ஆட்டு ஆட்டி விட்டது, நம்ம வளர்ச்சியை பார்த்து வேட்பாளர் தேர்வுக்கு அமெரிக்கா,இங்கிலாந்து,ஜப்பான் ல இருந்து எல்லாம் கழகத்திலே போட்டியிட விண்ணப்பம் வந்திருக்கு

வா.முதல்வர் : ஆகா, ஒரு மனுஷன் எத்தனி ஊருக்கு தான் தலைவர் ஆக முடியும்,என் புகழ் நமிதாவை விட வேகமா பரவுதே,எல்லோருடைய கோரிக்கையும் நிறைவேத்தி விடலாம்.

அரச கவி : வேட்ப்பாளர் பட்டியல் தயாரா இருக்கு, நீங்க ஒரு தடவை பாத்துட்டு கை நாட்டு போட்டா அறிவிப்பை வெளியிடலாம்

வ.முதல்வர் : கை நாட்டு கேட்டு என் தலையிலே துண்டை போடணுமுன்னு ஒரு ௬ட்டம்மா அலையுரீங்கன்னு தெரியுது, முதல்ல வேட்ப்பாளர்களை பாக்கலாம்

அரச கவி : வருங்கால இந்தியாவின் தூண்களே எல்லோரும் உங்க முகர கட்டையை தலைவரிடம் காட்டுங்க

(மக்கள் ௬ட்டம் வழக்கம் போல, வா.மு வை கண்டுக்காம எல்லோரும் வாசலை பாத்து இருகாங்க)

வ.முதல்வர் : என்ன அரச கவி, எல்லோருக்கும் மாலை கண் நோயா, திண்ணையை பாக்கிறமாதிரி விட்டத்தை பார்க்கிறார்கள். ஆமா எல்லோரும் எதுக்கு வாசலை பாத்து இருக்காங்க

அரச கவி :உங்க அனல் மின் நிலக்கரி பேச்சை ஆரமிங்க தலைவரே எல்லோரும் சரி ஆகிடுவாங்க.

வ.முதல்வர் : இங்கு அலை கடலென திரண்டு வந்திருக்கும் கழக கண்மணிகளே, கடல் அலை ஓய்ந்தாலும் உங்கள் அன்பு அலை ஓயாது என்பதை நிருபித்து விட்டீர்கள்.

(இதற்குள் ௬ட்டத்தில் இருந்த அனைவரும் நாற்காலியில் இருந்து எழுந்து, விழுந்தடித்து ஓடுகிறார்கள், "என்னை விட்டு விடு.." "என்னை விட்டு விடு.." என்று கதறி கொண்டு,எப்படி இந்த பதிவை படிச்சு புட்டு ஓடுவாங்களே அதே மாதிரி )

வ.முதல்வர் : அரச கவி என்ன நடக்குது, வழக்கம் போல நீர் ஏதும் சதி பண்ணிவிட்டீரா, ஏன் எல்லோரும் தெறிச்சு ஓடுறாங்க?

(அரச கவி தலை சொரிகிறார்)

வ.முதல்வர் : இல்லாத இடத்திலே என்னத்தை தேடுறீங்க

அரச கவி :தலைவரே, மக்களை ௬ட்டத்துக்கு வரவழைக்க கவர்ச்சி நடிகை "பல்க்" பமிலா நம்ம கட்சியிலே சேருதாங்கன்னு ஒரு ரகசிய அறிவிப்பை நாடு முழுவதும் வெளியிட்டேன், அது நல்லா வேலை செஞ்சு இருக்கு

வா.முதல்வர் :மொக்கை பிரச்சனைக்கே கட்டு சோறு கட்டிக்கிட்டு முனு நாளைக்கு முன்னாடி வருவீங்க, இந்த மாதிரி சர்வதேச பிரச்சனையை மருந்துக்கு ௬ட கேட்கிறது கிடையாது.இப்ப "பல்க்" பமிலாவை எங்கேன்னு போய் தேடுவேன்?

அரச கவி : அவங்க புது காதலரோட இன்ப சுற்றுலா போய் இருகாங்க.

வா.முதல்வர் : நீர் குசு..குசு படிக்கிறதை இன்னும் விடலையா?

அரச கவி : பழக்க தோஷம் தலைவரே.. மாத்த முடியலை, ஏதாவது யோசனை பண்ணி ௬ட்டத்தை நம்ம பக்கம் திருப்புங்க, உங்களை நம்பி தானே எங்க பொழைப்பு ஓடுது.

வா.முதல்வர் : உனக்கு மட்டுமா, அந்த இடி விழுந்த இருளான்டிக்கும் என்னை வச்சு தானே பொழப்பு ஓடுது.

அரச கவி : யோசிக்க நேரமில்லை, சீக்கிரம் ராணி தேனியை ௬ட்டிவிட்டு வாங்க, இல்லை வேட்ப்பாளர்களையும் நாம வழக்கம் போல கடன் வாங்க வேண்டிய வரும்.

வா.முதல்வர் : என் ரத்த நரம்பின் ரத்தங்களே, "பலக்" பமிலா எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறார்கள் .

(உடனே ௬ட்டம் எப்போதோ வார காவிரி வெள்ளம் மாதிரி திபு..திபு ன்னு உள்ளே ஓடி வாராங்க)

அரச கவி : ஐயா நீங்க உங்க பேரை நீங்க இனிமேல முக்கால முதல்வர் ன்னு மாத்தி விடலாம் .

வா.முதல்வர் : எப்படி? ( இல்லாத மிசையை தடவி விடுறாரு).விஷயம் என்னனா, நடிகை யோட நாய்க்கு தும்மல் வந்து ஒரே இருமலாம், அதனாலே "பலக்" பமிலா அதை மருத்துவ மனைக்கு ௬ட்டிட்டு போய் இருகாங்க, மக்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி இருகாங்க.

(முதல் பாதி பேசின முடிஞ்ச உடனே, ஹிந்தி படம் பாக்க பால் தாக்கரே ஓசியிலே ௬ப்பிடுற மாதிரி தலை தெறிக்க ஓடிட்டாங்க)

அரச கவி : வருங்கால முதல்வர் மீண்டும் வெத்து முதல்வர் ஆக்கி புட்டாங்களே (ஒப்பாரி வைக்க ஆரமிச்சு புட்டாரு அரச கவி,என்ன செய்வதுன்னு தெரியாம திருவிழாவிலே காணாம போன கை புள்ள மாதிரி வா.மு முழிக்கிறாரு)

வா.முதல்வர் : மக்கள் எல்லோரும் எங்கே போய்டாங்க?

அரச கவி : அதை கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு உண்டு, யாரவது இதை படிச்சா போட்டியிலே கலந்து கோங்க, உங்க பதிலும், இடி விழுந்த இருளாண்டி பதிலும் ஒன்னா இருந்தா உங்களுக்கு தான் பரிசு, வா.மு அவருடைய சொந்த பணத்திலே இருந்து கொடுப்பார்.(சொல்லி விட்டு வா.மு வின் தலையில் துண்டை போடுகிறார்)

பதிவர்களே, பிரபல பதிவர் உருப்புடாதது அணிமா பற்றிய செய்தி

பிரபல பதிவர் உருப்புடாதது அண்டர்ஸ்கோர் அணிமா அவர்கள் பற்றிய ஒரு முக்கிய செய்தி, கடந்த சில வாரங்களாக தமிழ்மணத்தில் இனைக்க முடியாமல் தடுமாறி, கடைசியாக ஒரு பெண்ணுக்கு உதவும் செயலில் இறங்கியது யாவரும் அறிந்ததே.

அந்த பெண்ணுக்கு உதவியாக பதிவர்கள் கொடுத்த சில கோடிகளை எடுத்துக்க்கொண்டு அந்த பெண்ணிடம் ஒப்படைப்பதற்காக ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமாணப் பயணம் செய்து கொண்டிருந்த போது, பணம் கொண்டு வருவது தெரிந்த கடல் கொள்ளைர்கள் விசைப்படகுகளில் வந்து விமாணத்தை மறித்து அவரை கடத்தி சென்றுள்ளனர்.

இது பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும்.

Friday, November 21, 2008

இல்லாத நடிகையின் பொல்லாத நாய்.

அந்த நடிகை நாய் வாங்கிய செய்தி எப்படியோ நிறைய பேருக்கு தெரிந்து இருந்தது.

ஊரெல்லாம் இந்த நடிகை வாங்கிய அந்த நாய் இப்போது வளர்ந்து பெரிதாகி அதன் மதிப்பு கூடிவிட்டது பற்றியே பேச்சு.

ஒரு பிரபலமான நாய் வியாபாரி நடிகையின் நாய் விற்பனைக்கு வந்து இருக்குது அப்படின்னு அறிவித்தார், நாய் வியாபாரியின் மேல் உள்ள நம்பிக்கையை விட நடிகை வளர்த்த நாய் என்றவுடன் நல்ல விலைக்கு நாய் விற்கப்பட்டது.

நாய் வாங்கியவர் பணத்தை கொடுத்தார், நடிகை எப்படி இருக்காங்க அப்படின்னு விசாரித்தார் நாய் கூடிய விரைவில் டெலிவரி செய்யப்படும் என்பதை ஏற்று அதற்கான ரசீதை வாங்கிக்கொண்டு சென்றார்.

இதற்கிடையில் நடிகையின் நாயை வாங்கிய ரசீதை ஒரு பிரபல வங்கியிடம் நடிகையின் நாய் டாகுமென்ட் என்று சொல்லி வாங்கிய விலையை விட ஏழு மடங்கு அதிகம் விலைக்கு அடகு வைத்தார்.

பிரபல வங்கியிடம் நடிகையின் நாய் அடகு பத்திரம் உள்ளதை கேள்விப்பட்டு வெளிநாட்டு வங்கிகள் அதில் முதலீடு செயதது.

வங்கி செய்யும் முதலீட்டை பார்த்து அதுவும் நடிகையின் நாய் என்றவுடன் பொதுமக்களும் வங்கியின் மேல் உள்ள நம்பகத்தன்மையால் முதலீடு செய்தனர்.

அந்த நாய் அடகுப்பேப்பரின் மேல் காப்பீடு எடுத்து அதை 15 பேருக்கு 30 மடங்கு அதிக விலைக்கு விற்றனர்.இல்லாத அந்த நடிகையின் பெயரை சொல்லியே அந்த இல்லாத பொல்லாத நாயை பல கோணங்களில் வியாபாரம் செய்தனர்.

வங்கியிடம் நாயை அடகு வைத்தவர் பணமே கட்டவில்லை, வங்கி திவாலானது, பொதுமக்களும் திவால் ஆனார்கள்

ஏன் இப்படி ஆனது

தலைப்பை ஒருமுறை மீண்டும் படியுங்கள்.

பிகு: சத்யம் கம்யூட்டர்ஸ் செயத ஊழல் செய்தியை பார்த்தவுடன் மறுபதிவிடும் எண்ணம் தோண்றியது

பி:கு: ஒரு தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு முதலாளித்துவத்தை நம்பும் நான், முதலாளித்துவத்தில் உள்ள ஊழல்களை விமர்சனம் செய்ய ஒரு சிறு முயற்சி.

முதலாளித்துவம் வெளிப்படையாக செயல்பட்டிருந்தால்,சரியான வளர்ச்சி பாதையில் சென்றிருக்க கூடும். முதலாளித்துவம் சுய விமர்சனம் செய்து தன்னை தானே திருத்திக்கொண்டு பொதுமக்களுக்கு எப்போதும் போல் பலனளிக்கும் என நம்புவோம்.

Sunday, November 16, 2008

நான் முதலமைச்சர் ஆயிட்டா?

முதலமைச்சர் கனவுல தமிழ் நாட்டுல
பல பேரு வருச கட்டி நிக்கிறப்போ நமக்கு
அந்த வாய்ப்ப இங்க எனக்கு கொடுத்து
இருக்காங்க!

சரி.. நெஜமாவே முதல் அமைச்சர் ஆயிட்டா ?
என்ன செய்யலாம் அப்படின்னு ராப்பகலா
படு பயங்கரமா யோசனை பண்ணின விளைவுதான்
இது. இத மொக்கையா எடுத்துகிரவங்க மொக்கையா
எடுத்துக்கலாம், சீரியஸா எடுத்துகிரவங்க சீரியஸா
எடுத்துக்கலாம்.

அதாவது!''சிறந்த குடி மக்களை உருவாக்கும் திட்டம்''

பத்தாவது வரை படிச்சவங்களுக்கு 1 புள்ளி

+2 படிச்சவங்களுக்கு 2 புள்ளி

டிகிரி படிச்சவங்களுக்கு 3 புள்ளி

அதுக்கு மேல படிச்சவங்களுக்கு 4 புள்ளி


ரத்த தானம் பண்ணினா ஒரு தடவைக்கு 2 புள்ளி

5 தடவை ரத்த தானம் பண்ணினா போனஸ் 5 புள்ளி

கண் தானம் பண்ணினா 10 புள்ளி

ஓட்டு போட்டா 2 புள்ளி

தொடர்ந்து 3 தடவை ஓட்டு போட்டா போனஸ் 5 புள்ளி

ஒரு குழந்தை பிறந்த உடன் குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிரவங்களுக்கு

5 புள்ளி 2 குழந்தை பிறந்த உடன் பண்ணிகிரவங்களுக்கு 2 புள்ளி

அஞ்சு வருஷம் எந்த போலீஸ் கேஸ் ஏதும் இல்லாதவங்களுக்கு 5 புள்ளி

வருமான வரி கட்டினா 5 புள்ளி

புள்ளைங்கள குறைஞ்ச பட்சம் பத்தாவது வரை படிக்க
வைச்சா 5 புள்ளி

சாலை விதிகளை சரியா கடை பிடிச்சா 5 புள்ளி

(
சாலை விதிகளை சரியா கடை பிடிக்கிறத எப்படி
கண்டு பிடிக்கிறது? அது யோசனைல இருக்கு )


இப்படி அதிக புள்ளிகள வாங்குறவங்களுக்கு
சிறந்த குடிமன், குடிமகள் சான்றிதழ் வழங்க
படும். புள்ளிகள் வழங்குதல் அந்தந்த துறைகளில்
பெற்று கொள்ளலாம்.

இதற்கென தனி அமைச்சகம் உருவாக்க படும்.

இதனால் என்ன பலன் ,,,

சிறந்த குடி மக்களுக்கு வங்கி கடன் வழங்குதல்
எளிதாக்கப்படும்.

இலவச மருத்துவ காப்பீடு வழங்க படும்.

கல்வி துறையில் இவர்களுக்கென தனி இட
ஒதுக்கீடு வழங்க படும்

ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு
கணிசமான அளவு பென்சன் வழங்க படும்.

பஸ்,ரயில்,விமான கட்டணங்களில் சலுகை
அளிக்கப்படும்



மேலும் ஆலோசனைகள் பொது மக்களிடம்

எதிர்பார்க்க படுகிறது.

Wednesday, November 12, 2008

2030 தில் காவிரி பிரச்சனை

கர்நாடக முதல்வர் : வணக்கம் ..வணக்கம் அண்ணாச்சி, உன்கேளை பாத்ததிலே எனக்கு ரெம்ப சந்தோசம்

தமிழக நீர்ப்பாசன அமைச்சர் : பத்திங்களா. இவரு குசும்பை, தமிழ்ல பேசுனா நாம ஏதும் கேள்வி கேட்க மாட்டமுன்னு

தமிழக முதல்வர் : இரும், எல்லாம் நான் பார்த்து கொள்கிறான்.(க.முதல்வரை பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு) ஐயா தமிழகத்திலே விவசாயம் வரலாறு ஆகி 10 வருஷம் ஆச்சு, மறுபடியும் தமிழ் நாட்டுல விவசாயம் பண்ண முயற்சி எடுக்கிறோம்.

க.முதல்வர் : (கையை தட்டி கொண்டு) அருமை..அருமை, அப்ப நிறைய வரலாற்று ஆராச்சியாளர்கள் உருவாகிட்டாங்கனு சொல்லுங்க

நீ.அமைச்சர் : ஐயா நீங்க எங்களை புகழுறீங்களா? நக்கல் பண்ணுரீங்கலானு தெரியலையே?

த.முதல்வர் : முதல்வர் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்?

க.முதல்வர் : ஐயா காவிரி எங்களுக்கே சொந்தம்,அங்கேயிருந்து ஒரு சொட்டு தண்ணி ௬ட கிடைக்காது யாருக்கும், எதோ பிரதம மந்திரி சொன்னாருன்னு வந்தேன் அவ்வளவு தான்.

நீ.அமைச்சர் : ஐயா ஒரு தாய் வயத்து புள்ளை யில் ஒரு புள்ள பசியிலே செத்து மடியுறதுதான் தர்மமா?

(க.முதல்வர் விசில் அடித்து கொண்டு, கை தட்டுகிறார்)

நீ.அமைச்சர் : பாத்திங்களா, நான் போட்ட போடு எப்படி வேலை செய்யுது

க.முதல்வர் : நீங்க, நல்லா வசனம் பேசுறீங்க, தமிழ் சினிமாவிலே நல்ல எதிர் காலம் இருக்கு, கை தட்டு விசில் எல்லாம் அதுக்கு தான்

நீ.அமைச்சர் :அட பாவி,நான் வயது எரிச்சலில் பேசிகிட்டு இருக்கேன், நீ வகை தெரியாம பேசுற

க.முதல்வர் : இன்னைக்கு என்ன பேசனுமுன்னு நான் எல்லாம் நேத்தே அனைத்து கட்சி ௬ட்டத்துல முடிவு பண்ணியாச்சு, நீங்க அனைத்து கட்சி ௬ட்டம்னுனா எல்லோரும் தெறிச்சு ஓடி போறீங்க.

நீ.அமைச்சர் : இவருக்கு நாக்குல சனி நின்னு தலைய விரிச்சு ஆடுது முதல்வரே

த.முதல்வர் : நீங்க ஒரு மக்கள் தலைவர் மாதிரி பேசாம, வாட்லாறு நாகராஜ் புள்ள மாதிரி பேசுறீங்க, எல்லா மாநிலத்திலேயும் மக்கள் தான் இருக்காங்க,நதி,காற்று,வானம், பூமி இதெல்லாம் சொந்தம் கொண்டாட ௬டாது. ஐயா நாங்க உங்க உரிமையை பறிக்க வரலை,உங்க உரிமையிலே எங்களுக்கு வேண்டிய பங்கை கேட்கிறோம்

(உடனே கர்நாடக நீர் பாசன அமைச்சர், கை தட்டி,விசில் அடி, சட்ட பையிலே வச்ச பேப்பர் எல்லாம் அள்ளி வீசி எறியுராறு)

நீ.அமைச்சர் : ஒரு முடிவோட தான் இருக்காங்க போல தெரியுது, என்ன மாதிரி குத்தாட்டம் போடுறான் பாருங்க, நீங்க சூப்பர் ஸ்டார் ஆகிடுவீங்கனு சொல்லுவான் போல

கர்நாடக நீர் பாசன அமைச்சர் : இந்த வசனத்தை எந்த படத்திலே வேணுமுனாலும் வைக்கல்லாம்

த.முதல்வர் : ஐயா நாம எல்லாரும் இந்தியாவுக்கு கிழே தானே இருக்கிறோம், பகுந்து கொடுத்து நாம எல்லாரும் நல்ல வாழனுமுனு நான் நினைக்கிறேன் .

க.முதல்வர் : நான் கர்நாடகத்திற்கு கிழே வரேன், நீங்க இந்தியாவுக்கு கிழே வந்தால் நான் என்ன செய்ய முடியும்?

நீ.அமைச்சர் : அடி.. உன் மூஞ்சுல என் வலக்கைய வைக்க (அப்படி சொல்லிட்டு க.முதல்வர் சட்டைய பிடிச்சு விட்டார்)

த.முதல்வர் : அமைச்சர் அவரு சட்டைய பிடிக்காதேய்.. சட்டைய பிடிக்காதேய்..

நீ.அமைச்சர் : மன்னிச்சுருங்க, ஆத்திரத்தை அடக்க முடியலை

த.முதல்வர் : அமைச்சரே, நான் சொன்ன அர்த்தம் வேற, அவரு சட்டையை பிடிச்சா, செவுட்டுல அடிக்கமுடியாது

நீ.அமைச்சர் : ஒ.. அப்படி வாறியளா, இப்ப பாருங்க

(பாளர்..பாளர்.. ன்னு க.முதல்வருக்கு அடி, த.முதல்வர் கை சும்மா இருக்குன்னு கர்நாடக நீர் பாசன அமைச்சரை ஒரு வாங்கு வாங்கிட்டாரு)

க.முதல்வர் : அண்ணா என்னை விட்டுடுங்க, நாமே எல்லாம் ஒரு தாய் புள்ளை, நான் உங்க தம்பி

நீ.அமைச்சர் : இவ்வளவு நேரமா நாங்க இதை தானே சொன்னோம், வாயை கொடுத்து உடம்பை புண்ணாகிட்டீங்களே

த.முதல்வர் : மயிலே மயிலே இறகு போடுன்னு கேட்டாச்சு, அம்மா தாயே ன்னு கேட்டாச்சு, எதுக்கும் வசத்துக்கு வராத உனக்கு
நீ.அமைச்சர் : இந்தா பத்திரம், தமிழகத்துக்கு பாதி அளவு தண்ணீர் திறந்து விடுவேன்னு எழுதி இருக்கு, கை எழுத்து போடு

த.முதல்வர் : கை எழுத்து போடலை, உன் குடலை உருவிடுவேன் ( மறைத்து வச்சு இருந்த திருப்பாச்சி அருவாளை எடுத்து காட்டுறாரு). எவனாவது தடுக்க வந்தால், உங்களுக்கும் இதேதான்

க.முதல்வர் : கை எழுத்து போட்டு விடுறேன் அண்ணா, கொடுங்க ( பத்திரத்தில் கை எழுது போட்டு, அதை த.முதல்வரிடம் கொடுக்கிறார்)

த.முதல்வர் : வெளியே போய், பிரச்சனையை பேசி தீத்திடோம்னு பேட்டி கொடுக்கணும், ஓடிப்போ ..

க.முதல்வர் : (சட்டை, வேஷ்டி எல்லாம் சட்ட சபையிலே சண்டை போட்ட மாதிரி கிழிச்சு போட்டுட்டு) என்னை என்ன கேணயன்னு நினைச்சீங்களா?இங்க நடந்த எல்லாத்தையும் திரட்டு தனமா வீடியோ எடுத்தாச்சு, அது லைவ் ஓடிகிட்டு இருக்கு, உங்களுக்கு சங்கு தான்
(பின்னாடி நின்னு கிட்டு இருந்த க.தலைமை செயலர் கை கட்டி, விசில் அடித்து)

க.தலைமை செயலர் : இது தான் நெத்தி அடி ..

த.முதல்வர் : அரச கவி, உன் விக்கை எடுத்து போட்டு மேக் அப் கலைச்சு போடு ( இருவரும் தங்களது மேக் அப் யை கலைத்து போடு கிறார்கள்)

க.முதல்வர் : யார் நீங்க, எப்படி இங்க வந்தீங்க..(த.முதல்வர் வேடத்தில் இருந்த வருங்கால முதல்வர்)

வருங்கால முதல்வர் : நான் வருங்கால முதல்வர், இது எங்க அரச கவி

அரச கவி : ஐயா, எவ்வளவோ யோசிக்கோம், இதையும் யோசிக்க மாட்டோமா? கிராபிக்ஸ் ல நாங்க அடிச்சதை எல்லாம் நீங்க அடிச்சதா மாத்தி லைவ் ஓடிகிட்டு இருக்கு, வெளியே போனால் உனக்கு தான் சங்கு

(ஊஊஊஉ..ஊஊஊஊஉ)

க.முதல்வர் : நல்ல திட்டம் போட்டு என்னை எமாத்திடீன்களே.

அரச கவி : இந்த மாதிரி இத்துப்போன திட்டம் எல்லாம் போடுறதுக்குனே, ஒரு இடி விழுந்த இருளாண்டி இருக்கான், அவன் தான் இதுக்கு கதை,திரை கதை,வசனம் எழுதினது

(மறு நாள், 356 வது பிரிவை பயன் படுத்தி க.சட்டசபை கலைக்க பட்டது, காவிரியிலே தண்ணி திறந்து விடப்பட்டது, தமிழகம் எங்கும் முதல்வர் வாழ்க ..காவிரி கண்ட நாயகன் வாழ்க என வாழ்த்து கோஷங்கள்)

Monday, November 10, 2008

வருங்கால முதல்வர் நடிகை நமீதாவுடன் பேட்டி

வருங்கால முதல்வர் நடிகை நமீதாவுடன் பேட்டி

ரசிகப்பெருமக்களே சும்மா நகைச்சுவைக்காக எடுத்த ஒரு கற்பனை பேட்டி, அப்படியே சிரிச்சிட்டு விட்டுருங்க. ஆட்டோவெல்லாம் அனுப்பிச்சிராதீங்க கைப்புள்ள பாணில சொன்னா அந்த அளவுக்கு நான் வொர்த் இல்ல.

வருங்கால முதல்வர் : வணக்கம் நடிகை நமீதா அவர்களே, வருங்கால முதல்வர் வலைத்தளத்திற்கு நேரம் ஒதுக்கி பேட்டி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.

நமீதா: பொதுவா நான் காசு வாங்காம எந்த காரியமும் செய்யரதில்லை, உங்ககிட்ட ஒன்னும் பேராதுனு என்கு தெர்யும்.ஆனாலும் மக்களுக்கு செய்தி என்னோட சேதி போய் சேர்ரதில என்க்கி சந்தோசம்.

வருங்கால முதல்வர் : முதல்ல சினிமா சம்பந்தபட்ட ஒரு கேள்வி, நடிகையின் தொப்புள்ள பம்பரம் விடுறத நீங்க ஆதரிக்கறீங்களா?

நமீதா: நடிகை தொப்புள்ள பம்பரம் விட்டாதான் மக்கள் ரசிக்கிரான், நான் விஜயகாந்த் தொப்புள்ள பம்பரம் விட்டா நீங்க பாப்பீங்களா? இல்ல பம்பரந்தான் சுத்துமா?

வருங்கால முதல்வர் : சரிங்க பம்பரம் விட முடியாது இந்த ஆம்லெட், கோலி குண்டு இதெல்லாம் விஜயகாந்த் தொப்பிள்ள விடலாம்ல?

நமீதா: அந்த ஆம்லெட்ட எடுக்க முடியாது காரணம் உங்களுக்கே தெரியும், ரசிக்கனும் விரும்பமாட்டான். ஆனா கோலி குண்டு விடலாம் அப்போ விஜயகாந்த் சார் ரொம்ப வெட்கப்படுவார் அத தாங்கிங்க மக்கள் தயாரா?

வருங்கால முதல்வர் : சரி இப்போ அரசியல் சம்பந்தமான கேள்வி ரஜினிகாந்த், விஜயகாந்த்,கார்த்திக்,சரத்குமார் போன்ற நடிகர்களின் அரசியல் பிரவேசம் பத்தி என்ன நினைக்கறீங்க?

நமீதா : இந்த கேள்விக்கு நான் கடிசியா பதில் சொல்ரேன்.

வருங்கால முதல்வர் : சரி நீங்கள் குஜராத்தியா? குஜராத்தி மொழி படங்களில் நடித்திருக்கிறீர்களா?

நமீதா : இல்லங்க அங்கெல்லாம் ஹிந்திப்படம் தான் இருக்கே அதுனால குஜராத்தி படமெல்லாம் அவ்லோ கெடயாது.தாண்டியா ஆட்டமெல்லாம் ஆடி ஹிந்தி படத்தில எங்க கலாச்சாரத்த தான் சொல்ராங்க. என்க்கு தமில் கலாச்சார குத்தாட்டம் நல்ல வரும்னு தான் என்ன இங்க அதிகமா விருப்புராங்க.

வருங்கால முதல்வர் : உங்கள விரும்புறதுக்கு வேற காரணமும் இருக்குங்க.

நமீதா: என்ன அது?

வருங்கால முதல்வர் : உங்க நடிப்புதாங்க அது. சரி நீங்கள் நல்லா தமிழ் பேசுகிறீர்களே எப்படி?

நமீதா: தமிழ் திரைப்படத்தில வாய்ப்பு கெடச்சது, கதை புரிஞ்சுக் நான் தமிழ் கத்துக்கிட்டேன், உங்க நடிகை சிரிதேவி ஹிந்தி கத்துக்க்கிட்டாங்கள்ள அது மாதிரி.

வருங்கால முதல்வர் : நீங்க ஏன் தமிழ் திரைப்படத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?

நமீதா: ஹிந்தில என்னோட திறமைய யாரும் கண்டுக்கல, அதான், மொத்த்தில நான் அந்தக்கால திராவிட கட்சியின் ஹிந்தி திணிப்பு எதிர்பிற்கு கடன்பட்டிருக்கேன், இல்லாட்டி தமிழ் சினிமான்னு ஒன்னி இருந்திருக்காது எனக்கும் நடிகையாகும் வாய்ப்பு கம்மிதான்.

வருங்கால முதல்வர் : ரொம்ப நேர்மையா பேசறீங்க , உங்களோட வருங்கால திட்டம் என்ன?

நமீதா: இப்போ சொல்றேன், ரஜினிகாந்த அவரோட அரசியல் பத்தி தெளிவா சொல்லிட்டாரு அதனால நான் ஒன்னும் சொல்ல விரும்பல், மத்தவங்கள பத்தியும் கருத்து சொல்ல விரும்பல, ஏன்னா நானும் வருங்கால முதல்வர் ஆகலாமேன்னு ஒரு எண்ணம் இருக்கு.

வருங்கால முதல்வர் : மன்னிக்கனும் நமீதா, நீங்க நல்லா தமிழ் பேசறீங்க, வருங்கால முதல்வர் ஆகனும்னா அதுக்கு நாங்க தமிழ் எழுதத்தெரியனும் ஒரே ஒரு தகுதி வெச்சுருக்கோம், அதுனால இப்ப உங்கள நாங்க சேத்துக்க முடியாது.

Wednesday, November 5, 2008

2030 தில் மின் வெட்டு

மின்துறை அமைச்சர் : முதல்வரே.. என்ன அறையிலே ஒரே கும் இருட்டு

முதல்வர் :ஹும்.. தமிழகத்தின் மின் வெட்டு தலைமை செயலகத்தையும் தாக்கி விட்டது, ஆமா நான் உம்மை அழைத்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது, இது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்?

மின்துறை அமைச்சர் : இந்த சூழ்நிலைக்கு நம்ம கவிஞ்சரிடம் எதாவது கவிதை எழுத முடியுமா என்று விவாதித்து கொண்டிருந்தேன்

முதல்வர்: கதை,கவிதை, கட்டுரை என்ற பெயரில் கும்மி அடிப்பதை நீர் இன்னும் நிறுத்த வில்லையா?

மின்துறை அமைச்சர் : என்ன முதல்வரே இப்படி சொல்லுறீங்க, எழுத்தை வச்சு தானே நீங்கள் இன்று முதல்வராகவும், நான் மின் துறை அமைச்சர் ஆகவும் இருக்கிறோம்

முதல்வர்: நான் எதிர் காட்சிகளுக்கு எப்படி பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கிறேன், நீர் என்ன வென்றல் கதை, கட்டுரை என்று காமெடி அடித்துக்கொண்டு இருக்கீர்

மின்துறை அமைச்சர் : மன்னிக்கவும் முதல்வரே, நீங்க வழக்கம் போல மொக்கை போட ௬ப்பிடுரீங்கலோனு நினைச்சேன்.நீங்கள் தான் புள்ளி விவரம் வைத்து அறிக்கைகளை விட்டு சமாளிக்கிறீர்களே.

முதல்வர்: அதனாலே தான் நமக்கு தொல்லை நமக்கு, இப்போதெல்லாம் பத்திரிக்கை சந்திப்புக்கு அழைப்பு விட்டால் யாரும் வருவதில்லை, எப்படியும் நீங்கள் கொடுக்கும் தகவல் எங்களிடம் இருக்கு,நீங்களும் ஒன்னும் புதிதாக சொல்லுவதில்லை , அதை நாங்களே போட்டு கொள்கிறோம் என்று சொல்லி விடுகிறார்கள்.

மின்துறை அமைச்சர்: நாம் சிக்கனம் என்று தானே சொன்னோம், இது கஞ்சத்தனமா அல்லவா இருக்கிறது

முதல்வர்: அதுமட்டுமில்லை நம் புள்ளி விவர அறிக்கைகளை, இது புள்ளி விவரமா? புள்ளி ராஜாவா ? இதுக்கு எய்ட்ஸ் வருமான்னு மொக்கை பதிவுகள் நிறைய வருகிறது

மின்துறை அமைச்சர் : அணுசக்தி ஒப்பந்தத்தின் மேல பழி போட முடியாதா?

முதல்வர் : அது ஒரு அண்ட புளுகு ஒப்பந்தம், யுரேனியம் தாரேன் ன்னு சொல்லி யூரியா ௬ட வரலை

அரசவை கவி : முதல்வரே மின்சாரம் தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு இருக்கிறது, நமக்குத்தான் அதை முறையாக பயன்படுத்த முடியவில்லை.

மின்துறை அமைச்சர்: கட்டையில போற கவி, உன் கற்பனைக்கு வேற இடம் இன்னிக்கு கெடைக்கலையா?

முதல்வர் : இரும் அமைச்சரே, அரச கவி சொல்வதை பார்த்தல், நாம் பேசியதை ஒட்டு கேட்டுள்ளார் என தெரிகிறது, இருந்தாலும் அவரின் கருத்தையும் கேட்போம்

அரச கவி : முதல்வர் ஐயா தமிழகத்திற்கு தேவையானது 1000000 மெகா வாட் மின்சாரம் தான், ஆனா நாம இப்ப செலவழிகிறது 1200000

விவசாய செலவு - 10000

தொழிற்சாலை செலவு - 200000

வீடுகளுக்கு செலவு - 300000

மின் திருட்டு செலவு மிச்ச எல்லா மின்சாரமும் போகுது

மின்துறை அமைச்சர் : யோவ், நீரே திருட்டு தனமா இங்க வந்து திருட்டு மின்சாரம், திருவோட்டு மின்சாரமுன்னு கதை விடுறீர்

முதல்வர் : மின் வெட்டு மன்னிக்கணும் மின்துறை அமைச்சர், உம் வாய் வேட்டை நிறுத்தும், அரச கவி ௬றியது முற்றிலும் உண்மை, நாம் நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கிறது, அதை திருட்டு தனமாக எடுப்பவர்களே மின் தடைக்கு காரணம்

அரச கவி : அதற்கான ஆதாரங்களை இதோ பாருங்கள்

மின்துறை அமைச்சர் : ஆதாரமா, இந்த கும் இருட்டிலே உம் குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது

அரச கவி : அமைச்சரே நீர் அடங்கும் எல்லாம் முதல்வர் பார்த்து கொள்வார் முதல்வர் : இனிமேல் பார்க்க என்ன இருக்கு எல்லாம் தெள்ள தெளிவாக தெரியுது, இனிமேல் அரசகவி தான் மின்துறை அமைச்சர்,இப்போதே உம்மை அமைச்சர் பதவியில் இருந்து எடுத்து விடுகிறேன் .

அரச கவி : அதற்கான கோப்பு இதோ, இதில் உங்கள் கையொப்பம் இடுங்கள்

(கையொப்பம் இட்டவுடன் ..)

மின் துறை அமைச்சர் : அப்ப என் கதி இனிமேல்!!!

முதல்வர் : நீர் மறுபடியும் மொக்கை பதிவு எழுத போகலாம், வாரும் அரச கவி நாம் மின் வேட்டை பற்றி ஆலோசனை செய்வோம்.

அரச கவி : அவர் மட்டுமா, நீருமல்லவா உம் பழைய தொழிலாகிய மாடு மேய்க்கவோ இல்லை மொக்கை பதிவு எழுதவோ போகலாம்

முதல்வர் : என்ன விளையாட்டு இது அரச கவி ?

அரச கவி : இதுவே நிஜம், நீர் கை எழுத்து இட்ட கோப்பு, எனக்கு முதல்வர் பதவி தருவதாகவும், நீர் அரசியலை வெட்டு விலகவும் எழுதிய பதிவு பத்திரம்

முதல்வர் : அமைச்சரே பார்த்தீரா, இருவரையும் இந்த நய வஞ்சக கவி ஏமாற்றி விட்டார்

மின்துறை அமைச்சர்: ஹா..ஹா..ஹா..இந்த ஆப்பு உமக்குத்தான், எனக்கு இல்லை.இதற்க்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதியதே நான்தானே

(மின்சாரமும் வருகிறது)

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.

முதலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
ஒபாமாவிற்கு வாழ்த்துக்கள்.

உலகின் முக்கிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் மக்கள் இன்றைக்கு அமெரிக்காவின் பலம் அதன் ஜனநாயகத்தில் உள்ளது என்பதை நிரூபித்த மாபெரும் நாள்.


அமெரிக்காவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் ஜனநாயக சட்ட விதிகளின் படி அதிபராகலாம் , இதன் படி இந்த நாட்டிற்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஒரு இனத்தை சார்ந்தவரை அதிபராக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி.

ஜான் மெக்கேய்ன் போன்ற நேர்மையாளர், 2000 மாவது ஆண்டிலேயே அதிபர் ஆகியிருக்க வேண்டியவர்.ஆனாலும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியை மனமார பாராட்டிய இவரை மனமார பாராட்டுகிறேன்.

ஒபாமா சொன்னது போல் இந்நாட்டின் பலம் ஆயுதங்களில் இல்லை,அதை விட மிகப்பெரிய ஆயுதம் அமெரிக்காவின் ஜனநாயகம். சட்டமாக இருந்த இந்த ஆயுதம் மக்கள் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டு வந்து இன்றைக்கு அடிமையாக வரப்பட்ட ஒரு இனத்தை சார்ந்தவரை அதிபராக தேர்ந்தெடுத்து அமெரிக்க மக்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும்,மக்களுக்கும் சொல்லும் செய்தி இதுதான்.

பிறந்த நாட்டிலேயே ஒரு இனத்தை சேர்ந்த ஒருவன் உயர் பதவி அடைய முடியாது,இரண்டாம் தர குடிமகன் என்று சட்டமாக வைத்துள்ள இலங்கை போன்ற நாடுகள், அமெரிக்காவின் இந்த ஜனநாயக ஆயுதத்தை இலவசமாக பெற்றுக்கொண்டு மக்களை சமமாக பாவிக்கவேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் ஒரு இனத்தை அழிக்க நினைப்பது எவ்வளவு பெரிய கொடுமை.இந்த இன அழிப்பை செய்யும் அரசுகளே உங்கள் மனங்களில் மாற்றம் வரட்டும்.

ஒபாமாவின் உதவியோடு ஈழத் தமிழர் துயர் தீர்க்கப்பட இந்த மக்கள் சக்தியை வேண்டுவோம்.

Monday, November 3, 2008

வலைஞர் தளபதி ஏன் ஓட்டுப் போடுவ‌து இல்லை?

கொழக்கட்ட கொழக்கட்ட நீ ஏன் வேகலை?
அடுப்பு எரியலை நான் வேகலை!

அடுப்பே அடுப்பே நீ ஏன் எரியலை?
மழை பேஞ்சுது நான் எரியலை!

மழையே மழையே நீ ஏன் பேஞ்சே?
செடிக மொளைக்க நான் பேஞ்சேன்!

செடியே செடியே நீ ஏன் மொளச்சே?
பழ‌வகை தர நான் மொளச்சேன்!

பழமே பழமே நீ ஏன் பழமானே?
பதியுறவன் அழுதான்னு நான் பழமானேன்!

பதியுற பதிவனே, பதியுற பதிவனே நீ ஏன் அழுதே?
வடஅமெரிக்க‌ வலைஞர் தளபதி ஓட்டே போடுறதில்லன்னு நானழுதேன்!

வலைஞர் தளபதி, வலைஞர் தளபதி நீ ஏன் ஓட்டுப் போடுறதில்ல?

???????? ???????????? ????????????????

Saturday, November 1, 2008

வாங்கிக் கட்டுனது...


"தங்கமணி, பாடுற‌த‌க் கொஞ்ச‌ம் நிறுத்துறியா?"

"அர்த்த‌ இராத்திரின்னு கூட‌ப் பாக்காம‌க் கூப்ட்டு பாட‌ச் சொல்வீங்க‌ளே, இப்ப‌ என்னவாம்?"

"வேலையா இருக்கேன்... சீக்கிர‌ம் முடிச்சுட்டு, க‌ஸ்ட‌ம‌ருக்குக் கூப்ப்ட்டு சொல்ல‌ணும், அதான்!"

"அப்ப‌ நான் உங்க‌ளுக்கு முக்கிய‌மாப் ப‌ட‌லை?"

"ப்ளீஸ், தொந்த‌ர‌வு ப‌ண்ணாத‌, நான் ரொம்ப‌ பிஸி இப்ப‌!"

"கேள்விக்கு ப‌தில் சொல்ல துப்பில்லை... பிஸியாமா, பிஸி!"

"?!?!?!"


------------------------------------------------------------------------------------------

(குடும்ப‌த்தோட‌ Barnes & Nobles புஸ்தகக் க‌டையில‌....)

"க‌டையில் எவ்வ‌ள‌வு புக்ஸ் இருக்கு, அதென்ன‌ இங்க‌யே இருக்கிங்க‌? வேறெதுவும் க‌ண்ணுக்குத் தெரிய‌லையா??"

"என்ன‌ தங்கமணி? இங்க‌தான‌ I.T புக்ஸ் இருக்கு, அதான்!"

"ச‌ரி, ச‌ரி, சீக்கிர‌ம் பாத்துட்டு வாங்க‌ போலாம்!"

"ச‌ரி, போலாம் வா!"

"க்ஹும், அவ‌ போற‌ வ‌ரைக்கும் இருந்துட்டு இப்ப போலாங்றீங்க‌?!"

"எவ‌? நான் யாரையுமே பாக்க‌லையே, எங்க‌ அவ‌, பாக்க‌லாம் ஒருக்க‌??"

"ஹ்ம்! பேசாம‌ வாங்க‌!!"



"?!?!?!"

------------------------------------------------------------------------------------------

"அண்ணே, ஒன்னை வெச்சிகினே எனக்கு அந்தலை, சந்தலையெல்லாம் கழண்டு போகுது, நீங்க எப்படிண்ணே ரெண்ட வெச்சிகினு அசராம போய்கினே இருக்கீங்க?"

"யார்றா இவன்? கொசுவைச் சுடறதுக்கு பீரங்கியக் கேக்குறான்.... அது ரொம்பச் சொலபம்டா.... ரெண்டு இருந்தா அவளோட இவளும், இவளடோ அவளும் மல்லுக்கட்டையிலே உன்னோட சிண்டு மிஞ்சும்டா....."

"அப்ப‌டியாண்ணே?... அதான் என் சிண்டு காணாம‌ப் போச்சா??"