Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Monday, November 24, 2008

2030 தில் வருங்கால முதல்வரின் வேட்ப்பாளர் தேர்வு

வ.முதல்வர் :(அறைக்குள் வந்தவுடன், ஆச்சரியமாக) அரச கவி என்ன இவ்வளவு ௬ட்டம், என்னைய பாக்க இம்ம்புட்டு ஆர்வம்மா!!! புல்லரிக்குதுப்பா !!


அரச கவி : ஐயா,குமரியிலே கள்ளு கடையிலே ஆரமிச்ச நம்ம கட்சி, உள்ளூர் டாஸ்மாக் ஆக மாறி,வெளிநாட்டு சரக்கு மாதிரி வளர்ந்து அரபிய குதிரை யாட்டம் நிக்குது


வ.முதல்வர் : நேத்து அடிச்ச கொள்ளு சரக்கு இன்னும் இறங்கலையா?


அரச கவி : நம்ம கட்சியோட வளர்ச்சி அகில உலகத்தையே குடுமியை பிடிச்சு ஒரு ஆட்டு ஆட்டி விட்டது, நம்ம வளர்ச்சியை பார்த்து வேட்பாளர் தேர்வுக்கு அமெரிக்கா,இங்கிலாந்து,ஜப்பான் ல இருந்து எல்லாம் கழகத்திலே போட்டியிட விண்ணப்பம் வந்திருக்கு

வா.முதல்வர் : ஆகா, ஒரு மனுஷன் எத்தனி ஊருக்கு தான் தலைவர் ஆக முடியும்,என் புகழ் நமிதாவை விட வேகமா பரவுதே,எல்லோருடைய கோரிக்கையும் நிறைவேத்தி விடலாம்.

அரச கவி : வேட்ப்பாளர் பட்டியல் தயாரா இருக்கு, நீங்க ஒரு தடவை பாத்துட்டு கை நாட்டு போட்டா அறிவிப்பை வெளியிடலாம்

வ.முதல்வர் : கை நாட்டு கேட்டு என் தலையிலே துண்டை போடணுமுன்னு ஒரு ௬ட்டம்மா அலையுரீங்கன்னு தெரியுது, முதல்ல வேட்ப்பாளர்களை பாக்கலாம்

அரச கவி : வருங்கால இந்தியாவின் தூண்களே எல்லோரும் உங்க முகர கட்டையை தலைவரிடம் காட்டுங்க

(மக்கள் ௬ட்டம் வழக்கம் போல, வா.மு வை கண்டுக்காம எல்லோரும் வாசலை பாத்து இருகாங்க)

வ.முதல்வர் : என்ன அரச கவி, எல்லோருக்கும் மாலை கண் நோயா, திண்ணையை பாக்கிறமாதிரி விட்டத்தை பார்க்கிறார்கள். ஆமா எல்லோரும் எதுக்கு வாசலை பாத்து இருக்காங்க

அரச கவி :உங்க அனல் மின் நிலக்கரி பேச்சை ஆரமிங்க தலைவரே எல்லோரும் சரி ஆகிடுவாங்க.

வ.முதல்வர் : இங்கு அலை கடலென திரண்டு வந்திருக்கும் கழக கண்மணிகளே, கடல் அலை ஓய்ந்தாலும் உங்கள் அன்பு அலை ஓயாது என்பதை நிருபித்து விட்டீர்கள்.

(இதற்குள் ௬ட்டத்தில் இருந்த அனைவரும் நாற்காலியில் இருந்து எழுந்து, விழுந்தடித்து ஓடுகிறார்கள், "என்னை விட்டு விடு.." "என்னை விட்டு விடு.." என்று கதறி கொண்டு,எப்படி இந்த பதிவை படிச்சு புட்டு ஓடுவாங்களே அதே மாதிரி )

வ.முதல்வர் : அரச கவி என்ன நடக்குது, வழக்கம் போல நீர் ஏதும் சதி பண்ணிவிட்டீரா, ஏன் எல்லோரும் தெறிச்சு ஓடுறாங்க?

(அரச கவி தலை சொரிகிறார்)

வ.முதல்வர் : இல்லாத இடத்திலே என்னத்தை தேடுறீங்க

அரச கவி :தலைவரே, மக்களை ௬ட்டத்துக்கு வரவழைக்க கவர்ச்சி நடிகை "பல்க்" பமிலா நம்ம கட்சியிலே சேருதாங்கன்னு ஒரு ரகசிய அறிவிப்பை நாடு முழுவதும் வெளியிட்டேன், அது நல்லா வேலை செஞ்சு இருக்கு

வா.முதல்வர் :மொக்கை பிரச்சனைக்கே கட்டு சோறு கட்டிக்கிட்டு முனு நாளைக்கு முன்னாடி வருவீங்க, இந்த மாதிரி சர்வதேச பிரச்சனையை மருந்துக்கு ௬ட கேட்கிறது கிடையாது.இப்ப "பல்க்" பமிலாவை எங்கேன்னு போய் தேடுவேன்?

அரச கவி : அவங்க புது காதலரோட இன்ப சுற்றுலா போய் இருகாங்க.

வா.முதல்வர் : நீர் குசு..குசு படிக்கிறதை இன்னும் விடலையா?

அரச கவி : பழக்க தோஷம் தலைவரே.. மாத்த முடியலை, ஏதாவது யோசனை பண்ணி ௬ட்டத்தை நம்ம பக்கம் திருப்புங்க, உங்களை நம்பி தானே எங்க பொழைப்பு ஓடுது.

வா.முதல்வர் : உனக்கு மட்டுமா, அந்த இடி விழுந்த இருளான்டிக்கும் என்னை வச்சு தானே பொழப்பு ஓடுது.

அரச கவி : யோசிக்க நேரமில்லை, சீக்கிரம் ராணி தேனியை ௬ட்டிவிட்டு வாங்க, இல்லை வேட்ப்பாளர்களையும் நாம வழக்கம் போல கடன் வாங்க வேண்டிய வரும்.

வா.முதல்வர் : என் ரத்த நரம்பின் ரத்தங்களே, "பலக்" பமிலா எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறார்கள் .

(உடனே ௬ட்டம் எப்போதோ வார காவிரி வெள்ளம் மாதிரி திபு..திபு ன்னு உள்ளே ஓடி வாராங்க)

அரச கவி : ஐயா நீங்க உங்க பேரை நீங்க இனிமேல முக்கால முதல்வர் ன்னு மாத்தி விடலாம் .

வா.முதல்வர் : எப்படி? ( இல்லாத மிசையை தடவி விடுறாரு).விஷயம் என்னனா, நடிகை யோட நாய்க்கு தும்மல் வந்து ஒரே இருமலாம், அதனாலே "பலக்" பமிலா அதை மருத்துவ மனைக்கு ௬ட்டிட்டு போய் இருகாங்க, மக்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி இருகாங்க.

(முதல் பாதி பேசின முடிஞ்ச உடனே, ஹிந்தி படம் பாக்க பால் தாக்கரே ஓசியிலே ௬ப்பிடுற மாதிரி தலை தெறிக்க ஓடிட்டாங்க)

அரச கவி : வருங்கால முதல்வர் மீண்டும் வெத்து முதல்வர் ஆக்கி புட்டாங்களே (ஒப்பாரி வைக்க ஆரமிச்சு புட்டாரு அரச கவி,என்ன செய்வதுன்னு தெரியாம திருவிழாவிலே காணாம போன கை புள்ள மாதிரி வா.மு முழிக்கிறாரு)

வா.முதல்வர் : மக்கள் எல்லோரும் எங்கே போய்டாங்க?

அரச கவி : அதை கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு உண்டு, யாரவது இதை படிச்சா போட்டியிலே கலந்து கோங்க, உங்க பதிலும், இடி விழுந்த இருளாண்டி பதிலும் ஒன்னா இருந்தா உங்களுக்கு தான் பரிசு, வா.மு அவருடைய சொந்த பணத்திலே இருந்து கொடுப்பார்.(சொல்லி விட்டு வா.மு வின் தலையில் துண்டை போடுகிறார்)

Wednesday, November 12, 2008

2030 தில் காவிரி பிரச்சனை

கர்நாடக முதல்வர் : வணக்கம் ..வணக்கம் அண்ணாச்சி, உன்கேளை பாத்ததிலே எனக்கு ரெம்ப சந்தோசம்

தமிழக நீர்ப்பாசன அமைச்சர் : பத்திங்களா. இவரு குசும்பை, தமிழ்ல பேசுனா நாம ஏதும் கேள்வி கேட்க மாட்டமுன்னு

தமிழக முதல்வர் : இரும், எல்லாம் நான் பார்த்து கொள்கிறான்.(க.முதல்வரை பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு) ஐயா தமிழகத்திலே விவசாயம் வரலாறு ஆகி 10 வருஷம் ஆச்சு, மறுபடியும் தமிழ் நாட்டுல விவசாயம் பண்ண முயற்சி எடுக்கிறோம்.

க.முதல்வர் : (கையை தட்டி கொண்டு) அருமை..அருமை, அப்ப நிறைய வரலாற்று ஆராச்சியாளர்கள் உருவாகிட்டாங்கனு சொல்லுங்க

நீ.அமைச்சர் : ஐயா நீங்க எங்களை புகழுறீங்களா? நக்கல் பண்ணுரீங்கலானு தெரியலையே?

த.முதல்வர் : முதல்வர் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்?

க.முதல்வர் : ஐயா காவிரி எங்களுக்கே சொந்தம்,அங்கேயிருந்து ஒரு சொட்டு தண்ணி ௬ட கிடைக்காது யாருக்கும், எதோ பிரதம மந்திரி சொன்னாருன்னு வந்தேன் அவ்வளவு தான்.

நீ.அமைச்சர் : ஐயா ஒரு தாய் வயத்து புள்ளை யில் ஒரு புள்ள பசியிலே செத்து மடியுறதுதான் தர்மமா?

(க.முதல்வர் விசில் அடித்து கொண்டு, கை தட்டுகிறார்)

நீ.அமைச்சர் : பாத்திங்களா, நான் போட்ட போடு எப்படி வேலை செய்யுது

க.முதல்வர் : நீங்க, நல்லா வசனம் பேசுறீங்க, தமிழ் சினிமாவிலே நல்ல எதிர் காலம் இருக்கு, கை தட்டு விசில் எல்லாம் அதுக்கு தான்

நீ.அமைச்சர் :அட பாவி,நான் வயது எரிச்சலில் பேசிகிட்டு இருக்கேன், நீ வகை தெரியாம பேசுற

க.முதல்வர் : இன்னைக்கு என்ன பேசனுமுன்னு நான் எல்லாம் நேத்தே அனைத்து கட்சி ௬ட்டத்துல முடிவு பண்ணியாச்சு, நீங்க அனைத்து கட்சி ௬ட்டம்னுனா எல்லோரும் தெறிச்சு ஓடி போறீங்க.

நீ.அமைச்சர் : இவருக்கு நாக்குல சனி நின்னு தலைய விரிச்சு ஆடுது முதல்வரே

த.முதல்வர் : நீங்க ஒரு மக்கள் தலைவர் மாதிரி பேசாம, வாட்லாறு நாகராஜ் புள்ள மாதிரி பேசுறீங்க, எல்லா மாநிலத்திலேயும் மக்கள் தான் இருக்காங்க,நதி,காற்று,வானம், பூமி இதெல்லாம் சொந்தம் கொண்டாட ௬டாது. ஐயா நாங்க உங்க உரிமையை பறிக்க வரலை,உங்க உரிமையிலே எங்களுக்கு வேண்டிய பங்கை கேட்கிறோம்

(உடனே கர்நாடக நீர் பாசன அமைச்சர், கை தட்டி,விசில் அடி, சட்ட பையிலே வச்ச பேப்பர் எல்லாம் அள்ளி வீசி எறியுராறு)

நீ.அமைச்சர் : ஒரு முடிவோட தான் இருக்காங்க போல தெரியுது, என்ன மாதிரி குத்தாட்டம் போடுறான் பாருங்க, நீங்க சூப்பர் ஸ்டார் ஆகிடுவீங்கனு சொல்லுவான் போல

கர்நாடக நீர் பாசன அமைச்சர் : இந்த வசனத்தை எந்த படத்திலே வேணுமுனாலும் வைக்கல்லாம்

த.முதல்வர் : ஐயா நாம எல்லாரும் இந்தியாவுக்கு கிழே தானே இருக்கிறோம், பகுந்து கொடுத்து நாம எல்லாரும் நல்ல வாழனுமுனு நான் நினைக்கிறேன் .

க.முதல்வர் : நான் கர்நாடகத்திற்கு கிழே வரேன், நீங்க இந்தியாவுக்கு கிழே வந்தால் நான் என்ன செய்ய முடியும்?

நீ.அமைச்சர் : அடி.. உன் மூஞ்சுல என் வலக்கைய வைக்க (அப்படி சொல்லிட்டு க.முதல்வர் சட்டைய பிடிச்சு விட்டார்)

த.முதல்வர் : அமைச்சர் அவரு சட்டைய பிடிக்காதேய்.. சட்டைய பிடிக்காதேய்..

நீ.அமைச்சர் : மன்னிச்சுருங்க, ஆத்திரத்தை அடக்க முடியலை

த.முதல்வர் : அமைச்சரே, நான் சொன்ன அர்த்தம் வேற, அவரு சட்டையை பிடிச்சா, செவுட்டுல அடிக்கமுடியாது

நீ.அமைச்சர் : ஒ.. அப்படி வாறியளா, இப்ப பாருங்க

(பாளர்..பாளர்.. ன்னு க.முதல்வருக்கு அடி, த.முதல்வர் கை சும்மா இருக்குன்னு கர்நாடக நீர் பாசன அமைச்சரை ஒரு வாங்கு வாங்கிட்டாரு)

க.முதல்வர் : அண்ணா என்னை விட்டுடுங்க, நாமே எல்லாம் ஒரு தாய் புள்ளை, நான் உங்க தம்பி

நீ.அமைச்சர் : இவ்வளவு நேரமா நாங்க இதை தானே சொன்னோம், வாயை கொடுத்து உடம்பை புண்ணாகிட்டீங்களே

த.முதல்வர் : மயிலே மயிலே இறகு போடுன்னு கேட்டாச்சு, அம்மா தாயே ன்னு கேட்டாச்சு, எதுக்கும் வசத்துக்கு வராத உனக்கு
நீ.அமைச்சர் : இந்தா பத்திரம், தமிழகத்துக்கு பாதி அளவு தண்ணீர் திறந்து விடுவேன்னு எழுதி இருக்கு, கை எழுத்து போடு

த.முதல்வர் : கை எழுத்து போடலை, உன் குடலை உருவிடுவேன் ( மறைத்து வச்சு இருந்த திருப்பாச்சி அருவாளை எடுத்து காட்டுறாரு). எவனாவது தடுக்க வந்தால், உங்களுக்கும் இதேதான்

க.முதல்வர் : கை எழுத்து போட்டு விடுறேன் அண்ணா, கொடுங்க ( பத்திரத்தில் கை எழுது போட்டு, அதை த.முதல்வரிடம் கொடுக்கிறார்)

த.முதல்வர் : வெளியே போய், பிரச்சனையை பேசி தீத்திடோம்னு பேட்டி கொடுக்கணும், ஓடிப்போ ..

க.முதல்வர் : (சட்டை, வேஷ்டி எல்லாம் சட்ட சபையிலே சண்டை போட்ட மாதிரி கிழிச்சு போட்டுட்டு) என்னை என்ன கேணயன்னு நினைச்சீங்களா?இங்க நடந்த எல்லாத்தையும் திரட்டு தனமா வீடியோ எடுத்தாச்சு, அது லைவ் ஓடிகிட்டு இருக்கு, உங்களுக்கு சங்கு தான்
(பின்னாடி நின்னு கிட்டு இருந்த க.தலைமை செயலர் கை கட்டி, விசில் அடித்து)

க.தலைமை செயலர் : இது தான் நெத்தி அடி ..

த.முதல்வர் : அரச கவி, உன் விக்கை எடுத்து போட்டு மேக் அப் கலைச்சு போடு ( இருவரும் தங்களது மேக் அப் யை கலைத்து போடு கிறார்கள்)

க.முதல்வர் : யார் நீங்க, எப்படி இங்க வந்தீங்க..(த.முதல்வர் வேடத்தில் இருந்த வருங்கால முதல்வர்)

வருங்கால முதல்வர் : நான் வருங்கால முதல்வர், இது எங்க அரச கவி

அரச கவி : ஐயா, எவ்வளவோ யோசிக்கோம், இதையும் யோசிக்க மாட்டோமா? கிராபிக்ஸ் ல நாங்க அடிச்சதை எல்லாம் நீங்க அடிச்சதா மாத்தி லைவ் ஓடிகிட்டு இருக்கு, வெளியே போனால் உனக்கு தான் சங்கு

(ஊஊஊஉ..ஊஊஊஊஉ)

க.முதல்வர் : நல்ல திட்டம் போட்டு என்னை எமாத்திடீன்களே.

அரச கவி : இந்த மாதிரி இத்துப்போன திட்டம் எல்லாம் போடுறதுக்குனே, ஒரு இடி விழுந்த இருளாண்டி இருக்கான், அவன் தான் இதுக்கு கதை,திரை கதை,வசனம் எழுதினது

(மறு நாள், 356 வது பிரிவை பயன் படுத்தி க.சட்டசபை கலைக்க பட்டது, காவிரியிலே தண்ணி திறந்து விடப்பட்டது, தமிழகம் எங்கும் முதல்வர் வாழ்க ..காவிரி கண்ட நாயகன் வாழ்க என வாழ்த்து கோஷங்கள்)