Thursday, February 5, 2009

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இலங்கையில் தற்போது நடைபெறும் போரை, உலக நாடுகள் ,இலங்கை மற்றும் விடுதலைப்புலிகள் நிறுத்துவார்களா என்று தெரியவில்லை, தற்போது நடைபெறும் சண்டை எங்களைப்போன்ற இந்தியத்தமிழர்களின் தூக்கத்தை கெடுக்கிறது,இதயம் வலிக்கிறது, இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்யமுடியும் என்று தோன்றவில்லை.

2.5 லட்சம் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்குமே உள்ளது, ஆனால் சொந்த மக்களை கொள்ளும் இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த போரை நிறுத்த அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் அறிவுப்பூர்வமாக பிரச்சினையை எடுத்துச்செல்லவேண்டும்.நட்புறவை உருவாக்கிகொள்ளவேண்டும்.உலகெங்கிலும் துரத்தப்பட்ட யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு அமைத்துக்கொண்டது அவர்களது அறிவினாலும் வல்லரசுகளின் நட்பினாலும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நடக்கும் போரினால் மொத்தத்தில் அங்கே அழிக்கப்படுவது தமிழினம். கிட்டத்தட்ட 25% சதவீதம் இருந்த தமிழர்கள் இப்போது குறைந்து 15% சதவீதம் ஆகிவிட்டனர்.நான் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும் மிகவும் அவசியமானதென்றே கருதுகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

தமிழர் பிரச்சினை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. நடக்கும் இன அழிப்பை தடுக்கத்தான் நம்மால் முடியவில்லை,ஆனால் இனத்தையாவது பெருக்குங்கள்.அவர்களை நல்ல கல்வி கொடுத்து அறிவு சார் சமூகமாக வளருங்கள்.உலகம் ஒருநாள் நல்ல தீர்வு தரும் என நம்புவோம்.

Monday, February 2, 2009

இது லண்டன் மாநகர தண்டோரா!

வணக்கம்!
வணக்கம்!! வணக்கம்!!!

இதன்மூலம் த்மிழ்ப் பதிவுலகத்தில் உள்ள யாவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், லண்டன் மாநகரத்தில் இருந்து கொண்டு, விலை போகும், விலை போகாத பதிவுகள்; கல்லா கட்டும், கட்டாத கடைகள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல், எல்லோரையும் சரி சமமாகப் பாவித்து, சிரத்தையாகவும், காலாய்த்தலாகவும், எள்ளலாகவும் பின்னூட்டங்களை வாரி வழங்கி மகத்தான சேவை செய்து வந்தார் வலைஞர் கபீஷ் அவர்கள்.

அவர் ஆடிக்கு ஒரு பதிவும், அமாவாசைக்கு ஒரு பதிவும் பதிந்து வந்த காரணத்தினாலோ, அல்லது பின்னூட்ட சுதியில் சுணக்கம் ஏற்பட்ட காரணத்தினாலோ என்னவோ, வலையுலக விரோதிகள் அவ்ரது வலையகத்தை ஆட்டயப் போட்டு விட்டார்கள். ஆகவே, வேறொரு வலையகம் அமைத்துக் கொண்டு வரும் வரையிலும் உங்களையெல்லாம் வெகு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கிறார்! அறிவிக்கிறார்!! அறிவிக்கிறார்!!!