Friday, March 12, 2010

அமெரிக்கா: செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் பதிவர் சந்திப்புக்கான அழைப்பு


Florida மற்றும் Boston பதிவர் சந்திப்பு முடிச்ச கையோட, Washington D.C பதிவர் சந்திப்புக்கான ஆயத்த வேலைகள் மக்களே!


செந்தமிழ்க் காவலர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிறையப் பதிவர்கள் விழா அரங்கில் குழும இருக்கிறார்கள். எனவே வர வாய்ப்பு இருப்போர், அவசியம் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

=====================================



புறநானூற்றுக் கருத்தரங்கம்

செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா

தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு பிறபகல், கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்


1.30 - 2.00
அளவளாவுதல்
2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து


2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்

2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்
முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ

2.35-3.00
புறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம்
முனைவர் இர.பிரபாகரன்
3.00-3.25
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்
உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.

3.25-3.40
புறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார்
முனைவர் இ.மதியழகி

3.40-4.00
தேனீர் இடைவேளை

4.00-4.15
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
முனைவர் அரசு செல்லையா அவர்கள்

4.15-4.30

தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்
பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்

4.30-5.30
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)

கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்
பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்
இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்

5.30-5.35
நன்றி நவிலல்
திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்



அனைவரும் வருக!
ஆதரவு தருக!!

1 comment:

NO said...

எல்லோர் கவனத்திற்கும்
---------------------------------------------
தன்னுடைய கடவுளை அவமானப்படுத்துகிறார்கள் என்று எண்ணி தன்னின் எதிர்ப்பை எழுத்துகளில் காண்பித்தால் அது மதவாதம்! அதுவும் இந்த்துக்கள் செய்தால் அது இந்துதுவம்!

அவமானம் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் அந்த படங்களை மறுபடியும் தன்னின் தளங்களில் போட்டு இவர் இது மட்டும்தானே செய்தார், இதில் என்ன தவறு, இதை கண்டித்து மறுப்பு தெரிவிப்பவறேல்லாம் இந்து மத வாதி, இந்து பாசிஸ்டு என்று வேறு விளாசல்கள்!
சரி. தன்னுடையய மதத்தை அவமானப்படுத்தினார் ஒருவர் என்று செய்யப்பட்ட ஒரு காரியத்தை வைத்து (இந்த விடயத்தில் ஒரு நிர்வாண படம் வரையப்பட்டது, அது பலராலும் மறு பதிவு செய்யப்படுகிறது) பதிவு போட்டாலோ பின்னூட்டம் போட்டாலோ அது இந்துத்துவவாதம்.

ஒப்புக்கொள்கிறோம்!
இதை தற்ச்சமயம் ஒரு பதிவு போட்டு சொன்னது திரு செந்தழில் இரவி! அதாவது, இவரின் கொள்கைப்படி தன்னுடைய கடவுளாரை தூக்கிப்பிடித்தால் அது மதத்துவம்! அதாவது, கடவுள் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும், நம்பும் ஒரு உருவத்தை நிர்வாணமாக வரைந்தாலும் கூடஅதை எதிர்த்தோ விமர்சித்தோ பேசினால் அது இந்துத்துவம்!
இதை கொஞ்சம் கவனியுங்கள்!
புதுச்சேரி இரா சுகுமாரன் என்பவர் 2006 ஆம் வருடம் "தேவாலயங்களில் இயேசு இல்லை" என்ற ஒரு பதிவை அவரின் தளத்தில் எழுதினர்!!
http://rajasugumaran.blogspot.com/2006/04/blog-post_20.html

அதில் இயேசு கிருத்துவைப்பற்றி ஒரு விமர்சனமும் இருக்கிறது! அதில் இயேசு ஒரு மத போதகரோ, காவலரோ இல்லை மற்றும் கிருத்துவ மதம் எந்த இயேசுவின் அங்கீகாரம் பெற்றதும் அல்ல என்று மட்டும் நில்லாது, இயேசு ஒரு நாத்திகர் என்று சொல்ல விழைகிறது! கவனிக்கவேண்டிய விடயம் இப்பொழுது நான் எழுதுவது இயேசு பற்றிய விமர்சனம் அல்ல. அதில் எனக்கு ஆர்வமும் அல்ல. மாறாக அந்த பதிவிற்கு வந்த வந்த ஒரு எதிர்ப்பை
பற்றிதான் இது!
தான் வணகும் கடவுளாரை பற்றி யாரவது விமர்சனம் செய்தால் அதை கோபம்கொண்டு மறுப்பது இயல்புதான் என்ற நோக்கில் ஒரு சிலர் எழுதிய பின்னூட்டங்களை படித்ததில் ஒருவரின் பின்னூட்டம் பளீரென்று நம்மை அறைகிறது!
அந்த பின்னூட்டத்தை முதலில் கவனிப்போம்!

"அன்பை போதித்தவரை இழி சொல் கூற வேண்டாம்..நீங்களும் இது போன்ற உபயோகமற்ற பதிவுகள் போட வேண்டாம்..."

அதாவது தன் கடவுளை இழிசொல் கொண்டு தாக்கவேண்டாம் மேலும் இந்த மாதிரி குப்பையான பதிவுகளை எழுதவேண்டாம் என்று இந்த பின்னூட்டக்காரர் ஆணித்தரமாக சொல்லுகிறார்!

OK, தவறில்லை என்றுதான் முதலில் சொல்லத்தோன்றுகிறது! Afterall he is defending his own beliefs and Gods!

திருமதி கிருபா நந்தினியும் இதேபோல்தான் ஒருவரின் சரஸ்வதி பற்றிய பதிவிற்கு பதில் போட்டார்கள்! என்ன பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு பதிவையே போட்டு தன கோபத்தை வெளிப்படுத்தினார்! அது அவர் இஷ்டம். அவரின் நம்பிக்கையை சாடிய ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடினால் அவருக்கு வந்தது கோபம்! ஆனால் அவருக்கு இப்பொழுது கொடுக்கப்படும் பெயரோ, இந்து மதவாதி!!! அவருக்கு மட்டும் அல்ல, ஹுசைனை கண்டித்து எழுதிய அத்துணை மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட பெயர் "இந்துத்துவவாதி"!!!

அப்படியானால் அதேபோல தன் கிருத்துவ கடவுளை விமர்சித்ததால் கோபம்கொண்டு பின்னூட்டம் போட்டவரை என்னவென்று சொல்லலாம் ??????????

கிருத்துவவாதி அல்லது கிருத்துவ மதவாதி, கிருத்துவ பாசிஸ்டு !!!!!!!!!!!

அந்த பின்னூட்டத்தை போட்டவர் திரு செந்தேழில் ரவி அவர்கள்! இது நடந்தது
Monday, April 24, 2006 4:18:00 PM
அதாவது சரஸ்வத்தியை களங்க படுத்தி பேசுவதை எதிர்த்தால் அது இந்து மதவாதம்! சொல்லுவது திரு ரவி! அதே அவர் தன் கடவுளாரை தூக்கி பிடித்தால் அது பகுத்தறிவு!!!!

வெட்கக்கேடு

நன்றி