Saturday, September 19, 2009

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் கைது எதிரொலி: ஒரு அண்டா பிரியாணி காலி

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டதின் விளைவாக, அவருக்கு அண்டாக் கணக்கில் பிரியாணி ஊட்டப்பட்டு வருவது தெரிந்ததே!

அதை முன்னிட்டு, வருங்கால முதல்வர்கள் ஒன்று கூடி, கு.ஜ.மு.க செயலாளர் கைதுக்கு சரியான பாடம் புகட்டுவது என்றும், வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சரியான தலைவலியைக் கொடுப்பது எனவும், வலையுலக மாவீரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் மாவீரன் அவர்கள் அனைவரும் அமைதி காத்து, எழுத்துப் பணிக்கு எந்தத் தொய்வும் ஏற்படா வண்ணம் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; ஆனால் மீண்டும் தர்மம் வென்றே தீரும்! கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் வாழ்க! வாழ்க!!

6 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கழகத்தின் காவல் தெய்வம் கைதா!?

அய்யகோ!

போட்டுக் கொடுக்க ஆள் தயாராக இருந்தால்,

நாங்கள் டீக்குடிக்கத் தயாராக இருக்கிறோம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கழக பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, அன்புக்கட்டளைக்கிணங்க பேருந்துகளை கொளுத்த வேண்டாம் என்றும், கடைகளை அடித்து உடைக்க வேண்டாம் என்றும், சாலைகளை மறிக்க வேண்டாம் என்றும் கழகத்தின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளாகிய தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தீக்குளித்து உயிர் விடும் தொண்டர்களுக்கு தலைவர் விடுதலையான பிறகு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் கருணை உதவித்தொகை வழங்குவார். அதனால்...

Unknown said...

நம் தலைவர் அசைவ விரும்பி என்று தெரிந்தும் அவருக்கு சைவ பிரியாணி மட்டுமே அளிக்கும் காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.

பழமைபேசி said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கழகத்தின் காவல் தெய்வம் கைதா!?

அய்யகோ!

போட்டுக் கொடுக்க ஆள் தயாராக இருந்தால்,

நாங்கள் டீக்குடிக்கத் தயாராக இருக்கிறோம்.
//

சிங்கப்பூர்ல எந்த வண்டியும் ஓடக் கூடாதுங்க.... ஆமா சொல்லிப்புட்டேன்!

பழமைபேசி said...

//முகிலன் said...
நம் தலைவர் அசைவ விரும்பி என்று தெரிந்தும் அவருக்கு சைவ பிரியாணி மட்டுமே அளிக்கும் காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
//

ஓ இது வேறயா? அவனுக ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இல்லை போல இருக்கே?